எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: அரசு கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும். இக்குறிக்கோளை எட்ட, பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மை புரட்சியை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கும், 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் பால் உற்பத்தி குறைவாக உள்ள பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழும் ஏழைக்குடும்பங்களுக்கு ஜெர்சி போன்ற 12,000 கலப்பின கறவை மாடுகள் வழங்கப்படும். இந்த திருத்த வரவு, செலவுத்திட்ட மதிப்பீட்டில், இதற்காக 56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கறவை மாடுகள் வழங்கப்படும் இக்கிராமங்களில் பிற அடிப்படைக் கட்டமைப்புகளான பால் கூட்டுறவு சங்கங்கள், பால் சேகரிப்புத் தடங்கள் ஏற்படுத்தப்படும். இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்த குடும்பங்களைச்சேர்ந்த மகளிரை கொண்டு 4,000 பால் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்படும்.
மாநிலத்தின் ஒரு நாள் மொத்த பால் உற்பத்தியான 158 இலட்சம் லிட்டரில் ஆவின் நிறுவனம் மூலம் 20 இலட்சம் லிட்டர் பால் மட்டுமே கையாளப்படுகிறது. ஆவின் நிறுவனம், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளை பால்வளம் குறைவாக உள்ள பகுதிகளில் பலப்படுத்துவதன் மூலம் பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கமாகும்.
கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்தி பயனாளிகள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்ல கூடுதலாக 155 நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள் ஆவின் நிறுவனத்தால் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பத்து கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ மையம் செயல்படுவது உறுதி செய்யப்படும். ஆவின் நிறுவனம், மேலும 100 கூடுதல் பால் கொள்முதல் மையங்களை 32.50 கோடி ரூபாய் செலவில் நிறுவும். 5 ஆயிரம் லிட்டருக்கு கூடுதலாக கொள்ளளவு திறன் கொண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் குளிரூட்டும் வசதி, மதிப்பு கூட்டு வசதிகளுடன் நவீனப்படுத்தப்படும். 2011-2012 ஆண்டில், ஆவின் நிறுவனம் மூலம், மேலும் 10 பால் பண்ணைகள் இந்த முறையில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் 385 கால்நடை துணை மையங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். விரிவாக்க வசதிகளை வலுப்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டில், நபார்டு வங்கியின் ஊரக கட்டமைப்பு வளர்ச்சி நிதியிலிருந்து 122.24 கோடி ரூபாய் செலவிடப்படும். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும் ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி நடப்பாண்டில் தொடங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை மையம் ஒன்று ஓசூரில் ஏற்படுத்தப்படும்.
முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் இந்த அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நான்கு வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகளை இலவசமாக வழங்கும். 2011-2012 ஆம் ஆண்டு, ஒரு இலட்சம் குடும்பங்கள் தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை இத்திட்டத்தின் கீழ் பெற்று பயனடைவர். இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில், 135 கோடி ரூபாய் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1.5 இலட்சம் குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளின் முடிவில் ஏழு இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள். இது ஊரக பகுதிகளிலுள்ள குடும்பங்களில் சுமார் 10 விழுக்காடாகும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 15 ஆம் நாள் அன்று ஏழை குடும்பங்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டத்துடன் இந்த திட்டமும் தொடங்கிவைக்கப்படும்.
இந்த அரசு, தீவன உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை தொடங்கும். நடப்பு ஆண்டில் 24 ஆயிரம் ஏக்கரில் குறிப்பிட்ட பசுந்தீவன வளர்ப்பிற்கு மானியம் வழங்கப்படும். நுண்ணீர் பாசனத் திட்டம், தீவனப் வளர்ப்பிற்கும் விரிவுப்படுத்தப்படும். நுண்ணீர், பாசன தெளிப்பான்கள், வேகத்தெளிப்பான்கள் போன்றவற்றை பயன்படுத்த சிறு குறு விவசாயிகளுக்கு 100 விழுக்காடு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். அவற்றோடு, தீவன சேதாரத்தை குறைக்க, 50 விழுக்காடு மானியத்தில் 5 ஆயிரம் புல்வெட்டிகளு, 5 ஆயிரம் நறுக்கும் இயந்திரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்தகைய பசுந்தீவன உற்பத்தித் திட்ட மானியத்திற்கென, அரசு, 20 கோடி ரூபாயை இந்த ஆண்டு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.