எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொஹாலி, மார்ச் 4 - உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய நெதர்லாந்து அணி பரிதாப தோல்வியை சந்தித்தது. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் 16 வது போட்டி நேற்று சண்டிகர் மாநிலம் மொஹாலியில் பகல் ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் பி பிரிவில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க அணியுடன், நெதர்லாந்து அணி மோதியது. டாஸ் வென்ற நெதர்லாந்து கேப்டன் போரன், தென் ஆப்பிரிக்க அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்தில் நிதானமாக ஆடியது. துவக்க ஆட்டக்காரர்கள் ஹசீம் ஆம்லா மற்றும் கிரீமி ஸ்மித் ஆகியோர் நல்ல துவக்கத்தை தந்தனர். அணியின் எண்ணிக்கை 51 ஐ எட்டியபோது, 20 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், லூட்ஸின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்ததாக களமிறங்கிய காலிஸ் 2 ரன்களை மட்டும் எடுத்த நிலையில் டென் டோயிஸ்சாட் பந்தில் விக்கெட் கீப்பர் பரேசியினால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரை அடுத்து டிவில்லியர்ஸ், ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் நெதர்லாந்து வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டனர். ஆனால் அனுபவ வீரர்களான ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸ் நங்கூரமிட்டு ஆடினர். டிவில்லியர்ஸ் 88 பந்துகளில் சதமடித்தார். இவரை அடுத்து ஆம்லா 121 பந்துகளில் சதமடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணியின் ரன் எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. அணியின் எண்ணிக்கை 279 ஐ அடைந்தபோது 113 ரன்களை அடித்திருந்த ஆம்லா, டென் டோயிஸ்சாட் பந்தில் கூப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து சிறிது நேரத்தில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டிவில்லியர்ஸ் ரன் அவுட் ஆனார். இவர் எடுத்த ரன்கள் 134. அடுத்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் டுமினியின் அதிரடி வாணவேடிக்கையால் தென் ஆப்பிரிக்காவின் ரன் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. டுமினி 15 பந்துகளில் 40 ரன்களை குவித்தார். இதில் 2 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் இருந்தன. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களை குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ப்ளீசிஸ் ஆட்டமிழக்காமல் 18 ரன்களையும், வான்விக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நெதர்லாந்து தரப்பில் டென் டோயிஸ்சாட் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லூட்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
நெதர்லாந்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சோபிக்கவில்லை. துவக்க வீரர் கெர்வீஜீ, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸின் பந்தில் காட் அண்டு போல்டு முறையில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 26. அடுத்ததாக களமிறங்கிய கூப்பரும் நீண்டநேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 9 ரன்களை எடுத்திருந்த கூப்பர், காலிசின் பந்தில் ஸ்டெயினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜுய்டரென்ட் களமிறங்கினார். இவரும் துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பரேசியும் இணைந்து சேர்த்த 35 ரன்களே நெதர்லாந்து அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களாகும். 21.3 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 81 ஆக இருந்தபோது 15 ரன்கள் எடுத்திருந்த ஜுய்டரெண்ட், பீட்டர்சன் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய ஒரே வீரரான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பரேசியும் 44 ரன்களை எடுத்திருந்தபோது டுமினியின் பந்தில் அவுட்டானார். அப்போது நெதர்லாந்து அணி 22.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்திருந்தது. இதையடுத்து நெதர்லாந்து வீரர்கள் சீட்டுக்கட்டுகள் சரிவதுபோல அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 232 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் படுதோல்வி அடைந்தது நெதர்லாந்து. தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும், காலிஸ், பீட்டர்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டெயின், டுமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 98 பந்துகளில் 134 ரன்களை குவித்த டிவில்லியர்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.