எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம்,ஆக.13 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 வது அறையை திறக்க சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு ஆய்வுக்கு சென்றது. இதற்கு மன்னர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா எதிர்ப்பு தெரிவித்தார். 6 வது அறையை திறக்கும் முன்பு தேவ பிரசன்னம் நடத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி தேவ பிரசன்னம் பார்க்கப்பட்டது. தந்திரிகள் நாராயணரெங்கப்பட், பத்மநாப ஷர்மா ஆகியோர் தலைமையில் நடந்த தேவ பிரசன்னத்தில் அறையை திறப்பதால் ஆபத்துக்கள் ஏற்படும் எனத் தெரிய வந்தது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட நகைகள் அனைத்துமே தெய்வீக தன்மை கொண்டவை. இறைவனுக்கு மட்டுமே சொந்தமானது. அதை தொடுவது கூட பாவம். அப்படிப்பட்ட தங்க, வைர நகைகளை படம் பிடிப்பதும், மதிப்பிடுவதும் காட்சிக்கு வைப்பதும் பெரும் பாவமாகும். திறக்கப்படாத 6 வது ரகசிய அறையில் ஒரு மூலவர் சிலை இருக்கிறது. பத்மநாபசுவாமி கோயில் அமைக்கப்படுவதற்கு முன்னால் இந்த கோயில் இங்கிருந்தது. அந்த கோயிலில் இருந்த மூலவர் சிலைதான் தற்போது 6 வது அறைக்குள் இருக்கிறது. அறையை திறந்தால் மூலவரின் உக்கிர பார்வை திறப்பவரை நிர்மூலமாக்கி விடும். அவருக்கும், அவரது வம்சத்திற்கும் ஆபத்தை உருவாக்கி விடும். இந்த அறையில்தான் நரசிங்கமூர்த்தி சிலை இருக்கிறது. இது கோயிலின் பாதுகாப்பை மேற்கொள்ளும் சுவாமியாகும். இந்த சுவாமியை தாண்டி நிலவறைக்குள் யாரும் செல்லக் கூடாது என்று பிரசன்னத்தில் தெரியவந்தது. மீறி செல்பவர்கள் திவ்வயாத்மாவால் பாதிக்கப்படுவார்கள். அறைக்குள் உலவும் ஆவி அங்கிருக்கும் நகைகளை பாதுகாக்கிறது. இதற்கு காரணம் இந்த நகைகள் அனைத்தும் சுவாமிக்கு சொந்தமானது. மேலும் அறைக்குள் ஸ்ரீசக்ரமும், சாலக்கிரகங்களும் இருக்கிறது. இதை மீறி யாரும் உள்ளே பிரவேசிக்க கூடாது. இது இறைவனின் ஆணை. மேலும் ஒரு முக்கியமான விஷயம் தேவபிரசன்னத்தில் தெரியவந்துள்ளது. கோயில் மூலவர் சன்னதியில் இருந்து ரகசிய நிலவறைக்கு சுரங்கப் பாதை இருப்பதாகவும் தெரிகிறது. அங்கு கோயில் கும்பகலசங்கள் இருப்பதாகவும் பிரசன்னம் கூறுகிறது. இதுவரை கோயிலில் நடந்த தவறுகளுக்கு உடனடி பிராயசித்தம் தேட வேண்டும். தோஷ பரிகாரங்களும் நிறைவேற்றப்பட வேண்டும். 12 நாள் தொடர்ச்சியாக கோயிலில் முக்கால பூஜைகள் நடத்த வேண்டும். பகவதி சேவா பூஜையும் செய்ய வேண்டும். ஒரு லட்சம் திரி ஏற்றி ஹோமம் நடத்த வேண்டும். 24,000 மகா சுதர்சன ஹோமமும், சிறிய சுதர்சன ஹோமமும் நடத்தப்பட வேண்டும். கோயிலில் வேத பாராயணமும், சக்களத்து பூஜையும் மேற்கொள்ள வேண்டும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலுக்கும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. திருவட்டாரில் நடக்கும் பூஜையை போலவே திருவனந்தபுரம் கோயிலிலும் நடக்கும். திருவட்டாறு கோயிலில் நடக்க வேண்டிய விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றுக்கு திருவனந்தபுரம் கோயிலில்தான் நாள் குறிக்கப்படும். வருடாந்திர பூஜைகள் கூட இங்கிருந்து கூறுவதுபடிதான் நடக்கும். சில காலமாக இத்தகைய பூஜைகள் தடைபட்டுள்ளது. இனி அந்த பூஜைகளை நடத்த வேண்டும். இந்த பரிகாரங்களை மேற்கொண்டால் சுபிட்சம் ஏற்படும். இதற்கான நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் உடனே தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பத்மநாபசுவாமி கோயில் நகைகளை மதிப்பிடவும், 6 வது அறையை திறக்கவும் சுப்ரீம் கோர்ட் நியமித்த குழு தலைவர் ஆனந்தபோசிடம் பிரசன்னத்தில் வெளியான தகவல் பற்றியும், அறையை திறக்க குழு என்ன முடிவு செய்துள்ளது என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கருத்து சொல்ல மறுத்து விட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.