எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.19 - இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், சிட்கோ நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் சி.சண்முகவேலு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் சி.சண்முகவேலு பதில் அளித்து பேசியதாவது:-
கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி, அவர்களது பொருளாதார நிலையினை மேம்படுத்தும் பொருட்டு, இத்துறையில் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ஜூலை மாதம் 2011 முடிய, இத்துறையில் 347 தொழிற் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2010-2011 ஆம் ஆண்டில் எய்திய விற்பனையைவிட, நடப்பாண்டில் மொத்தம் 700 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதனை எய்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்ட மக்களுக்கு, வாழ்வாதாரம் அளிக்கும் முக்கிய தொழிலாக, தேயிலை தொழில் விளங்குகிறது. மொத்தம் உள்ள 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகளில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் 15 தேயிலை தொழிற் கூட்டுறவு தொழிற்சாலைகளில், உறுப்பினர்களாக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.
எப்பொழுதெல்லாம் சந்தையில் தேயிலைத்தூளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து, சிறு தேயிலை விவசாயிகள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு, சிறு தேயிலை விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தேயிலை சிறு விவசாயிகளின் துயர் துடைக்கும் பொருட்டு, பசுந்தேயிலைக்கான நியாயமான விலை தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்ற அடிப்படையில், இந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பசுந்தேயிலைக்கு 2.8.11 அன்று கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் கூடுதலாக வழங்க, முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஆணையிட்டு, இதற்காக 11.20 கோடி ரூபாய் ஒப்பளித்துள்ளார்கள்.
சேகோசர்வ் எனப்படும் சங்கம் 364 உறுப்பினர்களை கொண்டு, சேலத்தில் இயங்கி வருகிறது. ஜூலை மாதம் 2011 முடிய இச்சங்கமானது 109.66 கோடி ரூபாய் மதிப்பிற்கு விற்பனை செய்து, 110.47 இலட்சம் ரூபாய் இலாபம் அடைந்துள்ளது.
தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் குறு, சிறு தொழில் முனைவோர்களுக்கு நிதி வசதி வழங்குவதற்காக, ஏற்படுத்தப்பட்ட தாய்கோ வங்கியானது, தற்பொழுது 44 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 2010-2011 ஆம் ஆண்டில் பொது மக்களிடமிருந்து ரூ.688.72 கோடி அளவிற்கு வைப்புத் தொகை திரட்டிட ரூ.499.51 கோடி அளவுக்கு பல்வகை கடன்கள் வழங்கியுள்ளது. இவ்வாண்டில் இவ்வங்கி ரூ.248.80 இலட்சம் லாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கியின் மூலமாக குறு மற்றும் சிறு தொழில் முனைவோர்கள் தொழில் துவங்குவதற்கு, அதிக கடன் வசதிகள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா துறை ஆய்வில் அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது தென்னை நார் நேரடியாக நமது மாநிலத்திலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மூலப்பொருளை நமது மாநிலத்திலேயே பயன்படுத்தி, மதிப்பு கூட்டப்பட்ட கயிறு பொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உண்டான திட்டங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்ட சிட்கோ நிறுவனம் நவீன முறையில் சீரமைக்கப்பட்டு, தொடர் மேம்பாட்டு நடவடிக்கைகள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே உள்ள 92 தொழிற்பேட்டைகளை தவிர, மேலும் 8 புதிய தொழிற்பேட்டைகளை சிட்கோ நிறுவனமானது தஞ்சாவூரில் பாலயப்பட்டியிலும், வேலூரில் வாணியம்பாடியிலும், விருதுநகரில் மாநகர் புறத்திலும், புதுக்கோட்டையில் மாத்தூரிலும், திருப்பூரில் இராசாத்தவலசுவிலும், விழுப்புரத்தில் வெண்மணி ஆத்தூரிலும், தூத்துக்குடியில் பிடாநேரியிலும், தேனியில் மரிக்குண்டு கிராமத்திலும் புதிய தொழிற்பேட்டைகளை இந்த நிதியாண்டிற்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா ஆணையின்படி சிட்கோவை புனரமைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, இதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு, இக்குழுக்களின் பரிந்துரைகளின்படி எளிமையான முறையில் தொழில் முனைவோருக்கு உதவும் நிறுவனமாக சிட்கோவை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிட்கோ தலைமை அலுவலக கட்டிடம் கிண்டி தொழிற்பேட்டையில் புதியதாக கட்ட கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2007-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக கட்டிடப் பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நில ஒதுக்கீட்டிற்கான விலைக் கொள்கை, நில வங்கி உருவாக்குதல், அது தொடர்பான நடைமுறைகளை எளிமையாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் சிட்கோ நிறுவனத்தின் செயல்பாடுகளை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
டான்சி நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அரசு துறைகளான பள்ளிக்கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் தேவைப்படும் தளவாட பொருட்களை இந்நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இளைய தொழில் முனைவோர்கள் குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்கும் வகையில், இந்நிறுவனத்தை ஆற்றல் மிக்க நிறுவனமாக மாற்ற 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கூடிய வகுப்பறைகள், நூலகம், கணினி மையம், கூட்ட அரங்கம் மற்றும் தங்கும் விடுதி வசதிகளுடன் கூடிய ஒரு நவீன பயிற்சி வளாகம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நிதியமைச்சர் 4.8.11 அன்று பேரவைக்கு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் சி.சண்முகவேலு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.