எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு -5 - ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் வாய்க்கால் விவசாயிகளின் நலன் கருதியும், குடிநீருக்காகவும் உண்டாக்கப்பட்டது. பவானி ஆற்றிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் 1264-ஆம் வருடம் காளியங்கராய கவுண்டர் என்பவரால் 746 வருடத்திற்கு முன்பு கால்வாய் கட்டப்பட்டது. சுமார் 34 கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளின் ஜீவநாடியாக இருந்துவந்தது இந்த கால்வாய். பல நூறு வருடங்களாக விவசாயத்திற்கும், பொதுமக்களின் சுத்தமான குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக விளங்கிவருகிறது.
சமீபகாலமாக இந்த கால்வாயில் தோல் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாயப்பட்டறை கழிவுநீர் கலப்பதால் வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பற்பல போராட்டங்களை நடத்தின. இதனால் அரசாங்கம் காளிங்கராயன் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை சார்பில் கான்கிரீட் தடுப்பு சுவரை 5.650 கி.மீட்டர் நீளம் மற்றும் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டும் பணிக்காகவும், பழுதடைந்த பழைய 296 மதகுகளை இடித்துவிட்டு புதிய கான்கிரீட் மதகுகளை கட்டவும், இடது புற மண் கரையை பலப்படுத்தி மண் கொட்டவும், கால்வாயின் இடது புறத்தில் பழுதடைந்த இடங்களில் கருங்கற்கள் கொண்டு தடுப்பு சுவர் கட்டும் பணிகளை மேற்கொள்ளவும், மேலும் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் ரூ.11.75 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஒரு வருடத்திற்குள் இப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். இத்திட்டத்தை அறிவித்தவுடன் இப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் விவசாயிகளின் எண்ணங்களுக்கு விரோதமாகவும் மற்றும் பொதுமக்களுக்கு சமாதி கட்டும் விதமாகவும் காளிங்கராயன் வாய்க்காலில் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
கட்டப்பட்ட தடுப்பு சுவர் சரியான உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவுநீர் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்கிறது. மேலும் மெகா மோசடியாக தடுப்பு சுவர் எழுப்பி அதில் கழிவுநீர் தேங்குவதுபோல பொதுமக்கள் பார்வைக்கு காண்பித்து, கழிவுநீர் இனி வாய்க்காலில் கலக்காது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுப்பணித்துறையினர் சாயப்பட்டறை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலாளிகளிடம் கையூட்டை பெற்றுக்கொண்டு, தடுப்பு சுவரின் அடியில் மெகா கான்கிரீட் சிமெண்ட் குழாய்களை பதித்து கழிவுநீரை நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலில் கலக்க வைத்து விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றி உள்ளனர். இதனால் இப்பகுதியில் விவசாயமே அழிந்துவிடக்கூடிய காரியத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
மேலும் வாய்க்காலின் இடதுகரையின் பழுதடைந்த இடங்களை மண்ணைக் கொட்டி பலப்படுத்தி உள்ளோம் எனக்கூறி, மண்ணை கொட்டாமல் இருப்பதை இடதுபுற கரையின் மேற்பாதையை பார்த்தாலே புரியும். ஆனால் இப்பணிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து மண் கொண்டுவரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு சுமார் 15 லட்சத்திற்கு பில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளை பார்வையிட தற்காலிக பணியாளர்களை நியமித்து உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம் ரூ. 3,670 சம்பளம் 12.4.2010 முதல் 11.10.2010 வரை கொடுத்துள்ளதாகவும் கூறி, பணியாளர்களை பணியில் அமர்த்தாமலேயே சம்பளம் வழங்கியதாக கூறி ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்து உள்ளனர். மேலும் கழிவுநீர் தடுப்பு சுவர் ஒப்பந்தத்தில் கூறியதுபோல் 2.80 மீட்டர் உயரத்திற்கு கட்டப்படாததால் கழிவு நீர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் நேரடியாக காளிங்கராயன் வாய்க்காலிலேயே கலக்கிறது. இதிலும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. பழைய மதகுகள் 294 புதுப்பித்தல் மற்றும் கான்கிரீட் மதகுகள் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி உள்ளனர். இதில் பல இடங்களில் பழைய மதகுகளை சிமெண்ட் பூசி புதிய மதகுகளாக கணக்கு காட்டி ரூ.2.50 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. மேலும் கரை ஓரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களையும் வெட்டி கடத்தி உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த இப்பணிக்கு ஒதுக்கப்பட்ட 11.75 கோடி பணம் முறையாக செயல்படுத்தப்படாததால் பல கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவருகிறது. பொதுப்பணியை தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சருக்கும் இதில் பங்கு உண்டா என நாட்டின் மீது அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்பணி என்ன நோக்கத்திற்கு தீட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமலேயே, விவசாயிகளும், பொதுமக்களும் பயன் அடையாமல் திட்டம் தீட்டியவர்களே பயனடைந்து உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்தையே சீரழிக்கக்கூடிய விதத்திலும், குடிதண்ணீரில் சாயபட்டறை கழிவுகளை கலக்கவிட்டு பொதுமக்களின் உயிர்களோடும் விளையாடுகின்ற விதத்தில் இந்தபணிகள் நடைபெற்றுள்ளன. முதல்வர் கவனிக்கும் இலாகாவான பொதுப்பணித்துறையிலேயே இத்தகைய ஊழல்கள் நடந்திருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.