எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - போக்குவரத்துத்துறையில் கே.என்.நேரு முறைகேடுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். நேற்று சட்டசபையில் போக்கு வரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா ஆட்சி வரும் போதெல்லாம் அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்கும். தி.மு.க. ஆட்சி வரும் போதெல்லாம் நஷ்டத்தில் இயங்கும். 91-96 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.142 கோடி லாபம் வந்தது. 96-2001ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.674 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.61 கோடி லாபம் வந்தது. 2006-2011 தி.மு.க. ஆட்சியில் ரூ.1905 கோடி ரொக்கம் நஷ்டம் ஏற்பட்டது. இதில் போக்குவரத்து துறை அமைச்சராக கே.என். நேரு இருந்த போது, அவரும், அவரது கட்சியினரும் போக்குவரத்து துறை வருமானத்தை மறை முகமாக அவர்களின் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 90 சதவித பஸ்கள் சாதாரண பஸ்களாக இயக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் கலர் கலராக பெயிண்ட் அடித்து பல வகை பெயர்களில் பஸ்கள் இயக்கினர். இதில் 40 சதவிதம்தான் சாதாரண பஸ்கள். விரைவு போக்குவரத்து கழகத்துக்கு புதிய பஸ்கள் கூட வாங்க வில்லை. அனைத்தும் பழைய பஸ்கள்தன். 1653 கூடுதல் நபர்களை போக்குவரத்து துறையில் நியமனம் செய்தார்கள். தற்காலிக ஓட்டுனர் டிரைவர்களுக்கு எங்கு பணி கொடுப்பது என்று தெரியாமல் அவர்களை ஏலம் விடும் அளவுக்கு நிறுவனம் இருந்தது. காலுக்காக காலணியை வெட்டுவதை விட்டு காலணிக்காக காலை வெட்டினார்கள். நேருவின் தவறான கொள்கை முடிவால் 8 போக்கு வரத்து கழங்கங்களும் தள்ளாடின. நியாயமற்ற பணி நியமனங்கள் தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. நேர்முக தேர்வுக்கே வராத 40 பேர்களுக்கு வேலை கொடுத்துள்ளனர். உயரம் குறைவு எனச் சொல்லி நேர்முக தேர்வில் நிராகரிக்கப்படும் நபர் கவனிக்க வேண்டியவர்களை கவனித்த பிறகு மருத்துவரிடம் உயரம் சரியாக இருப்பதாக சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது பார்த்தால் அவர்கள் உயரம் குறைவாக உள்ளது. ஓட்டுனர் நடத்துனர் போன்ற ஊழியர்களை அதிகம் நியமித்ததில் ரூ.70 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அரசு போக்கு வரத்து கழக பணத்தை பயன்படுத்தி சொகுசு கார்கள் வாங்கி கே.என். நேரு தனது மனைவி, உறவினர் தேவைக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஸ்கார்பியோ, பொலிரோ போன்ற 17 சொகுசு கார்களை வாங்கி அவரும் மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர். இதில் அழகிரிக்கு ஒரு கார், பொன்முடிக்கு ஒரு கார், ஐ.பெரியசாமிக்கு ஒரு கார், ஆற்காடு வீராசாமிக்கு 2 கார், முன்னாள் துணை சபாநாயகருக்கு ஒரு கார், கே.என். நேருவுக்கு மட்டும் 8 சொகுசு கார். உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் பணத்திலும் மக்கள் பணத்திலும் இந்த கார் வாங்கப்பட்டு உள்ளது. இதை ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளனர். ஜவகர்லால் நேரு குழந்தை பருவத்தில் படிக்கும்போது அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் 4 வாசல்களிலும் கார் நிறுத்தப்பட்டு இருக்கும். செல்வந்தரான மோதிலால் நேருவே 4 கார் களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கே.என். நேரு 8 கார்களை பயன்படுத்தியிருக்கிறார். சொகுசு வண்டிகளால் ரூ.5 கோடி பணம் விரயம் ஏற்பட்டுள்ளது. கே.என். நேருவின் வீடு, திருச்சி அலுவலகத்துக்கு வந்து செல்பவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.36 லட்சம் ஆகும். திருச்சி மண்டல போக்குவரத்து கழகம் மூலம் இது செலவழிக்கப்பட்டுள்ளது. விசாரித்ததில் திருச்சியில் உள்ள கே.என். நேரு வீடுதான் அப்போது அலுவலகமாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளைக்கும் என்னென்ன செலவு செய்தார்கள் என்பது புத்தகமாக தயாரித்துள்ளோம். சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு): கே.என். நேரு செய்த செலவினை கேட்கும்போது, எங்களுக்கு நெஞ்சடைப்பு வந்து விடும்போல் தெரிகிறது. எனவே அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு): போக்குவரத் துத்துறை பணத்தை நேருவும் அவரது குடும்பத்தினரும் முழுமையாக செலவழித்துள்ளது தெரிய வந்தது. அவர் தற்போது ஜெயிலுக்குள் இருக்கிறார். நிரந்தரமாக உள்ளே இருக்க அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி: கே.என். நேரு திருச்சிக்கு பக்கத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு செல்லும்போது ஒரு மணி நேரம் போக்குவரத்தில் சிக்கி கொள்கிறார். உடனே ஒரு உத்தரவு போட்டு இனிமேல் இந்த ரோட்டில் எந்த கனரக வாகனமும் வரக்கூடாது என்கிறார். இதனால் 2 கிலோ மீட்டர் அதிக தூரம் சுற்றி செல்லும் வகையில் வழித்தடங்களில் பஸ்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் அரசுக்கு ரூ.51 லட்சம் விரயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்களுக்கு கே.என். நேரு வந்து சென்ற வகையில் ரூ.32 லட்சம் செலவு எழுதியுள்ளனர். ஆனால் கே.என். நேரு அங்கு போனதே இல்லை. பணிமனை, அலுவலகங்களுக்கு சென்றால் வருகை பதிவேட்டில் அது இடம் பெற்று இருக்கும். ஆனால் எதிலும் இல்லை. போகமலேயே வந்து சென்றதாக கணக்கு எழுதி உள்ளார். கே.என். நேரு தனக்கு வேண்டியவர்களுக்கும் தி.மு.க.வினருக்கும் சமூக நலப்பணியாளர்கள் என்ற பெயரில் 540 பேருக்கு பஸ் பாஸ் அந்த துறை மூலம் வழங்கி உள்ளார். இதனாலும் ஆண்டுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தொழிற்சங்கத்தில் உள்ளவர்கள் பணிக்கு போகமலேயே நேருவுடன் சுற்றிக்கொண்டு சம்பளம் வாங்கி உள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. போக்கு வரத்து சங்கத்தின் கடன் நிலுவை ரூ.2,017 கோடியாக உள்ளது. மூழ்கும் கப்பலாக போக்குவரத்துத்துறை உள் ளது. மொத்த நஷ்டம் 6,000 கோடி அளவிற்கு கே.என். நேருவின் ஆடம்பர ஊதாரித்தனமான செல்வுகளால் பல கோடி பணம் விரயமாக்கப்பட்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு பணத்தில் கே.என். நேரு செய்த செலவுகள் என்னென்ன என்பதை 2 புத்தகமாகவே அச்சடித்துள்ளோம். இது முதல்அமைச்சரின் அனுமதி பெற்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். சபாநாயகர் அதை நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் செய்தியாளர்களுக்கும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.