எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் -7 - இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இங்கிலாந்து பவுலர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி வெற்றிபெற்றது. 10-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றுக்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதன் பி பிரிவு லீக் போட்டி ஒன்றில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க அணியை இங்கிலாந்து அணி சந்தித்தது. இங்கிலாந்து அணி கடந்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்தது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஸ்ட்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஸ்ட்ராஸ் மற்றும் கெவின் பீட்டர்சன் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பீட்டர்சன் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் இங்கிலாந்து கேப்டன் ஸ்ட்ராஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்திலேயே கெவின் பீட்டர்சனும் 2 ரன் எடுத்த நிலையில் ஜாக் காலிசால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டாக 3 ரன்களில் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. அடுத்து ஜோனாதன் ட்ராட் மற்றும் இயான் பெல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். ஆனால் இதிலும் பெல்லை மிகச் சிறப்பான முறையில் காட் அண்டு போல்டு முறையில் ஆட்டமிழக்கச்செய்தார் பீட்டர்சன். பெல் எடுத்த ரன்கள் 5 மட்டுமே. 15 ரன்களை எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. இந்நிலையில் ட்ராட்டுடன் ஜோடி சேர்ந்த ரவி பொப்பாரா இங்கிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 87 பந்துகளில் அரைசதம் கடந்தார் ட்ராட். அணியின் எண்ணிக்கை 114 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ட்ராட் 52 ரன்கள் எடுத்த நிலையில் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ப்ரையர், ரவிபொப்பாராவுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் பொப்பாரா 87 பந்துகளில் 50 ரன்களை கடந்தார். அணியின் எண்ணிக்கை 134 க்கு உயர்ந்தபோது 10 ரன்களை அடித்திருந்த ப்ரையர், வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலின் பந்தில் கீப்பர் வான்விக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இங்கிலாந்து அணியின் மொத்த ரன்கள் 148 ஐ எட்டியபோது 60 ரன்கள் அடித்திருந்த பொப்பாரா, மோர்கெலின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் 45.4 ஓவர்களில் 171 ரன்களையே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளையும், பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், மோர்கெல் 2 விக்கெட்டுகளையும், ஸ்டெயின் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
172 ரன்களை எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஆம்லா மற்றும் ஸ்மித் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். அணியின் எண்ணிக்கை 63 ஐ எட்டியபோது 22 ரன்களை எடுத்திருந்த ஸ்மித், சுழல்பந்து வீச்சாளர் ஸ்வானின் பந்தில் விக்கெட் கீப்பர் ப்ரையரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஆம்லாவை கிளீன்போல்டாக்கினார் ஸ்டூவர்ட் பிராட். ஆம்லா எடுத்த ரன்கள் 42. அடுத்து டிவில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 82 க்கு உயர்ந்தபோது 15 ரன்களை எடுத்திருந்த காலிஸ், ப்ராடின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து அவுட்டானார். இதன் பிறகு தென் ஆப்பிரிக்க வீரர்கள் டிவிலியர்ஸ் மற்றும் ப்ளெஸ்ஸிஸ் ஆகியோர் ரன் சேர்க்க திணற ஆரம்பித்தனர். 25 ரன்களில் 100 ரன்களை கடந்த தென் ஆப்பிரிக்க அணி அடுத்த 7 ஓவர்களில் வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் அதற்குள் மேலும் ஒரு விக்கெட்டையும் இழந்தது. 25 ரன்களை எடுத்திருந்த வில்லியர்ஸ், ஆண்டர்சனின் வேகத்தில் வீழ்ந்தார். இதே ஸ்கோரிலேயே ப்ளெஸ்ஸிஸ் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து டுமினி ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆண்டர்சனின் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. எளிய ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா எட்டுமா என்ற கேள்வி எழுந்துவிட்டது. அணியின் எண்ணிக்கை 127 ஆனபோது பீட்டர்சன் 16 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் யார்டி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வான்விக்குடன் ஜோடி சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். அணியின் எண்ணிக்கை 160 ஐ எட்டியபோது 37 பந்துகளில் 13 ரன்களை எடுத்திருந்த வான்விக் விக்கெட்டை பறித்தார் வேகப்பந்து வீச்சாளர் ப்ரேஸ்னன். அடுத்து 4 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி ஸ்டெயினின் விக்கெட்டையும் இழந்தது. ஸ்டெயின் 20 ரன்களை எடுத்த நிலையில் ப்ராடின் பந்தில் விக்கெட் முன் கால் என்ற நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து மோர்னே மோர்கெல் 1 ரன் எடுத்த நிலையில் ப்ராடின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ப்ரையரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களை மட்டும் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் இம்ரான்தாஹிர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தும் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மிகச் சிறப்பாக பந்துவீசி 6.4 ஓவர்களில் 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியில் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், யார்டி, ப்ரேஸ்னன், ஸ்வான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கடந்த லீக் போட்டியில் அயர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த இங்கிலாந்து அணி பலம்பொருந்திய அணியாக கணிக்கப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி பி பிரிவில் தனது நிலையை தக்கவைத்துக்கொண்டது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளின் முடிவில் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்