எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.22 - கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்க்கு 19.9.11 அன்று ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், தமிழக அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், இந்த பிரச்சனையில் ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லி சென்று, பாரதப் பிரதமரை சந்தித்து, ஒரு கோரிக்கை மனுவை அளிக்கும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், இந்த பிரச்சனையில் சுமூகத் தீர்வு எட்டப்படும் வரையில், கூடங்களும் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பாரதப் பிரதமரை கேட்டுக் கொண்டார்.
அந்தக் கடிதத்தை படித்த பின், பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அன்று (19.9.11) மாலையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சனை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர், நாராயணசாமியை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
அதனை அடுத்து, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி நேற்று முன்தினம் தமிழகம் வந்து தலைமை செயலாளரை சந்தித்தபின், இடிந்தகரை சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வரை நேற்று தலைமை செயலகத்தில், பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி சந்தித்தார். அப்போது இடிந்தகரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை தான் சந்தித்தது பற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினார். இந்த சந்திப்பின் போது இந்திய அணுமின் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், எஸ்.கே.ஜெயின், மத்திய அரசு அணுமின்சக்தித்துறையின் கூடுதல் செயலாளர் ஏ.பி.ஜோஷி மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் எம்.காசிநாத் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், இடிந்தகரையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அப்போது, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த கோரிக்கையை ஏற்று இன்று (22.9.11) தமிழக அமைச்சரவை கூட்டப்படும் என்றும், கூடங்குளம் பகுதியிலுள்ள மக்களின் அச்சங்கள் தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகளை மேற்கொண்டு தொடர வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாரதப் பிரதமர் நியூயார்க்கிலிருந்து 27.9.11 அன்று திரும்பிய பிறகு, அவரை சந்திப்பதற்கு வசதியான நாளை பெற்று, தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழகக்குழு புதுடில்லிக்கு சென்று பாரதப் பிரதமரிடம் கோரிக்கை மனு அளிக்கும் என்றும், பிரமதர் இந்தியா திரும்பிய பின், பாரதப் பிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப, தற்போது இடிந்தகரையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக கைவிடுவதாக போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். தமிழக முதல்வரின் நடவடிக்கைகளுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, கோட்டார் பேராயர் பீட்டர் ரெமிஜியஸ், தூத்துக்குடி பேராயர் டாக்டர் யுவான் அம்புரோஸ், பாலபிரஜாபதி அடிகள், அருள்தந்தை எக்ஸ்.டி.செல்வராஜ், தந்தை ஜெயகுமார், தந்தை ஹென்சன், லுட்வின், ஞானசேகர், எஸ்.பி.உதயகுமார், சிவசுப்பிரமணியன், புஷ்பராயன், பேராயர் ஜே.ஏ.டி. ஜெபசந்திரன், தூத்துக்குடி பேராயர் கிறிஸ்துதாஸ், ஜேசன் செல்வகுமார், தமிழ்செல்வன், தனசீலன், இர்வின் சார்லஸ், ஜோசப் நாஞ்சில் மைக்கேல், த.வெள்ளையன், சாமுவேல் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சமால், கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைசச்ர் பி.செந்தூர்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி