முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரணாப்பின் குறிப்பு ஒரு பிரச்சினையே அல்ல :சல்மான் குர்ஷீத்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. செப். - 27 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு  நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுப்பிய குறிப்பு ஒரு பெரிய பிரச்சினையே அல்ல என்று மத்திய மந்திர சல்மான் குர்ஷீத் கூறியுள்ளார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  ஒரு குறிப்பை அனுப்பியுள்ளார். அதன்படி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தற்போதைய மத்திய  உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்றும் எனவே  அவர்  தனது பதவியை ராஜினாமா  செய்ய வேண்டும் என்றும்  பா.ஜ.க.உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.  ஆனால் இந்த குறிப்பு ஒரு பெரிய பிரச்சினையே அல்ல என்று மத்திய  மந்திரி சல்மான் குர்ஷீத் சர்வசாதராணமாக கூறியுள்ளார். தானும் அந்த குறிப்பை பார்திருப்பதாகவும் ஆனால் அதில் கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த குறிப்பு  நிதி அமைச்சகத்தில் உள்ள ஒரு கீழ் மட்ட அதிகாரியால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். ஆனால் சிலர் இதை மிகைப்படுத்தி கூறி வருகிறார்கள் என்றும்  இது  குறித்த விவாதம் வரும் போது அதற்கு உரிய பதில் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்