எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,அக்.- 13 - கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் தொழில் வளர்ச்சி அதிகமாகிக்கொண்டியிருப்பதாலும் மக்களின் மின்சார தேவை அதிகரித்து வருவதாலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் அனல் மின்சாரம் மற்றும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பானது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. இதனை கருத்தில் கொண்டும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இந்தியா-ரஷ்யா இடையே கடந்த 1980-ம் ஆண்டுகளில் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி நெல்லைமாவட்டம் கடல்பகுதியையொட்டியுள்ள கூடங்குளத்தில் 3-கட்ட அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் முதல் கட்ட பணி முடிந்து அணுமின்சார உற்பத்தியை தொடங்க இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும்பட்சத்தில் அந்த அணுமின் உற்பத்தி நிலையத்தால் பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிருக்கு போராட்டம் என்று கருதி அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆரம்பத்தில் போராட்டம் சாதாரணமாக இருந்தது. ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் இந்த போராட்டம் வலுவடைந்து ஒரு லட்சம் பேர் சேர்ந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கியது. அப்போதுதான் மத்திய அரசு கொஞ்சம் நினைத்து பார்க்கத்தொடங்கியது. மேலும் இந்த போராட்டம் குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி, மக்களின் பாதுகாப்பு குறித்து பிரதமருக்கு விளக்கினார். மேலும் போட்டக்குழுவுடன் மத்திய அரசு பிரதிநிதியும் மத்திய அமைச்சருமான நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்பும் பின்பும் முதல்வர் ஜெயலலிதாவை நாராயாணசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தினர். கூடங்குளம் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையம் மூடப்பட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் தொடர ஆதரவு கொடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவை கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் மின்சாரத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகின்றது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு உலைகளின் மூலம் 2 ஆயிரம் மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் 925 மெகாவட் தமிழகத்திற்கு கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தை கைவிட்டால் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். அணுசக்தி மின்சாரத்திற்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடமாட்டோம். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்தான் அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும். கூடங்குளம் மக்களின் கவலை எங்களுக்கு புரிகிறது. அவர்களின் அச்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப்பகுதி மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கூடங்குளம் அணுமின்சார நிலையம் தொடர்பாக மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 4 நாட்களில் எழுதி உள்ள 2-வது கடிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடும் வரை போராடப்போவதாக போராட்டக்குழு அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இந்த பதில் கடிதத்தை எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார