எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு, மார்ச் - 7 - உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இந்தியா திணறல் வெற்றியைப் பெற்றது. 10 வது உலக கோப்பையின் பி பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, டெஸ்ட் அந்தஸ்து பெறாத அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. இதே மைதானத்தில் கடந்த லீக் போட்டியில் இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த அயர்லாந்து அணி இன்று இந்திய அணியை என்ன செய்ய காத்திருக்கிறதோ என்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த இந்த போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்ட்டர் பீல்டு மற்றும் ஸ்டிர்லிங் களமிறங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர்கான் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்டிர்லிங் கிளீன்போல்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை ஒரு ரன். இதையடுத்து ஜோய்ஸ் களமிறங்கினார். இவரும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய ஓபிரைன், கேப்டனுடன் ஜோடி சேர்ந்து அணியின் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தினார். குறிப்பாக போர்ட்டர்பீல்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் எண்ணிக்கை 122 க்கு உயர்ந்தபோது நன்கு விளையாடிக்கொண்டிருந்த ஓபிரைன் 46 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஒயிட்டும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது பந்துவீச வந்த யுவராஜ்சிங், 5 ரன்கள் எடுத்திருந்த ஒயிட்டின் விக்கெட்டை வீழ்த்தினார். கேட்ச் பிடித்து அவுட்டாக்கியவர் தோனி. அடுத்து கடந்த லீக் போட்டியில் அதிரடியாக சதமடித்து இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த கெவின் ஓபிரைன் களமிறங்கினார். ஆனால் இவரது விக்கெட்டை யுவராஜ்சிங் தானே பந்துவீசி தானே பிடித்து காலி செய்தார். ஓபிரைன் எடுத்த ரன்கள் 9 மட்டுமே. அப்போது அணியின் எண்ணிக்கை 33.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களாக இருந்தது. அடுத்து குசாக், போர்ட்டர்பீல்டுடன் ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் நல்ல முறையில் விளையாடிக்கொண்டிருந்த போர்ட்டர்பீல்டு 75 ரன்கள் எடுத்த நிலையில் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சில் ஹர்பஜன் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 160. அடுத்து வந்த மூனேயும், யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க அயர்லாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து குசாக்குடன் ஜோடி சேர்ந்தார் ஜான்ஸ்டன். ஆனால் குசாக்கும் 24 ரன்களை எடுத்திருந்தபோது யுவராஜ்சிங்கின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 8 விக்கெட் இழப்பிற்கு 184. அடுத்து வந்த டோக்ரெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜாஹீர்கானின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 201. ஜோன்ஸ்டன் 17 ரன்களை எடுத்திருந்தபோது முனாப் பட்டேலின் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். இதனால் அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை எடுத்தது. ரான்கின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னை எடுத்திருந்தார். இந்திய தரப்பில் யுவராஜ்சிங் அபாரமாக பந்துவீசி 31 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஹீர்கான் 2 விக்கெட்டுகளையும், முனாப்பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ப்யூஸ் சாவ்லா இந்த போட்டியிலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற எளிய இலக்கை இந்திய அணி சேஸ் செய்தது. துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர்.
அதிர்ச்சியளிக்கும் விதமாக சேவாக் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஜான்ஸ்டனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். அணியின் எண்ணிக்கை அப்போது 9. அடுத்து டென்டுல்கருடன், காம்பீர் ஜோடி சேர்ந்தார். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. வெறும் 10 ரன்களை எடுத்திருந்தபோது காம்பீர் ஜான்ஸ்டனின் பந்தில் குசாக்கால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அணியின் எண்ணிக்கை 5.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 24. அடுத்து இளம் வீரர் ஹோக்ளி களமிறங்கினார். இவரும் டென்டுல்கரும் அணியின் எண்ணிக்கையை சிறிது சிறிதாக உயர்த்தினர். அணியின் எண்ணிக்கை 87 க்கு உயர்ந்தபோது டென்டுல்கர் 56 பந்துகளில் 38 ரன்களை எடுத்த நிலையில் டோக்ரெலின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து யுவராஜ் களமிறங்கினார். இந்நிலையில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. அப்போது சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஹோக்ளி 34 ரன்களில் ரன் அவுட் ஆனார். அடுத்து அணித் தலைவர் மகேந்திரசிங்தோனி, யுவராஜுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் ஓரளவு சிறப்பானதாக இருந்தது. அணியின் மொத்த ஸ்கோர் 167 ஐ அடைந்தபோது தோனி 34 ரன்களில் டோக்ரெல் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் யூசுப்பதான் களமிறங்கினார். இவரும் யுவராஜ் சிங்கும் வெற்றிக்கு தேவையான ரன்களை கடைசியில் அதிரடியாக சேர்த்தனர். யுவராஜ் சிங் 75 பந்துகளில் அரைசதம் கடந்தார். யூசுப்பதான் 24 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். இதனால் இந்திய அணி 46 ஓவர்களில் 210 ரன்களை அடித்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது. அயர்லாந்து தரப்பில் ஜான்ஸ்ட்டன் 2 விக்கெட்டுகளையும், டோக்ரெல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக யுவராஜ்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி 3 போட்டிகளின் முடிவில் 2 வெற்றி மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்ததால் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.