எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, அக்.- 15 - மதுரை மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. நிர்வாகம் கல்வெட்டில் பெயர்களை பதிப்பதிலும், கமிஷன் வாங்குவதிலுமே கவனம் செலுத்தியது என்று மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ். முத்துமணி குற்றம் சாட்டினார். மதுரை மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் 70-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் கே.சண்முகவள்ளி ஆகியோரை ஆதரித்து காமராஜபுரம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பி.கோவிந்தசாமி(மாநில கட்டிடப் பிரிவு அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர்)தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை முன்னாள் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எஸ்.முத்துமணி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது வருமாறு:- கடந்த 1977 ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற மதுரை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது. அப்போது ஒரு சிறுபான்மை சமூகமான - உன்னதமான கைத்தறித் தொழில் உழைப்புக்குச் சொந்தக்காரர்களான செளராஷ்ட்டிர சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை மேயராகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முனியசாமியை (அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவள்ளியின் தந்தை) துணை மேயராகவும் ஆக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு. ஆரம்பகட்டத்தில் காமராஜர்புரம் பகுதி மேடும் பள்ளமுமாய் சாக்கடைத் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பிய பகுதியாக காட்சியளித்தது. இப் புறம்போக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பு ஏற்படுத்தி குடியேறியதற்கும், வடக்குத் தெருவில் குப்பை மேடாகக் கிடந்த இடத்தை திருத்தி அமைத்து பள்ளிவாசல் அமைக்கப்பட்டதற்கும், ஊரணிகளை மேடாக்கி வீடுகள் அமைக்கப்பட்டதற்கும், முத்துராமலிங்கத்தேவர் தெருவில் சாக்கடைப் பகுதிகளை சீர்செய்து ரோடாக மாற்றியதற்கும் பாலரெங்காபுரத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டியைக் கட்டி அங்கிருந்து காமராஜபுரத்தின் அனைத்துப் பகுதிக்கும் குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டதற்கும் முன்னாள் துணை மேயர் முனியசாமிதான் காரணம் என்பதை இப்பகுதி மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர் வழியில் நமது முதல்வரின் ஆசியோடு, இந்தப் பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இரண்டுமுறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்முறையும் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் சண்முகவள்ளி. இவர் எடுத்த சீரிய முயற்சிகளின் காரணமாகத்தான் சிறு வியாபாரிகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த ஒரு சிறந்த மார்க்கெட் வளாகம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வார்டுக்கு உட்பட்ட அனைத்து சாலைகளுமே சிமெண்ட் ரோடாக போடப்பட்டதற்கும், எல்லா பகுதிகளிலும் சோடியம் விளக்கு அமைக்கப்பட்டதற்கும், அனைத்து பகுதிகளிலும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பற்றாக்குறையின்றி குடிதண்ணீர் கிடைப்பதற்கும் தேவையான அளவிற்கு போர்வெல் அமைக்கப்பட்டதற்கும், வைத்தியநாதய்யர் தெருவில் மேல்நிலைத் தொட்டி அமைத்து அதில் இருந்து 11 குழாய்கள் மூலம் காமராஜர்புரம் முழுவதற்கும் நல்ல குடிநீர் சப்ளை செய்யப்படுவதற்கும், ராம் தியேட்டர் அருகில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டதற்கும், இப்பகுதிக்கு மண்ணெண்ணை மையம் கொண்டுவந்ததற்கும் நமது அ.தி.மு.க வேட்பாளர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே காரணம். தற்போது மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்துள்ளது. அம்மாவின் தலைமையில் சீரிய ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால், அம்மாவிடம் இருந்து அதிக நிதியை பெற்று அடிப்படை வசதிகளை இந்தப் பகுதி மக்கள் பெற்றிடவும், நீண்டகாலமாக குடியிருந்து வருவோர் அனைவருக்கும் உரிய முயற்சி எடுத்து வீட்டு மனைப்பட்டாக்களை பெற்றுக் கொடுத்திடவும் எளிதாக இருக்கும். எனவே மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவிற்கும், 70 வது வார்டு வேட்பாளர் சண்முகவள்ளிக்கும் மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள். இன்றைய மதுரை மாநகரம் தி.மு.க. ரவுடிகளின் அட்டகாசப் பிடியில் இருந்து விடுபட்டு அமைதியாக விளங்குகிறது. மதுரை அமைதிப் பூங்காவாக நீடித்து, மக்களின் மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க அனைவரும் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
`க' கட்சி மதுரை மாநகராட்சியில் பொறுப்பில் இருந்தபோது மதுரை மாநகரில் வளர்ச்சிப் பணிகளில் - அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அதிகாரத்தில் இருந்தவர்கள் கவனம் துளியும் செலுத்தவில்லை. மாறாக ஆடம்பர விழாக்களை நடத்தி கல்வெட்டு பதிப்பதிலும், கமிஷன் பார்ப்பதிலுமே ஆர்வம் காட்டினார்கள். எனவே சட்டமன்ற தேர்தலில் ஒரு மவுனப் புரட்சி மூலம் புதிய வரலாறு படைத்ததுபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.வை அமோகமாக வெற்றிபெறச் செய்யுங்கள். இந்த வெற்றி மக்களின் வெற்றியாக அமையும்.
இவ்வாறு முன்னாள் எம்.பி. முத்துமணி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .