எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.20 - கடந்த 17-ந் தேதி சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட தகராறில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது தம்பியின் மனைவி, மகன்களால் கத்தியால் குத்தப்பட்டு இரும்பு ராடால் அடித்து படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூர் அ.தி.மு.க. பிரமுகரும், ஜெயலலிதா பேரவை தலைவருமான மோகன் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
சென்னை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 17-ந் தேதி நடந்தது. இதில் திருவொற்றியூர் பகுதியில் கடும் மோதல் வெடித்தது. வாக்குப்பதிவு நாளன்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கள்ள ஓட்டு போடப்படுவதாக இரு தரப்பினரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மாலை 5 மணியளவில் அங்குள்ள எர்ணாவூர் ரவுண்டானா அருகே அ.தி.மு.க. பிரமுகர் செல்வமணி, அவரது மனைவி வெண்ணிலா ஆகியோரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடி விட்டது. போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முடியவில்லை. கே.வி.குப்பம் கிராமத் தலைவர் அஞ்சப்பனின் தம்பி தான் செல்வமணி ஆவார். இவர்களுக்கும், கே.பி.பி.சாமியின் தரப்பினருக்கும் இடையே நீண்ட வருடங்களாக மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் கடந்த 17-ந் தேதி இந்த தாக்குதல் நடந்தது. அஞ்சப்பனின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
அரிவாள் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய செல்வமணியும், வெண்ணிலாவும் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்வமணிக்கு தலையில் 32 தையல் போடப்பட்டுள்ளது. அதேபோல் வெண்ணிலாவுக்கும் முதுகில் தையல் போடப்பட்டுள்ளது. இருவரும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே இந்த மோதல் தொடர்பாக நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் மூத்த மகன் இனியவன், உதவியாளர் நாகேஸ்வரன், ஜெயக்குமார், பாபு, செல்வம், கலையரசன், அருண், வினோத் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். கே.பி.பி.சாமி, அவரது தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் ஆகியோரது வீடுகளில் இருந்த கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தாக்குதல் சம்பவத்திற்கு இந்த கார்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 17-ந் தேதி மேலும் ஒரு நபரும் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது பின்னர் தான் தெரிய வந்தது. ஆறுமுகம் என்பவரது மகனான அ.தி.மு.க. பிரமுகர் மோகன்(42) என்பவர் வயிற்றில் கத்திக்குத்து காயத்துடன் பலகைதொட்டிக்குப்பம் பகுதியில் முள்புதரில் கிடந்தார். அன்றிரவு 11 மணியளவில்தான் இவரை கண்டுபிடித்துள்ளனர். முள் புதரில் முனகல் சத்தம் கேட்கவே சிலர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது மோகன் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை கண்டு அவரை மீட்டுள்ளனர். திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு அங்கு ஆபத்தான நிலையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.
செல்வமணி- வெண்ணிலா தாக்கப்பட்ட இடத்திற்கு அருகில் தான் மோகன் கிடந்த முள் புதரும் உள்ளது. தி.மு.க. கும்பலை சேர்ந்தவர்கள் தன்னை கத்தியால் வயிற்றில் குத்தி, இரும்பு ராடால் விலாவில் அடித்து காயப்படுத்திவிட்டு தப்பி விட்டதாக போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் மோகன் கூறியுள்ளார். இந்த தேர்தல் மோதல் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது போலீசார் மேலும் 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கே.பி.பி.சாமியின் மற்றொரு மகன் பரசு பிரபாகரன் இதில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, கே.பி.சங்கரின் மனைவி கஸ்தூரியும் இந்த பட்டியலில் உள்ளார். இவர்கள் பழவேற்காடு அல்லது நாகப்பட்டினத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது.
இந்த இடங்களுக்கு சென்று பதுங்கிக் கொண்டால் போலீசார் பிடிப்பது மிகவும் சிரமம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல சம்பவங்களில் முக்கிய பிரமுகர்கள் இங்குதான் சென்று பதுங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திருவொற்றியூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது. போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். நடந்த மோதலுக்கு பதிலடியாக எதிர் தரப்பினரை தாக்கும் ஆத்திரத்தில் அ.தி.மு.க.வினர் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு போலீசார் தங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கத்தி குத்துப்பட்ட அ.தி.மு.க. 7 வது வார்டு ஜெயலலிதா பேரவை தலைவர் மோகன் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5.15 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். நுரையீரலில் ரத்த கட்டு பாதிப்பால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி மோகன் இறந்து விட்டார். இவருக்கு மேகலா(28) என்ற மனைவியும், பிரபுதேவா(11), ப்ரீத்தி(10), பிரியதர்ஷினி(8) ஆகிய பிள்ளைகளும் உள்ளனர். மரணம் அடைந்த மோகன் உடலுக்கு சென்னை மாநகராட்சி மேயர் அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., 57 வது வட்ட வேட்பாளர் பி.டி.சி.ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப