எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,அக்.22 - மதுரை மாநகராட்சியில் வார்டுகளில் அதிக வார்டுகளை அதிமுக பெற்று அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொண்டர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு கடந்த 17 ம் தேதியும், ஊரக பகுதிகளில் 19ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஊரக பகுதியான மதுரை கிழக்கில் பதிவான வாக்குகள் ஒத்தக்கடையிலுள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்திலும், மதுரை மேற்கில் பதிவான வாக்குகள் திருப்பாலை யாதவா கல்லூரியிலும், திருப்பரங்குன்றத்தில் பதிவான வாக்குகள் திருநகரிலுள்ள சீதாலட்சுமி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், மேலூரில் பதிவான வாக்குகள் தாய் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அலங்கா நல்லூரில் பதிவான வாக்குகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டியில் பதிவான வாக்குகள் டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் செல்லம்பட்டியில் பதிவான வாக்குகள் கருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியிலும், சேடப்பட்டியில் பதிவான வாக்குகள் எஸ்.கோட்டைப்பட்டியிலுள்ள பராசக்தி மேல்நிலைப்பள்ளியிலும், திருமங்கலத்தில் பதிவான வாக்குகள் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், டி.கல்லுப்பட்டியில் பதிவான வாக்குகள் பேரையூர் காந்தி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கள்ளிக்குடியில் பதிவான வாக்குகள் கே.வேளக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் எண்ணப்பட்டன.
நகராட்சி பகுதிகளான திருமங்கலம் நகராட்சியில் பதிவான வாக்குகள் திருமங்கலம் பிகேஎன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், உசிலம்பட்டி நகராட்சியில் பதிவான வாக்குகள் கவுனம்பட்டி சாலையிலுள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், மேலூர் நகராட்சியில் பதிவான வாக்குகள் எஸ்எஸ்வி பிரைமரி பள்ளியிலும் எண்ணப்பட்டன.
மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளர் மற்றும் வார்டு வேட்பாளர்களுக்கான வாக்குகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மருத்துவ கல்லூரி ஆகிய இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன. நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு துவங்கியது. இதில் துவக்கத்தில் இருந்தே அதிமுக மேயர் வேட்பாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இதே போல் வார்டு கவுன்சிலர்களும் ஏராளமானோர் வெற்றி பெற்றனர். திமுகவுக்கு ஒற்றை இலக்கத்திலேயே வார்டுகள் கிடைத்தன. மீதமுள்ள அனைத்து வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சி மற்றும் மதுரை மாவட்டத்தில் அதிமுக பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக 10 தொகுதிகளையும் பிடித்தது. இதே போல் உள்ளாட்சி தேர்தலிலும் ஓரிரு வார்டுகளை தவிர மீதமுள்ள அனைத்து வார்டுகளையும், 3 நகராட்சிகளையும் அதிமுக கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் வெற்றி வாகை சூடியது அ.தி.மு.க.
மதுரை மாவட்டத்தில் 3 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியது. தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெருவாரியான இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சியில் பெரும்பான்மையான வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 3 நகராட்சிகளுக்கும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 3 நகராட்சிகளிலும் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது. திருமங்கலம் நகராட்சி அதிமுக வேட்பாளர் உமாவிஜயன் 11 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலூர் நகராட்சி அதிமுக வேட்பாளர் செ.சரவணன் 11 ஆயிரத்து 569 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல் உசிலம்பட்டி நகராட்சி அதிமுக வேட்பாளர் பஞ்சம்மாள் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்களை கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்தினர். தொண்டர்கள் வெடி வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 17 sec ago |
மினி பான் கேக்5 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ஊழலுக்கு எதிராக பா.ஜ.க, ஜனசேனா, தெலுங்குதேசம் இணைந்து போராடும் : ஆந்திராவில் அமித்ஷா பிரசாரம்
05 May 2024அமராவதி : ஆந்திராவில் ஊழல், குற்றம், மாபியா, மதமாற்றம் ஆகியவற்றுக்கு எதிராக பா.ஜ., ஜனசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து போராடுகின்றன என மத்திய உள்துறை அமைச்சர்
-
போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
05 May 2024போதை மருந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலிய எம்.பி. புகார்
-
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
05 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
05 May 2024புதுடெல்லி : முல்லைப்பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி தர கேரளாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
05 May 2024ஊட்டி : கோடை விடுமுறை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
பிரேசிலில் வரலாறு காணாத மழை: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது
05 May 2024பிராசிலா : பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
05 May 2024புதுடில்லி : தேர்தல் ஆதாயத்திற்காக மக்களை காங்கிரஸ் தவறாக வழி நடத்துகிறது என்று குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., ஒரு போதும் அரசியலம
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
தமிழக கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிப்பு
05 May 2024சென்னை : தமிழகத்தில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு அலர்ட் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
யாரையும் பழிவாங்க வேண்டாம் : நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் 2 கடிதங்கள் சிக்கின
05 May 2024நெல்லை : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதிய மேலும் இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனக்குத்தானே பிரசவம்: சென்னையில் செவிலியர் கைது
05 May 2024சென்னை : சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த போது குழந்தையை கொன்ற செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு: தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.50 லட்சம் பேர் எழுதினர்
05 May 2024சென்னை : இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' நுழைவு தேர்வை தமிழகத்தில் நேற்று 1.50 லட்சம் பேர் பங்கேற்று ஆர்வமுடன் எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: 13 மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்தது : 93 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
05 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற மக்களவைக்கான 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 13 மாநிலங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.
-
ஜெர்ஸியை வழங்கிய கோலி
05 May 2024ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை: போட்டி அட்டவணை வெளியீடு
05 May 2024துபாய் : ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான குழுக்கள் மற்றும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில்...
-
சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்வதற்கான இ-பாஸ் பதிவுமுறை துவங்கியது
05 May 2024கொடைக்கானல் : சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான பதிவு முறை நேற்று இரவு முதல் தொடங்கியது.
-
பஞ்சாப் அணியை வீழ்த்தி பழி தீர்த்த சென்னை அணி : புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்
05 May 2024தர்மசாலா : 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்த்தது சென்னை அணி.
-
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி ஹாட்ரிக் வெற்றி
05 May 2024பெங்களூரு : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகள் எஞ்சி இருக்க 24 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
-
ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
05 May 2024திருநெல்வேலி : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று
-
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றங்கள் வெறும் டேப் ரெக்கார்டராக இருக்கக்கூடாது : சுப்ரீம் கோர்ட் கருத்து
05 May 2024புதுடெல்லி : நீதிமன்றங்கள் வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் கூறுவதை அப்படியே பதிவு செய்யக்கூடிய வெறும் டேப் ரெக்கார்டர்களாக இருக்கக்கூடாது என்று வழக்கு ஒன்றின் தீரப்பில