எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, மார்ச் - 9 - மூன்று நாட்கள் இழுபறியாக நீடித்த காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு விவகாரத்தில் நேற்று ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் கொடுக்க தி.மு.க. மேலிடம் முடிவுசெய்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நீடித்துவந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டணி முறிந்துவிட்டதாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை கேட்டவுடனேயே இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசுகளை வெடித்து கோலாகலமாக கொண்டாடினார்கள். இதனால் தி.மு.க.வினர் கடும் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இதையடுத்து மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அக்கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க இருப்பதாகவும், ஆனால் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் கூறியிருந்தது. என்றாலும் தி.மு.க.வைச் சேர்ந்த 6 மத்திய மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், காந்திசெல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். ஏற்கனவே பழனிமாணிக்கம் டெல்லியில் இருக்கிறார் என்றும், அவரும் இவர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதங்களை நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பார்கள் என்றும் தி.மு.க. மேலிடம் அறிவித்து இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அந்த தேதியில் அந்த நேரத்தில் ராஜினாமா கடிதங்கள் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு திங்கள்கிழமை மாலையில் இவர்கள் ராஜினாமா கடிதங்களை கொடுப்பார்கள் என்று டெல்லியில் டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார். அதுவும் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை மத்திய நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பிரணாப்முகர்ஜி தொலைபேசியில் 2 முறை தொடர்புகொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தி.மு.க. தலைமை தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜினாமா செய்வது மேலும் ஒரு நாள் தள்ளிவைக்கப்படுவதாகவும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று முன்தினம் தி.மு.க. மத்திய மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவிதமான சமரசமும் ஏற்படவில்லை. முறிந்துபோனதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற கேள்விக்குறி பல்வேறு தரப்பினர் மத்தியில் நிலவிய நிலையில் நேற்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான குலாம்நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி விரும்பும் 63 தொகுதிகளையும் தர தி.மு.க. மேலிடம் சம்மதித்துவிட்டதாகவும், அதனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் ஆசாத் கூறினார். இந்த கூட்டணியில் இரு கட்சிகளும் சேர்ந்து செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த 3 நாட்களாக காங்கிரஸ் -தி.மு.க. உறவு நீடிக்குமா என்ற நிச்சயமற்ற தன்மை நிலவிவந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 க்கு மேல் ஒரு தொகுதிகூட ஒதுக்க முடியாது என்று அடம்பிடித்த தி.மு.க. மேலிடம் கடைசியில் காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையுமே அதற்கு வாரி வழங்கியுள்ளதன் மர்மம் என்ன என்பதுதான் தெரியவில்லை. இது திரைமறைவு ரகசியங்கள் இந்த விவகாரத்தில் இருக்கலாமோ என்ற சந்தேகத்தை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. தி.மு.க. காங்கிரஸ் இடையே மூன்று நாட்களுக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணி என்ன என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தன் குடும்பத்தினரை விசாரிக்கக் கூடாது. தன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தை தி.மு.க. தலைவர் நிர்பந்தம் செய்துவந்தார். அதே நிபந்தனையை கடந்த 3 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற பேரங்களுக்கு பிறகே நேற்று மாலையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசியல் நோக்கர்கள் மத்தியில் இது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. எது எப்படியோ, 3 நாட்கள் நீடித்த நாடகம் நேற்று ஒருவழியாக முடிவுக்கு வந்தது. இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர தி.மு.க. தலைவர்கள் தலைநகரில் படாதபாடு பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே டெல்லியில் முகாமிட்டு சோனியா முதல் பிரணாப்வரை அவர்கள் சந்தித்து தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டனர். காங்கிரசுக்கு 63 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறி தங்களது 3 நாள் நாடகத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்கள். என்னதான் உடன்பாடு ஏற்பட்டாலும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. இந்த கூட்டணி தேர்தல் கூட்டணியாக இருக்குமே தவிர, தொண்டர்கள் மத்தியில் உண்மையான கூட்டணியாக இந்த கூட்டணி இருக்குமா என்பது சந்தேகமே...
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.