எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாலசோர், நவ.16 - அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3,000 கி.மீ.தூரம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகில் பல்வேறு நாடுகளும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டு வரும் நிலையில் இந்தியாவும் ஏவுகணை உற்பத்தியில் பீடு நடை போட்டு வருகிறது. என்றாலும் சீனா போன்ற நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு இந்தியா தனது ஏவுகணை தொழில் நுட்பத்தை அவ்வப்போது அபிவிருத்தி செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு ரக அக்னி ஏவுகணைகளை தயாரித்து வெற்றி கண்டுள்ள இந்திய விஞ்ஞானிகள் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய அதி நவீன அக்னி - 4 என்ற ஏவுகணையை தயாரித்துள்ளனர். இந்த அக்னி - 4 ஏவுகணை சோதனை நேற்று ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோர் அருகில் வங்கக்கடலில் வீலர்ஸ் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை 3000 கி.மீ.தூரம் பறந்து சென்று எதிரியின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது.
அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை தரையிலிருந்து தரைக்கே பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதன் எடை 17 டன். இதன் நீளம் 20 மீட்டர்.
இந்த அக்னி 4 ஏவுகணை ஒரு மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை கொண்டது. எனவே இந்த ஏவுகணை இனி அக்னி 4 என்று அழைக்கப்படும் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறினர். நேற்று இந்த ஏவுகணை சர்வதேச கடல் பகுதியில் தயாராக வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி வாகை சூடியது.
சீனாவின் ஏவுகணை தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்டுள்ளதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்திய விஞ்ஞானிகளின் இந்த இமாலய வெற்றிக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர். இதே போல 5,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி ஏவுகணையும் விரைவில் சோதிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.
இந்த ஏவுகணைகள் அனைத்துமே உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
சோதனை செய்யப்பட்டு வெற்றி கண்ட ஏவுகணைகள் விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அக்னி 1 ஏவுகணை 800 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய திறனையும், அக்னி- 2 2500கி.மீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய திறனையும் பெற்றிருந்தன. தற்போது வெற்றிகரமாக ஏவப்பட்ட அக்னி 4 ஏவுகணை 3000 கி.மீட்டருக்கு அப்பாலும் சென்று தாக்கக்கூடிய வல்லமை படைத்தது. இந்த ஏவுகணையின் மூலம் சீனாவில் உள்ள முக்கிய நகரங்களான பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய விஞ்ஞானிகள் அடுத்ததாக அக்னி 5 என்ற ஏவுகணையை தயாரிக்க உள்ளனர். அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய இத்தகைய ஏவுகணைகள் 6000 கி.மீட்டர் தொலைவிற்கும் சென்று தாக்கும் வல்லமை பெற்றவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடியவையாக இருக்கும் என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அக்னி 4 ஏவுகணையைப் போன்ற அதி நவீன ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இதுவரை இருந்துவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024 -
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.