எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.- 20 - தமிழக சட்ட பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனுத்தாக்கலுக்கான கடைசி நாள் வரும் 26-ம் தேதியாகும். தி.மு.க. பொதுச் செயலாளரும், நிதி அமைச்சருமான அன்பழகன் முதல் நாளான நேற்று (19-ந் தேதி) சென்னையில் மனுத்தாக்கல் செய்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:- தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18-ந்தேதி தொடங்கி மே மாதம் 10-ந்தேதி 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 4, 11ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அந்த மாநிலத்தில் ஏற்கனவே மனு தாக்கல் தொடங்கிவிட்டது.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 13ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை) வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கப்படுவதை தலைமை தேர்தல் கமிஷன் இன்று காலை அதிகாரப்nullர்வமாக அறிவிக்கை வெளியிட்டது. தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட நேற்று மதியம் 12.50 மணி அளவில் மனு தாக்கல் செய்தார். எழும்nullர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சம்பத்குமாரிடம் அவர் மனு கொடுத்தார்.
சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.மகேஷ் குமார் நேற்று காலை சைதாப் பேட்டையில் உள்ள மாநகராட்சி 9வது மண்டல அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான பன்னீர்செல்வத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ய 26ந்தேதி கடைசி நாளாகும். 28ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 30ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் முழுவிவரம் வெளியிடப்படும். அதன் பிறகு பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டும். வேட்பு மனு தாக்கலுக்கு 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று பவுர்ணமி என்பதால் ஏராளமானவர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. 24-ந்தேதி மனு தாக்கல் விறுவிறுப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மனுக்கள் வாங்கப்படும் அலுவலகத்துக்கு வேட்பாளர்கள் கோஷம் போட்டப்படி நிறைய பேருடன் வரக் கூடாது. மனு தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு வேட்பாளர் அவரது ஆதரவாளர்களும் 3 கார்களில் மட்டுமே வரலாம். மனு தாக்கல் செய்யப்படும் போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் பெயர் எப்படி உள்ளதோ, அதே மாதிரிதான் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள் தலா 5 பேருடன் மட்டுமே வந்தனர். யாரும் கோஷம் போடவில்லை. இதனால் தேர்தல் அலுவலகங்களில் ஆரவாரம் எதையும் முன்பு போல பார்க்க முடிய வில்லை. வி.ஐ.பி. அந்தஸ்து வேட்பாளர்கள் கூட அமைதியாக வந்து மனு செய்து விட்டுச் சென்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.