எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.9 - தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரெயில்வே பட்ஜெட் குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
மத்திய ரெயில்வே மந்திரி தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட்டில், நவீன மயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
அனைத்துத் தொடர்வண்டி நிலையங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு வழங்குதல், இணையம் மூலம் நடைமேடைச் சீட்டு வழங்குதல், அலைபேசி வழியாக ரெயில் வருகை புறப்பாடு தகவல் அளித்தல், முக்கிய நிலையங்களில் ஒய்-ஃபை இணைய வசதி, முக்கிய ரெயில்கள், புறநகர் ரெயில்களில் தானியங்கிக் கதவுகள், முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கும் இணையம் மூலம் பயணச் சீட்டு பெறும் வசதி, அஞ்சல் நிலையங்கள் மற்றும் அலைபேசி மூலம் முன்பதிவு வசதி போன்ற அறிவிப்புகள், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப அமைந்து இருக்கின்றது.
கட்டமைப்புகளை மேம்படுத்தவும், புதிய தடங்கள் அமைக்கவும், உள்நாட்டு முதலீடுகள் மற்றும் அந்நீய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படும் என்ற அறிவிப்பு ரெயில்வே துறை தனித்தன்மையை இழந்து தனியார்மயம் ஆக்கப்பட்டுவிடும் என்ற கவலையைத் தருகிறது.
தமிழ்நாட்டுக்கு ஒருசில புதிய வண்டிகளைத் தவிர, நீண்ட கால எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை-கன்னியாகுமரி இரட்டைத்தடம் அமைக்கும் திட்டம், நிலுவையில் உள்ள பல்வேறு அகலப்பாதைத் திட்டங்கள், மின்மயமாக்கும் திட்டங்கள் மற்றும் புதிய தடங்கள் அமைத்திட அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ரெயில்வே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
சென்னை இராயபுரத்தில் நான்காவது முனையம் அமைப்பது, சென்னை மையத் தொடர்வண்டி (சென்ட்ரல்) நிலையத்தை உலகத்தரத்திற்கு உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் தருகிறது.
எரிபொருள் விலை ஏற்றத்துக்கு ஏற்பக் கட்டணங்களை உயர்த்துவது என முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்படுத்திய கட்டண நிர்ணய ஆணையம் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவ்வப்போது கட்டண உயர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது பொதுமக்களின் சுமையை மேன்மேலும் அதிகரிக்கவே செய்யும்.பட்ஜெட்டில் பொதுவாக வரவேற்கத்தக்க பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்:
முன்பதிவு செய்த பயணிகளின் பெயர்களை டிஜிட்டல் முறையில் வைப்பது உட்பட ரயில்வே பட்ஜெட்டில் ஆடம்பரமான அறிவிப்புகளே வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் ஆக சதானந்த கவுடாவின் அறிவிப்புகள் இருக்கின்றன.
ஏற்கனவே காங்கிரஸ் அரசு திட்டமிட்டு, செயல்படுத்திய பல திட்டங்கள், இன்று புதிய அறிவிப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1 ரூபாய் வருமானத்தில் 93 பைசா செலவாகிறது என்று சொல்லியிருக்கிற சதானந்த கவுடா, வருமானத்தை உயர்த்துவதற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் என்ன நடவடிக்கை என்று சொல்லாமல், நேரடி அந்நிய முதலீட்டை கேட்போம் என்று அறிவிக்கிறார். ரயில்வே துறையை தனியார்மயமாக்குதலும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ரயில்வே துறையை திறந்து விடுவதற்கும் இன்றைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டண உயர்வு திரும்பப் பெறப்படவில்லை. மொத்தத்தில் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தரும் ரயில் பட்ஜெட் ஆகும்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்:
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேரில் வலியுறுத்தியும், அவை பற்றிய அறிவிப்பு ஒன்று கூட இடம்பெறாதது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதாக அவர் குறைகூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தில் 2014 -15 ஆம் ஆண்டிற்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், அதிக தொடர்வண்டிகளும் அறிவிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்திருக்கிறார் தொடர்வண்டி அமைச்சர் சதானந்த கவுடா.
தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 58 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் 5 மட்டுமே தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளன. இவற்றிலும் சென்னை-ஷாலிமார் பிரீமியர் விரைவு வண்டி, சென்னை-அகமதாபாத் வாரமிருமுறை விரைவு வண்டி, சென்னை-விசாகப்பட்டினம் வார விரைவு வண்டி ஆகியவை சென்னையை தாண்டி தமிழகத்திற்குள் வராதவை. இவற்றால் தமிழகத்திலுள்ள சாதாரண மக்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
மீதமுள்ள இரு தொடர்வண்டிகளில் ஒன்றான பெங்களூர் - ஓசூர் புறநகர் தொடர்வண்டி பெங்களூரிலுள்ள நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைத்துவர வேண்டும் என்ற நோக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, இதனால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படாது.
கடந்த 5 ஆண்டுகளாகவே தொடர்வண்டித்துறை திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய தொடர்வண்டிகளையும், திட்டங்களையும் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, தொடர்வண்டி நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவாவது தொடர்வண்டித் திட்டங்கள் தொடர்பான தமிழகத்தின் கோரிக்கைகளை அமைச்சர் சதானந்த கவுடா நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.