எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜூலை 13 - பால் உற்பத்தியை பெருக்கி தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை ஆவின் மகாசபை கூட்டத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 25வது மகாசபை கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை ஆவின் தலைவர் சி. தங்கம் என்ற கே.சி. தங்கராஜன் தலைமை வகித்தார். மதுரை துணை பதிவாளர் சண்முகராஜ்குமார், தேனி துணை பதிவாளர் என். கங்காபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ஆவின் பொது மேலாளர் சூ. கிருஷ்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை முதல்வர் அம்மா நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலையில் இந்திய அளவில் பொருளாதாரத்தில் மந்த சூழ்நிலை நிலவி வந்தாலும் அதனுடைய பாதிப்புகள் தமிழக மக்களுக்கு இருக்க கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக பாதுகாப்பு திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தந்து வருகிறார். அவரது தொலைநோக்கு திட்டங்கள் எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உள்ளது. பொதுமக்கள் தரக்கூடிய வரிப்பணத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான தொகையை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக முதல்வர் அம்மா ஒதுக்கீடு செய்து வருகிறார். அவரது தொலைநோக்கு திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி அமல்படுத்தி வருகிறது. அப்படியென்றால் சிறப்பான நிர்வாகத்தை முதல்வர் அம்மா தமிழகத்தில் நடத்தி வருகிறார்.
கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 4 லட்சம் பசுமை வீடுகளை முதல்வர் அம்மா கட்டித் தந்துள்ளார். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடியே 75 லட்சம் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கு அம்மா உத்தரவிட்டுள்ளார். இப்படிப்பட்ட சமூக நல திட்டங்களை முதல்வர் அம்மா தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அவரது சிந்தனை ஆற்றலின் பலனாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கறவை மாடுகள், 4 வெள்ளாடுகள் போன்றவற்றை இலவசமாக தந்து வருகிறார். இதனால் தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி இன்றைக்கு 27 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இப்படி பால் உற்பத்தியை அதிகரித்து தமிழகத்தில் ஒரு வெண்மை புரட்சியை முதல்வர் அம்மா ஏற்படுத்தி உள்ளார்.
பெண்களின் நலன் காக்கவும் முதல்வர் அம்மா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அவர்களது வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு பெண்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மனிதவளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால் ஒரு தரமான கல்வியை தர வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், காலனி முதல் பென்சில், பேனா வரை வழங்கி வருகிறார். வெளிநாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் அளவுக்கு நமது மாணவர்களின் தரத்தை மேம்படுத்த இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி கல்வியின் தாயாக முதல்வர் அம்மா விளங்கி வருகிறார். இயற்கையின் சீற்றங்கள், வறட்சி, சுனாமி ஏற்பட்டாலும் அதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு முதல்வர் அம்மா முன்னுரிமை அளித்து வருகிறார்.
மதுரை ஆவின் பால்வள ஒன்றியம் 1967ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்றைக்கு 808 பால் உற்பத்தியாளர்களை கொண்டு 33 ஆயிரத்து 487 உறுப்பினர்களை பெற்று ஒரு மாபெரும் நிறுவனமாக திகழ்கிறது. தமிழகத்திலே லாபம் ஈட்ட கூடிய முதல் சங்கமாக மதுரை ஆவின் பால் கூட்டுறவு சங்கம் உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியை பெருக்கி லாபத்தை ஈட்டி மாநில அளவில் ஒரு தனி வரலாற்றை மதுரை ஆவின் நிறுவனம் படைத்துள்ளது. இந்த உயர்வுக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பணிகள் சிறப்பானதாகும். பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நான் நன்றிக்கடனை செலுத்துகிறேன். மேலும் மதுரை ஆவின் நிறுவனம் தினமும் தற்போது உற்பத்தி செய்யப்படும் 3 லட்சம் லிட்டர் பாலை இனிவரும் காலத்தில் 5 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற ஒரு நல்ல தகவலை இங்கு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, ஆர். கோபாலகிருஷ்ணன் எம்.பி., ஆர். பார்த்திபன் எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ம. முத்துராமலிங்கம், ஏ.கே. போஸ், மேலூர் ஆர். சாமி, கே. தமிழரசன், எம்.வி. கருப்பையா, ஆர். சுந்தர்ராஜன், துணை மேயர் கு. திரவியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே. துரைபாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ. ராஜா, தெற்கு மண்டல தலைவர் பெ. சாலைமுத்து, வடக்கு மண்டல தலைவர் கே. ஜெயவேல், மேற்கு மண்டல தலைவர் கே. ராஜபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் தளபதி ஆர். மாரியப்பன், ஏ.கே. முத்து இருளாண்டி, வி.கே.எஸ். மாரிச்சாமி, பூமிபாலகன், எம்.என். முருகன், பகுதி பேரவை முன்னாள் செயலாளர் வைகை மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி. கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர், குமுதா, சண்முகவள்ளி, ராமன், மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் மா. இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், சோழவந்தான் தொகுதி செயலாளர் சி.பி.ஆர். சரவணன், மதுரை ஆவின் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே. பழனிச்சாமி, தலைவர் கே. பாண்டி, இணை செயலாளர் கே. பரமானந்தம், பொருளாளர் ஏ. வேல்முருகன், மதுரை ஆவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வி.பி. அமாவாசை, பி. கதிரேசன், இ. பெரியசாமி, கே. சுந்தரம், ஜெயலட்சுமி, எஸ். இளையராஜா, கா. ராஜேந்திரன், நா. பிரீதா, ஆர். ஜோதி, து. தனராஜ், கே. சாமிதாஸ், எஸ். மகாதேவன், வி. போதும்பொண்ணு, எம். அமுதவள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை ஆவின் துணை தலைவர் எம். செல்வம் நன்றி தெரிவித்தார்.
மகாசபை கூட்டத்தில் பால் கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு நினைவு பரிசாக கேடயமும், டிராவல் பேக்கும் வழங்கப்பட்டது. கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு மதுரை ஆவினில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல