எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லார்ட்ஸ், ஜூலை.20 - இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் அபார பந்துவீச்சுக்குக் கட்டுப்பட்ட இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ்சில், 105.5 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. முகமது சமி 14, இஷாந்த் சர்மா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேலும் 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் முகமது சமி (19 ரன்கள்). இதனால் 91.4 ஓவர்களில் 295 ரன்களோடு முடிவுக்கு வந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ். இஷாந்த் சர்மா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் ரஹானேவின் சதம், அணியின் ரன் எண்ணிக்கையை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தியது கவனிக்கத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்கும், ராப்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 10.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்தது. குக் 10 ரன்களிலும், ராப்சன் 17 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் சோபிக்காத குக், இந்த முறையும் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றினார். பின்னர் வந்த இயான் பெல் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, 31.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இங்கிலாந்து.
இதையடுத்து கேரி பேலன்ஸுடன் இணைந்தார் ஜோ ரூட். இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்கப் போராடிய இந்த ஜோடி, 14.5 ஓவர்கள் களத்தில் நின்று 43 ரன்கள் சேர்த்தது. 50 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்த ஜோ ரூட், ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, மொயீன் அலி களம்புகுந்தார். மறுமுனையில் பொறுப்போடு ஆடிய கேரி பேலன்ஸ் 115 பந்துகளில் அரைசதம் கண்டார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய பாலன்ஸ், அலி ஜோடி, ஸ்கோரை ஸ்திரப்படுத்தியது. 186 பந்துகளில், பாலன்ஸ் சதத்தைக் கடந்தார். அடுத்த சில ஓவர்களில் முரளி விஜய் வீசிய பந்தில், அலி 32 ரன்களுக்கு வெளியேறினார்.
பாலன்ஸ் 110 ரன்கள் எடுத்திருந்த போது, புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவின் கை மேலோங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 219 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தது. ப்ரையர் மற்றும் ப்ளங்கெட் களத்தில் இருந்தனர். இந்தியாவை விட இங்கிலாந்து 76 ரன்கள் பின்தங்கியிருந்தது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், ப்ரையர் 23 ரன்கள் எடுத்த நிலையில், சமியின் பந்துவீச்சில் தவாணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டோக்ஸை ரன் ஏதும் எடுக்க விடாமல் புவனேஸ்வர் குமார் பவுல்ட் செய்தார். பிராட் 4 ரன்களில் புவனேஸ்வரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆண்டர்சன் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ப்ளங்கெட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் சேர்த்தார்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய வேகப் பந்துவீச்சாளர் புனவேஸ்வர் குமார், இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்தினார். இதனால், அந்த அணியால் முதல் இன்னிங்ஸ்சில் 24 ரன்கள் மட்டுமே முன்னிலை வகிக்க முடிந்தது. புவனேஸ்வர் 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சமி மற்றும் முரளி விஜய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.