எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.230 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள குடிநீர் பற்றாக்குறை சமாளிப்பதற்காக ரூ. 651 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் 88 ஆயிரத்து 247 திட்டப்பணிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சட்டசபையில் நேற்று முன்தினம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
சட்டசபையில்நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்ததும்,
கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மிக குறைந்த அளவு மழை பெறும் 11 மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சி, 40 நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் 67 கோடியே 80 லட்சம் செலவில் எடுத்தக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.50 கோடியே 87 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 20 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையினை சமாளிக்க ரூ.77 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
31 மாவட்டங்களில் 2335 நீர் ஆதாரங்களை புணரமைத்தல், புதிய நீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1734 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இப்பணிகள் மழை அளவு குறைவாக உள்ள மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் குறைவின்றி வழங்க மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.
குடிநீர் தட்டுப்பாடு உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோம் செய்யும் பணிகளுக்காக மொத்தம் ரூ.73 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு நிதியாக ரூ. 26 கோடியே 93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள் நமது சொந்த நிதியிலிருந்து ரூ.46 கோடியே 57 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 612 பணிகள் எடுக்கப்பட்டு 375 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால நடவடிக்கையாக 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உலக வங்கி மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு, தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், ஜப்பான் கூட்டுறவு முகமை கே.எப்.டபிள்யூ, மற்றும் ஐ.யூ.டி.எம். போன்ற திட்டங்களின் நிதி உதவியுடன் ரூ. 3473 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டு, பணிகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இத்திட்டங்கள் முடிவுறும் நிலையில் மேலும் 585 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க இயலும்.
பேரூராட்சிகளுக்கு குடிநீர்
கடந்த 3 ஆண்டுகளில் பேரூராட்சிகளில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்துவதற்காக 250 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை குறைவு காரணமாக 2014–15ம் ஆண்டில் தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சிகளில் புதிய குடிநீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், பழுதடைந்த கை பம்புகளை சீரமைக்க தேவையான உதிரி பாகங்கள் வாங்குதல், குடிநீர் குழாய் நீடிப்பு செய்தல், நீராதாரம் குறைந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்காணும் பணிகள் ரூ.49 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்டப்டு வருகின்றன.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.17 கோடியே 33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி தமது சொந்த நிதியலிருந்து ரூ.31 கோடியே 69 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 1821 பணிகள் எடுக்கப்பட்டு, 1688 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஊராட்சிகள்
வறட்சி காலத்தில் ஊரக பகுதிகளில் குடிநீர் தேவையினை சமாளித்திட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.52 கோடியே 75 லட்சம் பெறப்பட்டு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ரூ. 184 கோடியே 13 லட்சம் அளவிற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பிற திட்ட நிதியிலிருந்து குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் 2013–14ம் ஆண்டில் பிற திட்டங்கள் மூலம் ரூ. 948 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் 2013–14ம் ஆண்டில் 83 ஆயிரத்து 334 பணிகள் ரூ. 1185 கோடியே 12 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி நடவடிக்கைகளின் விளைவாக குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையிலும் மாற்று குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதன் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2024.
02 May 2024