முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதி திராவிட மாணவர்களுக்கான கட்டணம்: அமைச்சர் உத்தரவு

புதன்கிழமை, 23 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 24 - ஆதி திராவிடர் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும் வரை அந்த மாணவர்களிடம் தனியார் கல்லூரிகள் அதை வசூலிக்க கூடாது என்று உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

பேரவையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லி பாபு பேசுகையில், தனியார் கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் ஆதி திராவிட மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தி வருவது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் பல கல்லூரிகள் ஆதி திராவிட மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்த சொல்லி வலியுறுத்துகின்றன என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனியப்பன், தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி பெறும் ஆதி திராவிடர் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்துகிறது. இந்த கட்டணத்தை அரசு செலுத்தும் வரை கல்லூரி நிர்வாகம் மாணவர்களிடம் வசூலிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்