எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ரீநகர், செப் 23:
எல்லை பகுதியில் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க 15 படை பிரிவுகளை இந்திய தரப்பு லடாக்கில் குவித்துள்ளது.
1960 களின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சீன பிரதமர் சூயென்லாயும் நெருக்கமாக இருந்த போதிலும் அருணாசல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தது. இந்த நிகழ்வு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது. கால ஓட்டத்தில் விரிசல் தணிந்து விட்டது. என்ற போதிலும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு திருப்திகரமாக இருக்கிறது என்று கூற முடியாது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அவ்வப்போது சிறிய அளவில் மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன. என்ற போதிலும் 1960களுக்கு பிறகு முழு அளவிலான போர் நடைபெறவில்லை. கடந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் சீன படையினர் முகாமிட்டார்கள். தவ்லத் பெக் ஓல்டி என்ற இடத்தில் இருந்து அவர்கள் வெளியேற மறுத்தனர். எல்லை பகுதியில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டிருந்த காப்பரண்களை அகற்ற வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினர். இதற்கு முதலில் இந்தியா சம்மதிக்கவில்லை. பிறகு வேறு வழியின்றி காப்பரண்களை இந்தியா அகற்றியது. இதன் பிறகே சீன ராணுவ வீரர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்பினார்கள்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு முற்றிலும் மாறான நிகழ்வுகளே நடைபெற்று வருகின்றன. காஷ்மீருக்குள் சீன படையினர் ஊடுருவினார்கள். லடாக்கில் உள்ள சுமர் பகுதியில் நூற்றுக்கணக்கான சீன ராணுவ வீரர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாரு இந்திய ராணுவ வீரர்கள் கூறினார்கள். ஆனால் சீன ராணுவ வீரர்கள் அதை ஏற்கவில்லை. மாறாக இந்திய ராணுவ வீரர்களை சீன ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் அங்கு திரண்டு சென்றனர். இதன் பிறகு நிலைமை ஓரளவு சீரடைந்தது. லடாக் பகுதியில் சீன படை வீரர்கள் அத்துமீறியுள்ளதை சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு சென்றார். அத்துமீறல் நடைபெற்றிருந்தால் சீன படை வீரர்களை வாபஸ் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜி ஜின்பிங் உறுதியளித்தார். ஆனால் அதே நேரத்தில் இரு தரப்பாலும் ஏற்கப்பட்ட எல்லை நிர்ணயம் செய்யப்படாதது தான் பிரச்சினைக்கு மூல காரணம்.
எனவே துல்லியமாக எல்லையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதுவரை இப்பிரச்சினை ஓயாது என்பதையும் ஜி ஜின்பிங் குறிப்பிட தவறவில்லை. இந்தியாவுக்குள்ளும் சீனர்கள் சாலை அமைத்து வருகிறார்கள். அதற்கான கட்டுமான பொருட்களையும் இதர தளவாடங்களையும் சீனாவில் இருந்து கொண்டு வருகிறார்கள். லடாக்கில் உள்ள டிபிள் என்ற இடம் சீன எல்லையில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த இடம் வரை சாலை அமைத்தே தீர வேண்டும் என்பதில் சீனர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த இந்திய தரப்பு மேற்கொண்ட முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.
இந்தியாவுக்குட்பட்ட பகுதியில் சீனர்கள் 7 கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். 4 டிரக்குகள், 3 ஜீப்புகள் ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். எல்லைக்கு அப்பால் தங்கியுள்ள 500 சீன ராணுவத்தினர் அவர்களுக்கு தேவையானவற்றை அவ்வப்போது அளித்து வருகிறார்கள். சீன ராணுவ வீரர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் இடம் நடுங்க வைக்கும் குளிர் மிகுந்த பகுதியாகும். அங்கு மைனஸ் 3 டிகிரி சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இம்மாதம் 10ம் தேதி எத்தகைய நிலை காணப்பட்டதோ அதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. ஆனால் சீனா இதை பொருட்படுத்த மறுக்கிறது. எல்லை கட்டுப்பாடு கோட்டின் அருகில் 1,05,000 இந்திய ராணுவ வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு லடாக் பகுதியில் மட்டும் 15,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 15 படை பிரிவுகளை லடாக் பகுதிக்கு அனுப்ப இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேவைப்பட்டால் அசாம் ரைபில்சை சேர்ந்த 40 ஆயிரம் வீரர்களை எல்லை பகுதிக்கு அனுப்பவும் மத்திய அரசு உத்தேசித்துள்ளது. தவுலத்பெக் ஓல்டியில் இருந்து சமர் வரையிலான பகுதியில் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சீன ராணுவத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் வழிதவறி இந்திய பகுதிக்குள் நெடுந்தூரம் வந்து விட்டார். அவரை இந்திய ராணுவத்தினர் பிடித்து வைத்திருந்தனர். இந்திய ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். எல்லை பகுதியில் நிலைமை மோசமடைந்து கொண்டே இருக்கிறது என்ற போதிலும் ராஜதந்திர நடவடிக்கை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று இந்திய தரப்பும் சீன தரப்பும் நம்பிக்கை தெரிவித்துள்ளன. வெகு விரைவில் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என்று இந்திய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன் கூறியுள்ளார். வரும் 24ம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்து பேசுவதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால் எல்லையில் பதட்டம் அதிகரித்ததையடுத்துன அனுமதியை இந்திய அரசு நேற்று முன்தினம் ரத்து செய்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .