முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் உற்பத்தியாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.27 - தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி யதற்கு பால் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் கூறியதாவது:

தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி யுள்ளது. பசும்பாலின் கொள்முதல் விலையை ரூ.23 ல் இருந்து ரூ.28 ஆகவும், எருமை பாலின் கொள்முதல் விலையை ரூ. 31 ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தி வழங்கியதற்கு மிக்க நன்றி. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகள் எண்ணிக்கை வரும் நாட்களில் உயர வாய்ப்புள்ளது..

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ஏ. பொன்னுசாமி கூறும்போது, "பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருப்பது மகிழ்ச்சியான விஷயம், என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்