எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் பசும்;பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 111-வது பிறந்த நாள் விழா மற்றும் 56-வது குருபூஜையினை முன்னிட்டு நடைபெற்ற அரசு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவப்படத்தினை திறந்து வைத்து மரியாதை செலுத்தி, அஞ்சல் துறையின் சார்பாக தேவர் திருமகனாரின் முழு உருவம் பொறித்த சிறப்பு அஞ்சல் அட்டையினை வெளியிட, அதனை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் பெற்றுக்கொண்டார். பின்பு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக மொத்தம் 414 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 92 லட்சத்து 42 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார். இவ்விழாவில்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் க.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்புரை வழங்கினார்கள். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று தலைமையுரை வழங்கினார். தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அன்வர்ராஜா முன்னிலையுரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் (முதுகுளத்தூர்) எஸ்.பாண்டி வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி வரவேற்புரை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.
இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்.சி.சீனிவாசன் விழா பேருரையாற்றி பேசியதாவது:- ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தது. தென்னக அரசியலில் தேவர் கையிலெடுத்த இந்த குற்றப் பரம்பரை சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்கிற ஆயுதம் இவர் மீது தனித்தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920ஆம் ஆண்டில் இருந்து அப்போதைய சென்னை மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த குற்றப்பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராக தேவர் முதன் முதலாக போராடினார். தேவர் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி பசுமலையில் மகாலெட்சுமி ஆலை தொழிலாளர் நலன் கூட்டமைப்பை 1930-ல் உருவாக்கி தேவரே தலைமையேற்று நடத்தினார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அழைத்து செல்ல வைத்தியநாத அய்யர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலய பிரவேச நடவடிக்கை குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாத அய்யர், எம்.எம்.ஆர்.சுப்புராமன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் கலந்து கொண்டார். ஆலய பிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும், உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சி கோயிலில் ஆலய பிரவேசம் செய்கையில் அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்றார். அந்த ரவுடி கும்பலை எச்சரிக்கிறேன். வைத்தியநாத அய்யர் அரிசனங்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடி கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம் தேவர் அவர்களின் அறிக்கை வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது.
1927ம் ஆண்டு தனது 19ம் வயதில் காங்கிரஸ் கட்சியில் தன்னை சேர்த்துக் கொண்டார். 1937 மதராஸ் மாகாண தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்;ந்த ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்து மாபெரும் வெற்றி பெற்றார். 1939இல் சுபாஸ் சந்திரபோஸ் பார்வேடு பிளாக் கட்சியை உருவாக்கிய போது அதில் முக்கிய பங்கு வகித்து இந்திய அரசியலில் மிகப் பெரிய இடத்திற்கு சென்றார். 1946இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்றார். 1952ம் ஆண்டு குடியரசு பெற்ற பின் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்ற தேர்தலிலும், அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இதில் முதுகுளத்தூர் சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்தார். 1957ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார். 1962ல் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி தொகுதிக்குச் செல்லாமலே மாபெரும் வெற்றி பெற்றார். இவர் நான்குமுறை சட்டமன்ற தேர்தலிலும், மூன்று முறை நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெற்றார். 1959ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி நாடாளுமன்றத்தில் பேச மாலை 4.45 முதல் 5 மணி வரை கால் மணி நேரம் மட்டுமே பேச ஒதுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் காலத்தில் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்டது. சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு, புரட்சித் தலைவி அம்மா சிலை அமைத்து தந்தார்கள். 09.02.2014 அன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 13 1ஃ2 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாறு ஆறாவது பாடப்புத்தகத்தில் முதல் இரண்டு பக்கங்கள் இடம் பெற்றிருந்தது. அதற்கு பிறகு வந்த நமக்கெதிரான அரசு அதை எடுத்து விட்டது. சமீபத்தில் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, இது என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஈ கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரிடம் எடுத்து சொல்லியிருக்கிறேன். தேவர் திருமகனாரின் வாழ்க்கை வரலாற்றை மீண்டும் 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசியம் காத்த செம்மல் என்ற தலைப்பில் இரண்டு பக்கத்திற்கு பதிலாக 4 பக்கங்களுக்கு இடம் பெற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பேசினார். இவ்விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) உல.இரவீந்திரன்;, செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநர் (களவிளம்பரம்) த.சரவணன், பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், மாவட்ட வனஉயிரினக் காப்பாளர் டி.கே.அசோக்குமார், உட்;பட அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.