எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 296 நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டு தயார்நிலையில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நோய் தடுப்பு நடவடிக்கை
தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத் துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவக் குழுக்கள் எண்ணிக்கை 216-லிருந்து 296 அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 487 தங்கும் முகாம்கள்அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் மொத்தம் 185 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடையின்றி வழங்க... இம்மருத்துவ முகாம்களில் இதுவரை 43,825 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் மருந்துகள், மாத்திரைகள், தடுப்பூசிகள், சிரப்பு மற்றும் சேற்றுப்புண்ணிற்கான ஆயின்மென்ட் ஆகியவை தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது மக்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து மருந்துகளும் போதுமான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தேவையான மருந்து மாத்திரைளை தங்கு தடையின்றி வழங்க ஏதுவாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மருந்து கிடங்குகள் இன்றும் செயல்பட ஆணையிடப்பட்டுள்ளது.
குளோரின் சோதனை.....பொது சுகாதாரத் துறையினரால் தண்ணீர் மூலம் பரவும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து குடிநீரில் சரியான அளவு குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குளோரின் பரிசோதனை குழுக்கள் உறுதி செய்கின்றன. குடிநீரில் குளோரின் சோதனை செய்வதற்காக 15000 எண்ணிக்கையிலான குளோரின் அளவினை காட்டும் கிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன்படுத்தும் நிலையில் குடிநீரில் குளோரின் அளவு 0.5 பி.பி.எம் அளவிற்கும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் 2.0 பி.பி.எம் அளவிற்கும் இருப்பதை இக்குழுக்கள் உறுதி செய்யும்.
ஜெனரேட்டர் வசதி...பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதர அரசு மருத்துவமனைகளில் மின் விநியோகம் தடையில்லாமல் கிடைக்க ஜெனரேட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள துணை இயக்குநர்களுக்கு (சுகாதார பணிகள்) உதவியாக பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து துணை இயக்குநர்களும், பொது சுகாதாரத் துறையின் சென்னை அலுவலகத்தில் இருந்து இணை/கூடுதல் இயக்குநர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அவர்களும் நேரடியாக சென்று பணிகளை மேற்பார்வையிடவும் தக்க ஆலோசனை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
நிலவேம்பு குடிநீர்....பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தேவையின் அடிப்படையில் அவசர நிலையினை சமாளிக்க ஏதுவாக ரூ.5 லட்சம் வரையில் செலவு செய்திட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை உரிய நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும். இதுவரை 50000 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில் இப்பணி விரிவுபடுத்தப்படும்.பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையில் மேற்காணும் பணிகள் மக்கள் நல்வாழ்வுத்துறையால் எவ்வித தொய்வும் இல்லாமல் போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.