எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கண்டி,17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் வென்றது இங்கிலாந்து அணி.கண்டியில் நடந்த இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோய் ரூட்டின் அபாரமான சதம், சுழற்பந்து வீச்சாளர்கள் லீச், மொயின் அலி ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைத்தே 57 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இங்கிலாந்து அணி.இதன் மூலம் கடந்த 2001-ம் ஆண்டுக்குப் பின் டெஸ்ட் தொடரை இலங்கையில் இப்போதுதான் இங்கிலாந்து வென்றது. இதற்கு முன் 2001-ம் ஆண்டு நாசர் ஹுசைன் தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை வென்றிருந்தது. ஆசிய கண்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றது. கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்று கைப்பற்றியுள்ளது. 2-வது இன்னிங்ஸில் சதம் அடித்து அணியைக் கவுரமான ஸ்கோரை எட்ட உதவிய ரூட் ஆட்ட நாயகனராக அறிவிக்கப்பட்டார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் மொயின் அலி காணப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிக்கு அடுத்த இடத்துக்கு இங்கிலாந்து முன்னேறும். கண்டி மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி 336 ரன்கள் சேர்த்து, 46 ரன்கள் முன்னிலை பெற்றது. 46 ரன்கள் பின்னடைந்த நிலையில் 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. ஆனால், கேப்டன் ஜோய் ரூட் நிதானமாக பேட் செய்து சதம் அடித்து அணியை வழி நடத்தினார். இந்த இன்னிங்ஸில் ரூட்டின் 124 ரன்கள், பர்ன்ஸ 59 ரன்கள், போக்ஸ் 65 ரன்கள் சேர்த்து அணியைக் காத்தனர். 2-வது இன்னிங்ஸில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணி .இதையடுத்து, 301 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கையின் முன்னணி வீரர்கள் சொதப்பிய நிலையில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கருணா ரத்னே 57, மெண்டிஸ் 88 ரன்களும் சேர்த்து அணியை வழிநடத்தினார்கள். ஆனால், அடுத்துவந்த வீரர்கள் மோசமாக பேட் செய்ததால், 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் சேர்த்திருந்தது.இலங்கை மைதானம் வேகப்பந்துவீச்சு முழுமையாக ஒத்துழைக்கவில்லை.
சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கமாக இருந்ததால், லீச், மொயின் அலி, ரூட் ராஷித் கான் ஆகியோர் ராஜ்ஜியமாக இருந்தது. இலங்கை மண்ணில் அந்த அணி வீரர்களுக்குப் பந்துவீச்சில் கடும் நெருக்கடி அளித்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 226 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் விளிம்பில் இலங்கை அணி இருந்தது. வெற்றிக்கு 75 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கையில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.விக்கெட் கீப்பர், டிக்வெலா 35 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், லீச், மொயின் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து கடைசி வரிசை வீரர்களான லக்மால்,புஷ்பகுமாரா, பெரேரா ஆகியோரின் விக்கெட்டுகள் சரிய ஆட்டம் 32 ரன்களில் முடிவுக்கு வந்தது. 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்களில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் லீச் 83 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒட்டுமொத்தமாக இந்த டெஸ்டில் 8 விக்கெட்டுகளை லீச் வீழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.