முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன். ராதாகிருஷ்ணன் புகார் எதிரொலி? முதல்வர் பினராய் விஜயனை அழைத்து பேசிய கேரள கவர்னர்

வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,சபரிமலை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக கேரள கவர்னர் பி. சதாசிவம், முதல்வர் பினராய் விஜயனை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கேரள கவர்னரிடம் சபரிமலையில் நடந்தவை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் போனில் கூறியதாகவும் அதையடுத்து கவர்னர், முதல்வர் பினராயை அழைத்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.இந்தச் சந்திப்பு கவர்னர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் நடந்த இந்தச் சந்திப்பில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையால் நடத்தப்பட்ட விதம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அம்மாநில கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள  அறிக்கையில்,மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட குறைகள் குறித்து முதல்வரிடம் கவர்னர் விசாரித்தார். காவல்துறையின் செயல்பாடுகள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்தும், சபரிமலையில் 144 தடை உத்தரவை நீக்கிக் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவுகள் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. இவை அனைத்தும் விரைவில் சரிசெய்யப்படும் என முதல்வர் பினராய் விஜயன் கவர்னரிடம் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து