எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, - மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, கீழையூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் 44வது கிளையினை மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு நேற்று திறந்து வைத்து 335 பயனாளிகளுக்கு ரூ.1,61,47,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, விவசாயிகளின் நலன் கருதி மத்திய கூட்டுறவு வங்கியின் 44 - வது கிளை கீழையூரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இரு மடங்காக உற்பத்தி, மூன்று மடங்காக வருமானம் பெறும் பொருட்டு 2011 முதல் 30.11.2018 வரை 76,95,561 விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.38,728.08 கோடி அளவிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் (2018-19) மட்டும் மாநில அளவில் ரூ.8000 கோடி வட்டியில்லாப் பயிர்க்கடன் வழங்கப்பட வேண்டும் என குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 30.11.2018 வரை, 6,55,099 விவசாயிகளுக்கு ரூ.4,518.01 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.160 கோடி அளவிற்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் இதுவரை, 10,382 விவசாயிகளுக்கு ரூ.74.91 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 43 கிளைகளுடன் மதுரை மாவட்டம் மற்றும் தேனி மாவட்டத்தினை முழுமையாக செயல் எல்லையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கீழையூர் கிளை மூலமாக மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், கீழவளவு, கொங்கம்பட்டி, சருகுவலையப்பட்டி, தனியாமங்கலம், நாவினிப்பட்டி, தும்பைப்பட்டி, பூதமங்கலம் மற்றும் எட்டிமங்கலம் ஆகிய ஏழு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின், விவகார எல்லையில் உள்ள 16 வருவாய் கிராமங்களில் உள்ள மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களும் பயனடைவார்கள்.
இவ்வங்கி மைய வங்கியியல் தீர்வு முறை மூலம் அனைத்து கிளைகளும் கணினிமயமாக்கப்பட்டு விரைவான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இவ்வங்கியின் பிரதான கிளையில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம் நிறுவப்பட்டு 6,877 வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 131 பொதுச் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்களுக்கு சாதிச்சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், திருமண உதவி நலத்திட்ட சான்றிதழ், பட்டா, சிட்டா நகல் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை போன்ற பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்குவதற்காகவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 2,104 வேளாண் சேவை மையங்கள் துவங்கப்பட்டன. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் 30.11.2018 வரை தமிழகம் முழுவதும் உள்ள 12,70,285 விவசாயிகளுக்கு ரூ.3,613.61 கோடியும், மதுரை மாவட்டத்தில் 13,854 விவசாயிகளுக்கு ரூ.36.64 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உன்னதத்திட்டமான அம்மா மருந்தகம் மூலம் அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளைப் பெற்று பயனடையும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா மருந்தகங்கள் மற்றும் 20 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 35 மருந்தகங்கள் மூலம் இதுவரை ரூ.54.67 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் 111 அம்மா மருந்தகங்கள் மற்றும் 170 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 281 மருந்தகங்கள் மூலம் 30.11.2018 வரை ரூ.686.89 கோடி மதிப்பிலான தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் அம்மாவின் ஆணையின்படி, ஏழை, எளிய மக்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மகத்தான திட்டமான விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின்படி 1,78,21.946 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் அரும்பணியினை கூட்டுறவுத்துறையால் நடத்தப்பட்ட 32,793 நியாயவிலைக்கடைகள் மேற்கொண்டு வருகின்றன. கூட்டுறவு நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் மற்றும் சிறப்பு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக சென்றடையும் வகையில் புகார்கள் ஏதுமின்றி பணியாற்றிட வேண்டும் எனவும், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்துக் கொள்ளுமாறும், தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் 72 பயனாளிகளுக்கு ரூ.33,12,000 மதிப்பிலான முதலீட்டுக்கடன்களும், 175 பயனாளிகளுக்கு ரூ.28,30,000 மதிப்பிலான மகளிர் சுயஉதவிக்குழு கடன்களும், 58 பயனாளிகளுக்கு ரூ.43,05,000 மதிப்பிலான பயிர்க்கடன்களும், 20 பயனாளிகளுக்கு ரூ.5,00,000 மதிப்பிலான மகளிர் சிறு வணிக கடன்களும், 10 பயனாளிகளுக்கு ரூ.52,00,000 மதிப்பிலான பணியாளர்கள் சிக்கன நாணயச்சங்ககடன்கள் என மொத்தம் 335 பயனாளிகளுக்கு ரூ.1,61,47,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் பா.இராஜேஸ் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ம.தீபாசங்கரி, மதுரை மத்திய கூட்டுறவு வங்கியின் பொது மேலாளர் மல்லிகா, துணைப்பதிவாளர்கள், வங்கி அலுவலர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப