எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலூர், பிப். - 27 - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூரில் ரூ. 6.5 லட்சம் பரிசு தொகை கொண்ட மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் மேலூர் ஆர்.சாமி எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,சாமி , தமிழரசன், ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்திற்கு மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். தமிழரசன் எம்.எல்.ஏ. கருப்பையா எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜா, உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த பந்தயம் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு ஜோடி, பூஞ்சிட்டு ஜோடி என நான்கு பிரிவுகளாக நடந்தது. பெரியமாடு பிரிவில் 16 ஜோடிகள் கலந்துகொண்டன. இந்த மாட்டிற்கான பந்தய எல்கை மேலூர் சிவகங்கை சாலை மலம்பட்டியிலிருந்து கோட்டநத்தம்பட்டி வரை நடைபெற்றது. இதில் முதல் பரிசை பாண்டிகோவில் பாண்டிச்சாமி மாடு ரூ.ஒருலட்சத்து எட்டை வென்றது. இரண்டாவது பரிசை கல்லணை விஸ்வா ரவிச்சந்திரன் மாடு ரூ.90 ஆயிரம் வென்றது. 3 வது பரிசை கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகர ராஜா மாடு ரூ.80 ஆயிரம் வென்றது. இந்த பந்தயத்தில் கொடி பரிசை கணபதி ரூ.5004பெற்றார். எல்கைப் பரிசை ராமச்சந்திரன்ரூ.5004 ஐ பெற்றார். இரண்டாவதாக நடைபெற்ற நடுமாடு போட்டியில் எல்கை பந்தயத்திடலில் இருந்து ஒத்தப்பட்டி வரை நடைபெற்றது. இதில் 31 ஜோடிகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மதுரை ஆனையூர் சரவணன் மாடு ரூ,70,002 ஐ வென்றது. இரண்டாவது பரிசை தேனி உப்பார்பட்டியை சேர்ந்த கெளசிக் மகாதேவ் மாடு ரூ.60,003 ஐ வென்றது. 3வது பரிசை மேலூர்எஸ்.வி.பி. முருகன் மாடு ரூ.50,004 ஐ வென்றது. இந்த போட்டியின் கொடிப்பரிசை சசி ரூ.4005 ஐ வென்றார். எல்கைப்பரிசான ரூ.4005ஐயும் அவரே வென்றார். மூன்றாவது போட்டியாக கரிச்சான் பிரிவில் 48 ஜோடிகளும் கலந்து கொண்டன. ஜோடிகள் அதிகமாக உள்ள காரணத்தினால் மாட்டின் உரிமையாளர்களிடம் கூறி இதனை 2 பிரிவுகளாக்கினர். முதல் செட்டில் 24 ஜோடிகள் கலந்துகொண்டன. இந்த போட்டிக்கான எல்கை பந்தயத்திடலிருந்து வண்ணாம்பாறைபட்டி வரை நடைபெற்றது. இதில் முதலாவதாக கடம்பூர் இளைய ஜமீன்தார் கருணாகர ராஜா ரூ.20,005 ஐ வென்றார். இரண்டாவது பரிசை மதுரை பரவையைச் சேர்ந்த சீலைக்காரி ரூ.15,006 ஐ வென்றார். 3 வது பரிசை மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் ரூ.10,007 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை ரூ.1751 ஐ பாக்கியம் பெற்றார். எல்கை பரிசான ரூ.1751 ஐ சக்கரபாணி பெற்றார். இதே ஜோடியின் 2வது செட்டில் முதல் பரிசை மேலூர் எட்டிமங்கலம் ஹரிதாஸ் ரூ.20,005 ஐ வென்றார். இரண்டாவது பரிசை கே.கே.பட்டியை சேர்ந்த பொன்னையா தேவர் ரூ.15,006ஐ வென்றார். 3 வது பரிசை மதுரைபாண்டி கோவில் பாண்டிச்சாமி ரூ.10,007 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை ரூ.1751 ஐ கணபதி பெற்றார். எல்கை பரிசான ரூ.1751 ஐயும் அவரே பெற்றார். நான்காவதாக நடைபெற்ற பூஞ்சிட்டு பிரிவில் 39 ஜோடிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி பந்தயத்திடலிருந்து கணபதிபுரம் வரை நடைபெற்றது. முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி புதுப்பட்டியைச் சேர்ந்த கே.ஏ.அம்பாள் ரூ.35,001 ஐ வென்றார். இரண்டாவது பரிசாக மேலூர் அதிமுக கவுன்சிலர் ஆர்.கே சந்திரன் ரூ.25,002 ஐ வென்றார். 3வது பரிசை போடி சின்னத்தேவர் நினைவாக பிரபு ரூ.15,003 ஐ வென்றார். இந்த போட்டிக்கான கொடிப்பரிசை கோபி ரூ.3501 ஐ பெற்றார். எல்கைப்பரிசான ரூ.3501 ஐ கணபதி பெற்றார். இந்த போட்டியில் இரண்டாவதாக வந்து கொடியை தவற விட்ட காரணத்திநால் வெற்றி வாய்ப்பை இழந்த கூடலூர் விசித்குமாருக்கு ஆறுதல் பரிசாக ரூ.10,000 ஐ போட்டி நடத்துனரான ஆர்.சாமி எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த போட்டியை காண்பதற்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், மதுரை மட்டும் மேலூர் சுற்றுப்பகுதிகளிலிருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை இருமருங்கிலும் பந்தயத்திடலில் இருந்து எல்கை வரை மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இந்த பந்தயத்தை காண்பதற்காக வந்த ரசிகர்கள் கூறியதாவது. ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு மேலூர் சட்டமன்ற தொகுதி ஆர்.சாமி எம்.எல்.ஏ பல லட்சம் மதிப்பிலான இந்த மாட்டுவண்டி பந்தயத்தை வெகு சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டு வருகிறார் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மேலூர் யூனியன் செல்வராஜ், சேர்மன்கள் மேலூர் சரவணன், கொட்டாம்பட்டி வெற்றி செழியன், வள்ளாளபட்டி உமாபதி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஜபார், மேலூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பாலகிருஷ்ணன், அம்மா பேரவை நகர் செயலாளர் சாகுல் ஹமீது , கொட்டாம் பட்டி துனை சேர்மன் குலோத்துங்கன், சென்னகரம்பட்டி எஸ்.எஸ். துரை, சூரக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் துரைஅண்ணா, ஏ.வலையபட்டி தலைவர் பெரியபுல்லான் என்ற செல்வம் மற்றும் மேலூர் நகராட்சி, ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி, அ.வள்ளாலபட்டி பேரூராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த போட்டிக்கான பரிசுத் தொகைகளை காஞ்சிவனம் சுவாமி திடலில் மாட்டின் உரிமையாளர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.