முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்கத்தில் சிக்கிய 14 பேரை மீட்கும் பணி தற்காலிக நிறுத்தம்

புதன்கிழமை, 26 டிசம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஷில்லாங் : மேகாலயா சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மேகாலயாவில் நிறைய சுரங்கங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி மேகாலயாவின் ஜெயின்டிஷியா மலையில் இருக்கும் 300 அடி ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது லேடெயின் நதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திடீரென சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் குகைக்குள் இருந்த 14 பேரும் நீரில் சிக்கினார்கள்.

18 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் சிக்கிய 14 ஊழியர்களை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் போராடி வருகிறார்கள். 16 நாட்களாக முயன்றும் சுரங்கத்திற்குள் உள்ள 70 அடி தண்ணீரை இன்னும் அகற்ற முடியவில்லை. இதனால் அதிகாரிகள் குழம்பி வருகிறார்கள். மேலும் தற்போது இருக்கும் பம்ப்களை வைத்து நீரை வெளியேற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் சுரங்கத்தில் சிக்கி இருக்கும் 14 ஊழியர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக 14 ஊழியர்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. புதிய திறன் கொண்ட பம்ப் வந்த பின்பே மீட்பு பணி நடக்கும் என்று மீட்பு படையினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து