எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின் சார்பில் தேசிய இளைஞர் தினமும், சுவாமி விவேகானந்தரின் 156-வது பிறந்த தின விழாவும்; கொண்டாடப்பட்டது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகையில், சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வ செயல்களைச் செய்யும் மனிதர்களை உருவாக்கி அதன்மூலம் நாட்டினை முன்னேற்றப் பாதையிலும், உலக அமைதியை ஏற்படுத்துவதுமே தான் கல்வியின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதை நினைவுகூர்ந்தார். இக்கருத்தை நினைவில் கொண்டு உலகில் அமைதியை ஏற்படுத்த இளைஞர்கள் இடையராது உழைக்க வேண்டும் என துணைவேந்தர் கேட்டுக்கொண்டார்.
அவர் மேலும் பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைத் தத்துவமாகும். நமது பண்பாடு உலகை ஒரே குடும்பமாகவே நாம் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளது என்பது சிறப்பானது. இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. இளைஞர்களின் ஆற்றலில் தீவிரமான நம்பிக்கை கொண்டவர் சுவாமி விவேகானந்தர். இளைஞர்களால் எதையும் செய்ய முடியும் என்றும் நாட்டை உயர்நிலைக்கு அவர்களால் எடுத்துச் செல்ல முடியும் என்பதையும் உணர்ந்தே அவர்களுக்கு எண்ணற்ற அறிவுரைகளைக் கூறியுள்ளார். அவருடைய கருத்துகளை இளைஞர்கள் பின்பற்றி தாங்களும் வளர்ந்து, தங்களுடைய நாட்டையும் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார். அறிவியலையும், ஆன்மிகத்தையும் இரு கண்களாக நாம் கருத வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார். மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற அவருடைய கருத்தை நாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மதுரை சுவாமி விவேகானந்தா சேவா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சதாசிவானந்த மகராஜ் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், ஒவ்வொரு இளைஞரும் நல்ல உடல் ஆரோக்கியம், சிறந்த மன நலம், சீரிய சிந்தனைகள், இவற்றோடு ஆக்கப்பூர்வ உழைப்பையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டு நாட்டை முன்னேற்றப் பாடுபட வேண்டும் என்ற விவேகானந்தரின் எண்ணத்தை எக்கணமும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என கூறினார். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சமூக ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு, சமூக வளர்ச்சி ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக அமைதியை நிலைநாட்டப் பாடுபடவேண்டும் என்றார். உலக அமைதி இன்றைய இளைஞர்களின் கையில் தான்; உள்ளது என்றும், உலக மக்களிடையே ஒரு இணக்கத்தை உருவாக்கவே மதங்கள் பாடுபடவேண்டும் என்றும், அனைத்து மதங்களும் அமைதியையும் நல்லிணக்கத்தையுமே போதிக்கின்றன என்றும் குறிப்பிட்டு இக்கருத்தினை வலியுறுத்துவதாகவே விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு அமைந்து இருந்தது என்றார். அதுவே இன்று வரை உலகளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. விவேகானந்தரின் சிந்தனைகளை செயலில்காட்டி நாட்டை வளப்படுத்த வேண்டும் என்ற உறுதி மொழியை இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்று செயல்படுவோம் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சுவாமி விவோகனந்தா உயர் ஆராய்ச்;சி மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. கே.ஆர். முருகன் வரவேற்புரை ஆற்றினார். துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.வசிமலைராஜா நன்றியுரை ஆற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.