எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : டோனி மற்றும் கேதர் ஜாதவ் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சமநிலையில்...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நேற்று நடந்தது.
சாதனை படைக்க...
இதற்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை, கைப்பற்றியதில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றினால், அது சாதனையாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு கடந்த போட்டியில் சிறப்பாக இருந்தது. கேப்டன் விராத் கோலி அபார சதம் அடித்தார். அனுபவ வீரர் தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆடி அரை சதம் அடித்தார்.
விஜய் சங்கர் அறிமுகம்...
பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அதனால் இந்திய அணி, நம்பிக்கையுடன் நேற்று களமிறங்கியது. நேற்றைய போட்டியில் தமிழக வீரர், ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு முதல் ஒரு நாள் போட்டி. ராயுடு, குல்தீப், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு, கேதர் ஜாதவ், சாஹல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு
ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கில் மார்ஷ், ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், ஸ்டோயினிஸ் ஆகியோரையே நம்பி இருக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி ஆகியோர் ஏமாற்றி வருகின்றனர். வேகப்பந்து வீச்சாளர் பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. அவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியான் ஆகியோருக்குப் பதிலாக, ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அணி விவரம்:
இந்திய அணி: விராத் கோலி (கேப்டன்) ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஸ்வர்குமார், முகமது ஷமி, சாஹல்.
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்),. அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெக், ரிச்சர்ட்சன், ஸ்டான்லேக், பீட்டர் சிடில், ஆதம் ஜம்பா.
சஹால் அபாரம்...
போட்டி தொடங்கி முதல் ஓவரை புவனேஷ்வர்குமார் வீசினார். இரண்டாவது பந்தை அவர் வீசும்போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடை பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அலெக்ஸ் கேரி (5 ரன்கள்) புவனேஷ் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் பிஞ்ச் 14 ரன்களில் வெளியேறினார். உஸ்மான் காவ்ஜா (34 ரன்கள்), ஷான் மார்ஷ் ( 39 ரன்கள்), ஹேன்ட்ஸ்கோம்ப் ( 58 ரன்கள்) ஆகியோர் சீரான இடைவெளியில் சாஹல் சுழலில் சிக்கினர்.
231 ரன்கள் இலக்கு...
பின்னர் வந்த வீரர்கள், சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் விளையாடவில்லை. சாஹல் தொடர்ந்து, சுழலில் ஆதிக்கம் செலுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 48.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில், சாஹல் 6 விக்கெட்டுகளையும், முகம்மது சமி, புவனேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
4-வது வீரராக...
வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டதால் ரன் அடிக்க கடும் சிரமமாக இருந்தது. மேலும் மைதானம் மிகப்பெரியது என்பதால் பவுண்டரி எளிதாக செல்லவில்லை. ஒன்றிரண்டு ரன்களாகத்தான் எடுக்க முடிந்தது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், ஷிகர் தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் விராட் கோலி 4-வது வீரராக டோனியை பேட்டிங் செய்ய அழைத்தார். விராட் கோலி - டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா 26.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. டோனி சிறப்பாக விளையாடியதால் விராட் கோலி நம்பிக்கையுடன் ரன்கள் அடிக்க துவங்கினார். இந்தியாவின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்தியாவிற்கு நெருக்கடி
இதனால் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு டோனியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். இந்தியா 38 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. அதேவேளையில் டோனி 74 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா 40 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 60 பந்தில் 66 ரன்கள் தேவைப்பட்டது. 42-வது ஓவரில் 2 ரன்களும், 43-வது ஓவரில் 5 ரன்களும், 44-வது ஓவரில் 1 ரன்களும் அடித்ததால் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஜாதவ் அரைசதம்...
36 பந்தில் 52 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டாய்னிஸ் வீசிய 45-வது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 8 ரன்கள் கிடைத்தது. இதனால் டென்சன் சற்று குறைந்தது. 46-வது ஓவரில் கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவிற்கு 11 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 18 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். முதல் பந்தை டோனி தூக்கியடித்தார். பந்தை மிட்ஆஃப் திசையில் நின்ற பிஞ்ச் கேட்ச் பிடிக்க தவறினார். இதில் இந்தியாவிற்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு தூக்கினார். கடைசி பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்டினார். அத்துடன் 52 பந்தில் 5 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இந்தியா வெற்றி...
இதனால் இந்தியாவிற்கு 48-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. கடைசி 12 பந்தில் 14 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை சிடில் வீசினார். 2-வது பந்தில் கேதர் ஜாதவ் பவுண்டரி அடித்தார். 3-வது பந்தில் மூன்று ரன்கள் அடித்தார். 5-வது பந்தில் டோனி பவுண்டரி விளாசினார். 49-வது ஓவரில் இந்தியா 13 ரன்கள் அடித்தது. இதனால் கடைசி ஓவரில் 1 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தை கேதர் ஜாதவ் பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 49.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது.
சாதனை படைத்தது...
டோனி 114 பந்தில் 87 ரன்கள் எடுத்தும், கேதர் ஜாதவ் 57 பந்தில் 61 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2 போட்டிகளில் இந்தியா 2 வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே டெஸ்ட் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டி தொடரை வென்று சாதனை படைத்ததுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்18 hours 42 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 21 hours ago |
ஆனியன்ப்ரை1 week 21 hours ago |
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்க விபத்தில் 14 பேர் மீட்பு - ஒருவர் உயிரிழப்பு
15 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் சுரங்கத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
‛நியூஸ் க்ளிக்' ஆசிரியரை கைது செய்தது செல்லாது : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
15 May 2024புதுடில்லி : "நியூஸ் க்ளிக்'' நிறுவனரும் ஆசிரியருமான பரபீர் புரக்யஸ்தா கைது செய்யப்பட்டது செல்லாது எனக் கூறி, அவரை விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சி.ஏ.ஏ. சட்டத்தின் மூலம் 300 பேருக்கு குடியுரிமை : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்
15 May 2024புதுடில்லி : சி.ஏ.ஏ.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் அல்ல: இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்ய மாட்டேன் : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
15 May 2024காந்திநகர் : வாக்கு அரசியலுக்காக வேலை செய்பவன் நான் அல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரி
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியா காவல் நீட்டிப்பு
15 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் முன்னாள் முதல் மணீஷ் சிசோடியாவின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் நகைச்சுவை கலைஞர் வேட்புமனு தாக்கல்
15 May 2024வாரணாசி : மோடியை எதிர்த்து உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரான பிரபல மிமிக்கிரி நகைச்சுவை கலைஞர் சியாம் ரங்கீலா(28) வேட்பு மனு தாக்கல் செய
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
தேர்தலின் போது ஆந்திராவில் வன்முறை: தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தலைமை தேர்தல் ஆணையம் சம்மன்
15 May 2024அமராவதி : ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விளக்கமளிக்க தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024