எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.6 - பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலர் அல்போன்சாவின் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது பற்றி விபரம் வருமாறு:-
பாட்சா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அல்போன்சா. ஏகப்பட்ட படங்களில் தனி பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றவர். சமீப காலமாக அவர் கவர்ச்சி நடனங்களை குறைத்துக் கொண்டு வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவனை விட்டு பிரிந்துவாழ்கிறார்.
இவரும் கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான வினோத்குமாரும் காதலித்து வந்தனர். வினோத் குமாரும் சினிமாவில் நடனம் ஆடி வந்தவர்தான். நடிகர் முரளி தயாரித்த கவசம் என்ற படத்தில் கதா நாயகனாக நடித்துள்ளார். படம் இன்னும் வெளி வரவில்லை. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் ஒரு அபார்ட் மெண்டில் ஒன்றாக வசித்து வந்தனர்.அல்போன்சா அடிக்கடி துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கலை நிகழ்ச்சிகளுக்குப் போவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு துபாய் கலைநிகழ்ச்சியை முடித்து விட்டு அல்போன்சா விருகம்பாக்கம் வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு அல்போன்சாவிடம் வினோத்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து தனது அறைக்கு வினோத்குமார் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பிறகு அல்போன்சா வினோத்குமாரின் அறைக்கு சென்ற போது வினோத்குமார் தூக்கிய தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அபார்ட் மெண்ட் காவலாளியிடம் கூறியுள்ளார். அபார்ட் மெண்ட் காவலாளி அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் வந்து உடலை கைப்பற்றி உள்ளனர். இதற்கிடையில் உடலை இறக்கி கார்பார்க்கிங்கில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அல்போன்சா கூறுகையில் தன்னை வினோத்குமார் திருமணம் செய்யும் படிவற்புறுத்திதாகவும் தான் முதல் கணவரிடம் பிரச்சனை எற்பட்டு பிரிந்து வாழ்வதால் முறைப்படி விவாகரத்து பெற்ற பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியதாகவும், ஆனால் வினோத்குமார் அதை ஏற்றுக்கொள்ளாமல் தன்னிடம் வாக்குவாதம் செய்துவிட்டு அறைக்கு சென்றதாகவும் அதன் பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டதகாவும் கூறியுள்ளார்.
சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர் விசாரணையில்
அல்போன்சா துபாய்க்கு கலை நிகழ்ச்சிக்காக போயிருந்தார். துபாயில் நடந்த கலை நிகழ்ச்சிக்குப் போய் விட்டு நள்ளிரவுக்கு மேல் வந்த பிறகுதான் அல்போன்சாவுக்கும், அவரது காதலருக்கும் இடையே மோதல் மூண்டு அது தற்கொலையில் முடிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகுதான் வினோத்குமாரின் மரணம் நேர்ந்துள்ளது. பிறகு போலீஸார், வினோத்குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அல்போன்சாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் உறவினார்கள் திட்டியதால் மனமுடைந்த அல்போன்சா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். இதனால் அல்போன்சாவிடம் உடனடியாக விசாரணை நடத்த முடியாத நிலை போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதால் அவருக்கு நினைவு திரும்பிய பிறகுதான்
விசாரிக்க முடியும். அவரை விசாரித்தால்தான் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தரப்பினரும் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று அல்போன்சாவின் காதலர் வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஒரு கொடூரக் கொலை என்று வினோத்குமாரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அவரது காது, முகத்திலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. மேலும் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் காணப்பட்டன. அவரை கொடூரமாக அடித்து சித்திரவதை செய்து கொன்று தூக்கில் போட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக அல்போன்சா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதியை நேரில் சந்தித்துப் புகார் கொடுக்கவுள்ளோம் என்று தந்தை பாண்டியன் தெரிவித்தார்.
அல்போன்சாவும், அவரது ராபர்ட்ராஜும் சேர்ந்து வினேத்குமாரை கழுத்தை நெரித்தும் கொலை செய்ததாக அவரது மாமா காவல்துறையினர் புகார் அளித்துள்ளார்.வினோத்குமார் மாமா சுகுமாறன் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், எனது மைத்துனர் பாண்டியன் புதுப்பட்டினத்தில் வசித்து வந்தார். அவரது மூத்த மகன் வினோத்குமார். 25 வயதான அவர் கவசம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக வளசர வாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வந்தார். நடிகை அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ராஜ் இருவரும் வினோத்குமாருடன் நெருங்கி பழகியுள்ளனர்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வினோத்குமாரை அழைத்து வந்து அல்போன்சா இல்லத்தில் தங்க வைத்துள்ளனர். வினோத்குமார் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே அவரை மயக்கி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
இதற்கு வினோத்குமார் மறுத்ததால் அல்போன்சாவும், ராபர்ட்ராஜும் சேர்ந்து அவரை தலையில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள வினேத்குமாரின் உடலை பார்ப்பதற்காக வந்த அவரது தந்தை பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,அல்போன்சாவும், அவரது பெற்றோரும் என் மகனை அடித்துக் கொன்று விட்டனர் என்று கூறியுள்ளார்.
பரபரப்பான இந்த மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவிலும் அல்போன்சாவிடம் நடத்தும் விசாரணை மூலமே உண்மை தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.