எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் 2 நாள் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று துவங்கியது. மாநாட்டில் பேசிய முதல்வர் எடப்பாடி இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 2-வது சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
துவக்கி வைத்தார்...
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2-வது உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், தென்கொரியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தமிழக அரசு மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்த மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
புதிய சாதனை...
பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
உலக முதலீட்டாளர் மாநாடு 2019-ல் முதலீட்டு திட்டங்கள் மற்றும் பிரதிநிதிகள் பதிவு ஆகியவை நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆயத்த பணிகளை நாங்கள் துவங்கியதில் இருந்து கடந்த ஓராண்டில் புதிய முதலீட்டு திட்டங்கள் வந்த வண்ணம் இருந்தன. தமிழக தொழில்துறை வரலாற்றில் இது மிக முக்கியமான தருணம் ஆகும். முதலீட்டு துறையில் நாங்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறோம். 2015 செப்டம்பரில், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையில் செயல்பட்ட தமிழக அரசு முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு 2.42 லட்சம் கோடி மதிப்பிலான 98 திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தது. இந்த திட்டங்கள் 3 முதல் 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.
தொழில் மயமாக்கலில்...
நாங்கள் தீவிரமாகவும் தொடர்ந்தும் கண்காணிப்பதன் மூலம் பல்வேறு திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளதோடு, பல திட்டங்கள் துவக்கும் சூழ்நிலையை எட்டியுள்ளது. 2015 உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியை தொடர்ந்து ஜெயலலிதா அரசு தற்போது 2-வது மாநாட்டை நடத்துகிறது. இதற்கு கிடைத்த வரவேற்பில் இருந்து இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது மட்டுமல்லாமல், தமிழக வருடாந்திர தொழில் மயமாக்கலில் வரலாற்று சிறப்புமிக்க நினைவு கூரத்தக்க வகையில் இருக்கும்.
2-வது மாநிலம்....
கடந்த 30 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சியை தக்க வைப்பதிலும் வலுவான முறையில் வளர்ச்சி அடைவதிலும் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய நிரந்தர பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதத்தில் 8.4 சதவீதத்தை தமிழகம் எட்டியுள்ளது. 1992-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் புரட்சி ஏற்பட்டது. போர்டு, ஹுண்டாய் போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் துறையில் உலகத்திலேயே மிகப் பெரிய மையமாக சென்னை உருவெடுத்துள்ளது.
2003 - 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வகையில் எந்த மிகப் பெரிய எலக்ட்ரானிக் தொழிற்சாலையும் இல்லை. 2003-ம் ஆண்டில் கொண்டு வந்த தொழில் கொள்கை காரணமாக எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை துறையில் தமிழகம் உலக அளவிலான முக்கிய நிறுவனங்களை கவர்ந்து ஒரு மகத்தான புரட்சியை கண்டது. ஸ்ரீபெரும்புதூரில் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கான உதிரி பாகங்களை அசெம்பிள் செய்யும் பாக்ஸ்கான் முதலீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மின் துறையில் புரட்சி
ஜெயலலிதாவின் செயல்பாடு காரணமாக 2011-ம் ஆண்டு எரிசக்தி துறையில் பெரிய அளவு பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருந்த நிலையில் அவரது நடவடிக்கை காரணமாக எரிசக்தி துறையில் உபரி மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் தமிழக மின்துறை ஒரு புரட்சியை செய்துள்ளது. தற்போது மின் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாகவும் மின் மிகை மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது.
வறுமை ஒழிப்பு...
இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரியை விட வறுமையை மிக வேகமாக ஒழித்த ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மாநிலத்தின் மனித வளர்ச்சி குறியீடானது இந்திய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. தேசிய சராசரியில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் சுகாதாரம், கல்வி, ஊட்டசத்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், மாற்றுத் திறனாளிகள் நலன், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலன், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட சமூக நலத்துறையில் அதிக அளவில் செலவிடப்பட்டதே ஆகும்.
வெளிநாட்டு முதலீடுகள்
நாட்டிலேயே தற்போது சிறந்த கல்வியும் திறமையும் உடைய பணியாளர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. கல்வியும் மேம்பாடும் இணைந்த குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் 48.60 சதவீதத்துடன் தமிழகம் உயர்ந்த இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள 7.2 கோடி மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் அதில் 50 சதவீதம் பேர் நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள். உற்பத்தி மற்றும் சேவை துறையில் வலுவான செயல்பாட்டிலும் புதுமையான பொருளாதார அடிப்படையிலும் தமிழகம் சிறப்பாக உள்ளது. உயர்ந்த தரமான திறமை உடைய மனித வளம் மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழகம் முதலீட்டை ஈர்க்கும் மையமாக விளங்குகிறது.
தமிழகம் முன்னணியில்...
நாட்டிலேயே வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் ப்ரோஸ்ட் அன்ட் சுலிவன் மற்றும் என்.சி.ஏ.இ.ஆர். ஆகிய சர்வதேச ஆலோசனை நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்பு உள்ள முன்னணி மாநிலமாக தமிழகத்தை பட்டியலிட்டுள்ளது. ஜவுளி, தோல், ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், கனரக மற்றும் இலகுரக என்ஜினியரிங், எலக்ட்ரானிக் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள், மருத்துவம் உள்ளிட்ட தொழில்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
புதிய கொள்கைகள்
சுற்றுச்சூழல், சுற்றுலா கொள்கை, வன கொள்கை, இளைஞர் நல கொள்கை, உணவு பதப்படுத்தல் கொள்கை, மின்னணு நிர்வாகம் மற்றும் ஐசிடி கொள்கை உள்ளிட்டமுக்கிய வளர்ச்சி துறைகள் தொடர்பாக விரிவான கொள்கையையும் நாங்கள் வகுத்திருக்கிறோம். புதிய தொழில் சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக புதுமையாக புதிய கொள்கைகளை நாங்கள் துவக்கியிருக்கிறோம். ஊக்கத் தொகையுடன் கூடிய புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் மி்ன்சார வாகன கொள்கையை துவக்க இருக்கிறோம். பாதுகாப்பு துறை அமைச்சர் வானூர்தி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி கொள்கையை இப்போது துவக்கி வைத்துள்ளார்.
ஆட்டோமொபைல் உற்பத்தி
வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி துறையை ஊக்குவிக்க எங்களது அரசு ஸ்ரீபெரும்புதூரில் பிரத்யேகமாக 250 ஏக்கரில் அமைத்திருந்த வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பூங்காவை 700 ஏக்கராக விரிவாக்கம் செய்துள்ளது. இதில் ஆட்டோ மொபைல் உற்பத்தி மற்றும் எலெக்ட்ரானிக் மையமும் அடங்கும். அதே போல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமல்ல, பல்வேறு தொழிற்சாலைகளும் தமிழகத்திற்கு வரவிருக்கின்றன.
அனைத்து துறைகளிலும்...
மிக சமீபத்தில் 2018 நவம்பரில், முக்கிய பத்திரிகையான இந்தியா டூடே, இந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவில் தமிழகம் அனைத்து துறையிலும் ஒட்டுமொத்த செயல்பாட்டில் சிறந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் முதலிடத்திலும், சுற்றுலா துறையில் முதலிடத்திலும், கட்டமைப்பு துறையில் 2-வது இடத்திலும், வளர்ச்சி உள்ளடங்குதலில் 3-வது இடத்திலும், கல்வியில் 3-வது இடத்திலும், தொழில்முனைவில் 3-வது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ. 2 லட்சம் கோடி முதலீடு
அடுத்த 2 நாட்களில் 5 நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் உள்ளிட்ட 25 கருத்தரங்களை நாங்கள் நடத்துகிறோம். பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்றவை நமது ஒத்துழைப்பு நாடுகளாக உள்ளன. அந்த நாடுகளின் அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்காக 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை ஈர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இது ஏற்கனவே இலக்கை எட்டி உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகப்பெரிய வாய்ப்பு
நாளை (இன்று) நடைபெறும் சந்திப்பின் போது ஒட்டுமொத்த முதலீடுகள் தொடர்பாகவும், இந்த மாநட்டின் வெற்றி தொடர்பாகவும் நான் அறிவிக்க இருக்கிறேன். தமிழகம் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்காலத்தை எதிர்நோக்கி உள்ளது. தமிழகத்துடன் இணைந்து தொழில் துவங்க உள்ள உங்களை எல்லாம் வாழ்த்துவதோடு, மிகப்பெரிய வாய்ப்பு நிறைந்த இந்த மாநிலத்தில் உங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு செயல்படும். இந்த நாட்டையும், மாநிலத்தையும் வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும் பங்கேற்பாளர்களாகவும், அதை செயல்படுத்தும் மாநிலமாகவும் நாம் விளங்குகிறோம். இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்துள்ள உங்களை எனது சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மீண்டும் ஒருமுறை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.