எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.9 - உலக மகளிர் தினவிழாவையொட்டி அ.தி.மு.க. தலைமையகத்தில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடினர். மகளிர் வாரியத்தலைவி சரஸ்வதி ரங்கசாமி விழாவிற்கு தலைமை வகித்தார். இதில் ஏராளமான மகளிர் கலந்துக் கொண்டனர். விழாவில் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை ஒப்பிட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை சரஸ்வதி ரங்கசாமி படித்தார். தீர்மான விபரம் வருமாறு:-
மகளிர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என கருதும் மகத்தான தலைவி, மகளிர் அனைவரும் அவர்தம் வாழ்வில் முன்னேற்றம் கண்டு, சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்ற சிந்தனை கொண்ட தலைவி, வாழும் மனித தெய்வம், இந்திய திருநாட்டின் எதிர்காலம், தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மகளிர் சமுதாயம் நன்றியோடு நினைக்கும் நாள், இந்த உலக மகளிர் தின விழா.
தமிழக மகளிர் பயன்பெறும் வகையில், பல சலுகைகளை வாரி வழங்கி, மகளிர் முன்னேற்றத்திற்காக பல சாதனைகளை புரிந்து வரும் நம் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்கிற காலம் பெண்களுக்கு ஒரு பொற்காலம். அவர் சாதனைகளின் சிகரமானவர்.
1. பெண் சிசுக் கொலையினை தடுப்பதற்காக, அவர் எண்ணத்தில் உதித்திட்ட திட்டம் தொட்டில் குழந்தை திட்டம் பெண் குழந்தைகளை காப்பாற்றுவதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டு வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா. அன்னைதெரசாவே நேரில் வந்து முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டியது பெண்ணினத்திற்கே பெருமை.
2. மாணவிகள் பள்ளிக்குச் சென்று வருவதிலுள்ள சிரமத்தை அறிந்த மாண்புமிகு அம்மா அவர்கள், விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தைன முதன் முதலில் தொடங்கி வைத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
3. இந்தியாவிலேயே முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் தோற்றுவித்து, காவல் துறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர், நமது முதல்வர் ஜெயலலிதா.
4. தீயணைப்புதுறையில் பெண்களை நியமித்து மனித சமுகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கியவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
5. திருக்கோவில்களில் பெண் செயல் அலுவலர்களை நியமித்து, அறநிலையத்துறையில் புதிய வரலாறு படைத்தவர் முதல்வர் ஜெயலலிதா.
6. அச்சமும், மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள் என்றார் புரட்சி கவிஞர். பெண்ணினம் பெருமை பெறும் விதத்தில், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத காவல் துறையில் பெண் கமாண்டோக்களை நியமித்து புரட்சி செய்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
7. மாற்றும் தந்து மக்களுக்கு ஏற்றம் தருவேன் எனக் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா விலையில்லா அரிசி வழங்கி மக்களின் பசியை போக்கியவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
8. வாழ்வாதாரம் ஏதுமின்றி, அன்றாட வாழ்க்கையை நடத்தவே இயலாமல் உள்ள முதியர், உடல் ஊனமுற்றோர் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம் பெண்களுக்கு மாத உதவி தொகை 1000 ரூபாயாக உயர்த்தி அல்லல்படும் மக்களுக்கு உதவிக்கரம் அளித்தவர் முதல்வர் ஜெயலலிதா.
9. ஆடம்பரத் தேவைகள் கூட அத்தியாவசியத் தேவையாகிட்ட இன்றைய நவீன உலகத்தில் குடும்பத் தலைவிகளின் பளுவினை குறைக்கும் விதத்தில் மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசறி வழங்கி அன்றாட வாழ்வில் பெண்களின் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றியவர் முதலமைச்சர் முதல்வர் ஜெயலலிதா.
10. ஒரு குடிமகனுக்கு குடும்ப பெயராக தந்தையின் பெயரை மட்டும் குறிப்பிடுவது நடைமுறையில் இருந்து வந்த மரபு. அதை மாற்றி தந்தை பெயருடன் தாயின் பெயரையும் குறிப்பிடலாம் என ஆணையிட்டவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
11. பெண்கள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை காத்து வருபவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
12. பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற வளாகத்தில் மகளிர் ஓய்வு அறையும், சட்டமன்ற விடுதியில் பெண்கள் உடல் நலன் கருதி மகளிருக்கென ஓர் உடற்பயிற்சி மையம் உருவாக்கி மகளிர் நலன் பேன வழி வகுத்தவர் நமது முதல்வர் ஜெயலலிதா.
13. ஏழைகள் தங்கள் சொந்தகாலில் நிற்கு வேண்டுமெனில் ஏழை, ஏளிய மக்களைப் பொருளாதார நடவடிக்கைளில் ஈடுபடச் செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை அறிவித்து அதுவும் பெண்களே பயனாளிகள் என அறிவித்து திட்டத்தினை உடன் நிறைவேற்றியவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.
14. தங்கத்தின் விலை விண்ணைமுட்டும் விலை ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு இலவச திருமணங்களை நடத்தி, அதில் உதவி திட்டங்களின் கீழ் பயன்பெறும் வகையில் திருமாங்கல்யம், பட்டம், பட்டயபடிப்பு முடித்திருப்பின் அவர்களுக்கு தங்ககாசும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கி ஏழை எளியோரின் வாழ்வில் ஒளியேற்றியவர் நம் முதல்வர் ஜெயலலிதா.
15. அறிவுசார் பெண்கள் மேம்பாடு அடைய வேண்டுமெனில், அனைவருக்கும் தங்கதடையின்றி கல்வி கிடைக்க கல்வி உதவி தொகை மற்றும் மடிக்கணினி வழங்க மாணவிகளின் வாழ்க்கையில் முன்னேற வழி வகை செய்தவர் அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான முதல்வர் ஜெயலலிதா தான்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப