எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 2030-ம் ஆண்டிற்கு இந்தியாவை முன்னெடுத்து செல்லும் திட்டங்களைக் கொண்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயலை பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
பாராட்டுக்குரியது...
மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை குறித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
2019-2020-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயலால் தாக்கல் செய்யப்பட்டது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே, குறிப்பாக, வேளாண்துறை பிரச்சனைகளை தீர்ப்பது, நடுத்தர வர்க்கத்தினர்க்கு வரிக் குறைப்பு, வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு வரிச்சலுகைகள் போன்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்கூறிய முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திருக்கும் அதே வேளையில், நிதிநிலைச் சமன்பாடும் பாதிக்கப்படாமல் இந்த நிதிநிலை அறிக்கையை அளித்திருப்பது பாராட்டுக்குரியது.
வரவேற்கிறேன்...
பத்து அம்சங்கள் கொண்ட தொலைநோக்கு பார்வையை வடிவமைத்து, 2030-ம் ஆண்டிற்கு இந்தியாவை முன்னெடுத்து செல்லும் திட்டங்களைக் கொண்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயலை நான் மனமாறப் பாராட்டுகிறேன். சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வருமானத்தை உறுதி செய்யும் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும். இத்திட்டம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்கு மிகச் பெரும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
வட்டிச் சலுகைகள்...
வேளாண் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக மூன்று சதவீதம் வட்டி சலுகை வழங்கப்பட்டுள்ளதையும், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதையும் வரவேற்கிறேன். கால்நடை மற்றும் மீன்வளத்துறை கடன்களுக்கும் இரண்டு சதவீத வட்டிச் சலுகையையும், முறையாக கடனை திரும்பச் செலுத்தியவர்களுக்கு மூன்று சதவீத கூடுதல் வட்டிச் சலுகையையும் வழங்கி இருப்பதும் பாராட்டத்தக்கது. இந்த அறிவிப்புகள் முதன்மைத் துறையான வேளாண்மைத் துறை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் வேகமாக வளர்ச்சி அடைய உதவும் என நான் நம்புகிறேன். மீனவர்களின் நலன் காக்க, தனியாக மீன்வளத் துறை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
மாதந்தோறும் ரூ.100...
இவ்வரவு செலவுத் திட்ட அறிவிப்புக்களில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை சார்ந்த தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் ஒரு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கான வட்டியில் இரண்டு சதவீதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பின் காரணமாக முதல் முறை தொழில் முனைவோர் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களின் கடன் பெறும் நிலை வெகுவாகக் குறையும் என நான் கருதுகிறேன். பிரதம மந்திரி ஷரம் யோகி மாந்தன் திட்டம் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மாத ஓய்வூதியம் 3,000 ரூபாய் பெறும் வகையில் மாதந்தோறும் 100 ரூபாய் செலுத்தினாலே போதும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்ககூடியதாகும். அறுபது வயதைக் கடந்த அமைப்பு சாரா தொழிலாளர்களின் பொருளாதார பாதுகாப்பிற்கு இத்திட்டம் பெரிதும் உதவும். இதைத்தவிர, தேசிய கல்வி இயக்கம், சமூக நலத் திட்டங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், சுகாதாரம் போன்ற பல துறைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் உயர்த்தப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன்.
வரிவிலக்கு அறிவிப்பு...
தனிநபர் வருமான வரிவிகிதங்கள் பெருமளவில் குறைக்கப்படலாம் என்று நடுத்தரவர்க்க மக்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான வரிவிதிக்கத்தக்க வருமானத்தின் மீதான வரிவிலக்கு என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. 50,000 ரூபாய் மதிப்பிலான நிலையானக் கழிவு என்ற அறிவிப்பும் மற்றும் வருமான வரி விதிப்பில், ஆதார நிலையிலேயே 40,000 ரூபாய் வரை வைப்புத் தொகைக்கான வட்டியை கழித்து கொள்வதற்கான அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினர், மாத ஊதியம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி அளிக்கும். இது நடுத்தர வர்க்கத்தினருக்காகவே அவர்களது நன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களது பிரச்னைகளை சமாளிப்பதற்கு உதவும் வகையில் செய்யப்பட்டுள்ள பொருத்தமான அறிவிப்பாகும்.
அனைவருக்கும் வீடு...
பசுவளர்ப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு, 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு, போன்ற திட்டங்களின் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடடையும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்க்கதக்கது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.