எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற கருத்துகளை மு.க. ஸ்டாலின் பேசி வருகிறார் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்திக்கையில் தெரிவித்தார்.
சேலம் அஸ்தம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி: மத்திய அரசு இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற பட்ஜெட் தொடர்பாக...
பதில்: மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. அந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கின்றார்கள். குறிப்பாக, சிறுகுறு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்ப, கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பசு வளர்ப்புத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றார்கள். ஏழைகளுக்கு உணவு வழங்குகின்ற திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஏழைகளுக்கு கிடைக்கப் பெற்ற மிகப்பெரிய நன்மை என்று நான் கருதுகின்றேன்.
கேள்வி: பல கட்சிகள், இது தேர்தலுக்கான அறிவிப்பு என்று விமர்சனம் செய்திருக்கிறார்கள்...
பதில்: மக்களுக்கு நன்மை செய்வதுதான் அரசினுடைய கடமை. அந்த அடிப்படையிலே மத்திய அரசு, குறிப்பாக, ஏழைகளுக்கு, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. திட்டத்தை அறிவித்தால், அதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள், தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட அறிவிப்பு என்று சொல்கிறார்கள், அறிவிக்காவிட்டால், இந்த பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை, உப்பும் இல்லை, சத்தும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆகவே, ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கின்றபொழுது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை வழங்கும் என்று எதிர்பார்த்துதான் மக்கள் அந்த அரசை தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த அடிப்படையிலே மத்திய அரசு, மக்களுக்குத் தேவையான திட்டங்களை இப்பொழுது அறிவித்திருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு 5 லட்சமாக அறிவித்திருக்கின்றார்கள். அது, வேலைக்குச் செல்கின்றவர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.
கேள்வி: விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்யவேண்டுமென்று பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள், ஆனால் அந்த கடனை தள்ளுபடி செய்வதற்கும், புதிய கடன் தொடர்பாக இதில் எந்த அறிவிப்புமே இல்லையே ?
பதில்: தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், விவசாயிகளுக்கு அம்மா இருக்கின்றபோழுதே, சிறு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க் கடன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பயிர்க்கடன் வட்டியில்லா கடனும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயிகளுக்கு இன்னும் கூடுதலான சலுகை செய்யப்படுகிறது. நடவு மானியம், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம், சம்பா தொகுப்புத் திட்டம் போன்றவையெல்லாம் கொடுத்திருக்கிறோம். தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை அம்மாவினுடைய அரசு தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
கேள்வி: மத்திய அரசில் இந்த கடன் தள்ளுபடி இல்லையென்ற ஒரு குற்றச்சாட்டை விவசாயிகள் முன்வைக்கிறார்களே?
பதில்: மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு. அது தேசிய அரசு. பல்வேறு மாநிலங்களுடைய நிலையில் இருந்து தான் அறிவிப்பார்கள். நம்முடைய மாநிலத்தில் இருக்கும் பிரச்சினையைத் தான் நான் பேச முடியும்.
கேள்வி: தமிழக அரசின் அடுத்து வரும் இந்த பட்ஜெட் இதுபோன்ற ஒரு கவர்ச்சிகரமான பட்ஜெட்டாக அமையுமா?
பதில்: பட்ஜெட்டில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதெப்படி பட்ஜெட்டில் இருப்பதை முன்கூட்டியே நாம் சொல்ல முடியும்?
கேள்வி: தொழில் முனைவோர் மாநாடு நடத்தினீர்களே, எவ்வளவு நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது?
பதில்: அம்மா 2015-ல், தமிழகம் இந்தியாவிலேயே தொழில் துவங்குவதிலே ஒரு முன்னிலை மாநிலமாக திகழவேண்டும் என்பதற்காக தொழில் முனைவோர் மாநாட்டை சென்னையிலே 2015-ல் முதன்முதலாக தொடங்கினார்கள், அண்மையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலே சுமார் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு செய்வதற்காக முன்வந்து, 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கின்றது, இது ஒரு வரலாற்றுச் சாதனை, அம்மா அரசிற்கு கிடைக்கப் பெற்ற பெரிய வெற்றி. அதுமட்டுமல்லாமல், கிட்டத்தட்ட நேரடியாக 5 லட்சம் நபர்களுக்கும், மறைமுகமாக 5 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி: இப்பொழுது தேர்தல் வர இருக்கின்றது, கூட்டணி பற்றி...
பதில்: நான் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன். தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கும், கூட்டணி ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகும். ஏனென்று சொன்னால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பகுதியிலே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரைக்கும், தேர்தல் அறிவித்த பிறகுதான் கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கும். அம்மா இருக்கும்பொழுது, வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக முன்கூட்டியே அறிவிப்பு செய்வார்கள். அதன் அடிப்படையிலே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிடகின்ற கழக வேட்பாளர்கள், எந்த நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற விருப்ப மனுவை தருகின்றார்களோ அந்தத் தொகுதியில் வேட்பு மனு கட்டணத்துடன் அந்த வேட்பு மனுவை பூர்த்தி செய்து, தலைமைக் கழகத்தில் சேர்ப்பதற்கு 4-ஆம் தேதியிலிருந்து 10-ஆம் தேதி வரை கால அளவு கொடுக்கப்பட்டு, அந்த கால அளவுக்குள் தாங்கள் போட்டியிட விரும்புகின்ற தொகுதியில் அவர்கள் விருப்ப மனு அளிப்பார்கள்.
கேள்வி: அரசு ஊழியர்களின் போராட்டத்தை நீங்கள் ஒடுக்கியது உண்மையாக, உங்களுக்கு பாராட்டுகள் குவிகிறது, இருந்தாலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ...
பதில்: நீங்கள் கேட்பதே தவறான கேள்வி. ஒடுக்கப்பட்டது என்ற வார்த்தை தவறான வார்த்தை. அரசு ஊழியர்கள் போராட்டத்தை ஒடுக்குவது என்பது தவறான வார்த்தை, திருத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள் அவ்வளவு தான், ஒடுக்கப்பட்டது என்பதெல்லாம் தவறு. இது ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டிலே அவரவர்களது உரிமையை பெறுவதற்கு அவர்கள் கோரிக்கை வைப்பார்கள், அதன் அடிப்படையில் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். எது நியாயமான கோரிக்கையோ, அதை அரசு நிறைவேற்றும்.
கேள்வி: அவர்கள் மீதான நடவடிக்கை எப்படி இருக்கும்?
பதில்: யார் போராட்டம் செய்தாலும் சரி, நீங்கள் போராட்டம் செய்தாலும் சரி, ஆசிரியர்கள் போராட்டம் செய்தாலும் சரி, மற்ற அமைப்புகள் போராட்டம் செய்தாலும் சரி, பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களது கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடக்கின்ற பொழுது சட்டரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைதான், அவர்கள் மீதும் எடுத்திருக்கிறோமே தவிர வேறு எதுவும் கிடையாது.
கேள்வி: ஸ்டாலின் கிராமசபை கூட்டங்களில் சென்று, அரசு எதுவும் செய்யவில்லை, உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே?
பதில்: என் மீது விமர்சனம் செய்வதற்கும், கிராம சபை கூட்டத்திற்கும் சம்பந்தமே கிடையாது. அவருடைய திட்டம் என்னவென்றால், எங்களைத் தாக்கி பேசவேண்டும் என்பதற்காகத் தான் இந்த கிராம சபை கூட்டத்தை பயன்படுத்துகிறாரே தவிர, மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்ற அடிப்படையில் இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுவதாகத் தெரியவில்லை. நீங்கள் கேட்கும் கேள்வியிலேயே அந்தப் பொருள் தான் அடங்கியிருக்கிறது. உண்மையிலேயே கிராமப்புற மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்றால், அங்கிருக்கிற பிரச்சினையை பேசினால் சரியாக இருக்கும், அதை விட்டுவிட்டு, அவர் ஏதேதோ பேசிப் பார்த்தார், எத்தனையோ போராட்டங்களை தூண்டிவிட்டார், எத்தனையோ பொய் வழக்குகள் போடுவதற்கு முயற்சி செய்தார், அத்தனையும் தோல்வியில் முடிந்துவிட்டது. என்றைக்கும் உண்மை தான் வெல்லும், தர்மம் தான் வெல்லும், நீதி தான் வெல்லும். அந்த அடிப்படையிலே, அவர்கள் போட்டது அத்தனையுமே பொய்த்து விட்டது.
அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அந்த கிராம சபை கூட்டத்தில், தேவையற்ற கருத்துக்களை அவர் பேசி வருகிறார், அவர் விரக்தியின் விளிம்பிற்கு சென்று விட்டார், வேறு ஒன்றும் கிடையாது. அவர் கிராம சபை கூட்டத்தில், நான் எல்லா கிராமத்திற்கும் போய்விட்டு வந்தேன் என்கிறார், எத்தனை முறை நம்முடைய மாவட்டத்திற்கு வந்தார்? அவர் சொன்னார், கிராமம் தான் கோயில் என்று. நல்ல வேளை இப்பொழுதுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது கிராமம் தான் கோயில் என்று. இவர் ஆளுகின்ற தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த பொழுது, அவருடைய பணிகள் என்ன ? கிராமமானாலும், நகரமானாலும், பேரூராட்சியானாலும், மாநகராட்சியானாலும் சரி, அந்தப் பகுதியில் இருக்கின்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கின்ற பணி அந்தத் துறைக்கு இருந்தது, அந்த துறைக்கு அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தார், என்ன செய்தார்? அங்கு கூட்டுக் குடிநீர் திட்டம் இல்லை, டுiபாவ இல்லை, ரோடு இல்லை என்கிறார். உங்களை ஆட்சியிலே அமர்த்தி, உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பும் கொடுத்து, அதிலும், பதவியில் இருந்த காலத்தில் ஏன் செய்யவில்லை என்பதுதான் நம்முடைய கேள்வி.
கேள்வி: இடைக்கால பட்ஜெட்டை தம்பிதுரை புறக்கணித்திருக்கிறாரே?
பதில்: இதுவரையில், அதைப்பற்றி தகவல் வரவில்லை.
இவ்வாறு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 6 days ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 6 days ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 6 days ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 15 hours ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 2 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்1 day 5 sec ago |
மினி பான் கேக்4 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
பிரச்சார செலவுக்கு பணம் இல்லை: தேர்தலில் இருந்து விலகும் பூரி தொகுதி காங். வேட்பாளர்
04 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.