எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புளியங்குடி, மார்ச்10 - பலகோடி ரூபாய் ஊழல் செய்த தி.மு.க.வை அடியோடு வீட்டுக்கு அனுப்புங்கள் என்று சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வியை ஆதரித்து ச.ம.க. தலைவர் சரத்குமார் வாக்குகள் சேகரித்தார். சங்கரன்கோவில் தொகுதி சேர்ந்தமரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜாசெந்துார்பாண்டியன், அமைச்சர் பச்சைமால், கேபிள் டி.வி. சேர்மன் உடுமலை ராதாகிருஷ்ணன், ச.ம.க. எர்ணாவூர் நாராயணன் முன்னிலையில் ச.ம.க. பொதுச் செயலாளர் கருநாகராஜன், மாநில அமைப்பு செயலாளர் காளிதாசன், இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், பொது செயலாளர் கண்ணன், அ.தி.மு.க. மாநில துணைத்தலைவர் மூர்த்தி, கீழப்பாவூர் சேர்மன் செல்வமோகன்ராஜ், புளியங்குடி சேர்மன் சங்கரபாண்டியன், அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். ச.ம.க. தலைவர் சரத்குமார் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் திடல் முழுவதும் நிரம்பி வழிந்தனர்.
கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசும் போது, பெண்களின் வாழ்வில் வழிகாட்டி நமது முதல்வர். அதனால்தான் சகோதரி முத்துச்செல்வி அவர்களை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். சகோதரி முத்துச்செல்வி படித்தவர், பண்பாளர் அதனால் உங்களின் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் அளித்து அமோக வெற்றியினை தாருங்கள். தாய்மார்களுக்காக தாலிக்கு தங்கம் தந்தவர் நமது முதல்வர். குடும்பத்தில் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்து கறவைமாடுகள், ஆடுகள், விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் மற்றும் கல்வி பயிலும் மாணவ மாணவர்களை எப்படி உயர்த்த வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்து விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள் இப்படி தாய்மார்களும், மாணவர்களும் எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து, இரவு பகல் பாராமல் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழ்நாட்டை முன்மாதிரியான மாநிலமாக மாற்றி வருகிறார் நமது முதல்வர். முதல்அமைச்சர் என்று சொன்னால் இவரைப் போல்தான் இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வையுள்ள முதல்வரின் காலடியில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வெற்றியை நாம் சமர்ப்பிக்க வேண்டும். உங்களுக்கு ஒரு கதையை இத்தருணத்தில் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு சிற்பி ஒரு மலையை சின்ன உழியால் உடைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வழிப்போக்கன், அய்யா என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அந்த சிற்பி சொன்னார். இந்த மலையை கடக்க மூன்று நாட்கள் ஆகிறது. அதனால் இந்த மலையை குடைந்து ரோடு போட்டால் அரை மணி நேரத்தில் அடுத்த ஊரை சென்றடையலாம் என்றார் அதற்கு வழிப்போக்கன் சொன்னான், இந்த பணி முடியும் தருவாயில் நீங்கள் உயிரோடு இருப்பீர்களா? இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றான். சிற்பி சொன்னார், என் காலம் முடிவதைப் பற்றி கவலைப்படவில்லை. என் எதிர்கால சந்ததியினர் இதை அனுபவிக்க வேண்டும். பயனடைய வேண்டும் என்றார். அதைப்போல் தான் நம் முதல்வர் எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததியினரையும் பற்றி சிந்தனையோடு செயல்பட்டு வருகிறார்.
அவரை முதல்வராக பெற்றதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழகத்திலே ஏற்பட்டிருக்கக்கூடிய மின் தட்டுப்பாடு என்பது யாரால் ஏற்பட்டது என்பது எல்லோருக்கும் நன்கு தெரியும். கடந்த தி.மு.க. ஆட்சியில் மின் உபகரணங்கள் சரியாக செயல்படுத்தப்படாமல், பராமரிக்கப்படாமல், மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தை இருளில் தள்ளியது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் உலகத்தையே உற்று நோக்க வைத்திட்ட தி.மு.க. உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடியை சுருட்டியவர்களை திகார் ஜெயிலுக்கு அனுப்பி ஆட்சியை அகற்றினோம். அப்போர்ப்பட்ட ஊழல் வாதிகளை என்றுமே ஆட்சிப் பொறுப்பில் அமர்த்த மாட்டோம் என நாம் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழக மக்களின் பெருமையை சாகடித்த தி.மு.க. குடும்பம் அதிலும் முன்னாள் முதல்வரின் மகள் கனிமொழியே ஊழல்வாதி என்று சொன்னால் அந்த தி.மு.க.வை இனி நாம் ஏற்க முடியுமா? அப்பேர்ப்பட்ட தி.மு.க. இனி ஓட்டு கேட்டு வந்தாலும் நல்ல சிந்தனையாளர்கள் நாட்டின் மேல் அக்கறையுள்ள நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்காமல் நல்ல பல திட்டங்களையும் நம் நலனில் அக்கறை கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்த இரட்டை இலைக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.