எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.13 - சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி நேற்று தாக்கல் செய்தார். 2012 - 2013-ம் ஆண்டுக்கான வரவு 1396 கோடி எனவும் செலவு 1392 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி விபரம் வருமாறு:- சென்னை மாநகராட்சி கடந்த உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக அ.தி.மு.க பெரும்பன்மை பலத்துடன் கைப்பற்றியது. மேயராக சைதை துரைசாமி தேர்வு செய்யப்பட்டார். சென்னை மாநகராட்சியை அ.தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியது. வரும் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை மேயர் சைதை துரைசாமி நேற்று தாக்கல் செய்தார். நிதி நிலை அறிக்கையை நிலைக்குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.
நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு மாநகராட்சியின் முதல் பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். 100 பக்கங்கள் கொண்ட பட்ஜெட் புத்தகத்தில் 50 பக்கங்களுக்கு நூறு அறிவிப்புகள் இருந்தது.
மனித நேய தன்மை கொண்ட மேயர் துரைசாமியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் மனித நேய தன்மையுடன் பட்ஜெட் இருந்தது. பட்ஜெட்டில் 2012-ம் ஆண்டு வருவாய் ரூ.1396.63 கோடியாகவும் செலவு ரூ.1392.68 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக ரூ.4 கோடி உபரி தொகையுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை மேயர் வெளியிட்டுள்ளார். மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குருப்-1 மற்றும் அகில இந்திய பொறியியல் மருத்துவம் போன்ற பணிகளுக்கு தேர்வு எழுதும் வகையில் அவர்களை தயார்படுத்த சிறப்பு அடிப்படை பாடப்பிரிவுகள் துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் நேர்த்தியாக பேசும் வகையில் தயார் படுத்திட 6,7,8,ம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பேசும் பயிற்சி அளிக்கப்படும். அனைத்தும் பள்ளிகளிலும் நூலகங்கள் புனரமைக்கப்படும். பள்ளிகளில் தூயகுடிநீர் கிடைக்க வழிசெய்தல் பள்ளிகளில் கழிவரைகள் புதுப்பிக்கப்பட்டு பராமரிப்பது ஒவ்வொரு பருவத்தேர்வு முடிந்தவுடன் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்துவது, 30 பள்ளிகளுக்கும் இசைப்பயிற்சி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், நூறு தொடக்க பள்ளிகளில் விளையாட்டு மையங்கள் ஏற்படுத்துதல் மாணவர்களுக்கு புதிய சுதாதார அட்டை வழங்குதல் மாநகராட்சியின் கீழ் இயங்கும் 38 மேனிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் கற்பித்தலை மேம்படுத்த ஒலி-காணொளி வடிவமைப்பு உருவாக்கப்படும் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கான தனி பாடத்திட்டங்கள் உருவாக்குவது போன்ற அதிரடியான 29 அறிவிப்புகளை கல்விக்காக மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதே போல் விரிவாக்கம் செய்யப்பட்டு சென்னை யோடு இணைக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செய்ததும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் கூறப்பட்டிருந்தது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் 4 மகப்போது மையங்களை புதுப்பிப்பது எனவும் இரண்டு புதிய மகப்பேறு மையங்களை நிறுவுவது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மண்டல, வார்டு, பகுதி, அலுவலகங்கள் அமைக்கவும் 7 பாலங்கள் புதிதாக அமைக்கவும் மேலும் 7 புதிய பாலங்கள் அமைக்கவும் வழிகாணவும் திட்டமிட்டப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சூழல் விளக்குகள் பொறுத்தப்பட்ட உள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் உள்ள மணலி பகுதியை சி.எம்.டி.ஏ.விலிருந்து மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது என கூறப்பட்டுள்ளது.
சாலைகள் மேம்பாட்டிற்க்காக 15 மண்டலங்களிலும் உட்புற தார்சாலைகள், பேருந்து சாலைகள் அமைக்க ரூ.581 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலைகளின் தரத்தை மேம்படுத்த வல்லூநர் குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகளுக்காக ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஐந்தாயிரம் மழைநீர் வடிகால் நுழைவாய்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிக்க தொட்டிகள் அமைக்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பசுமையாக்க முதற்கட்டமாக நூறு பூங்காக்கள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இவைகளில் மூலிகை இன தாவரங்கள் பயிரிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
கொசுத்தொல்லையை போக்க ஆகாயதாமரைகளை அழிக்கும் வகையில் நிலத்திலும் நீரிலும் செல்லும் வாகனம் வாங்கப்படஉள்ளது. 3 கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஆராய்ச்சி முறையில் கொசுக்களை ஒழிக்க ஆய்வு செய்யப்பட்டு சோதிக்கப்பட உள்ளது.
தெருநாய்களை பாதுகாக்க நாய்கள் காப்பகம் அமைத்து முதல்கட்டமாக தெருவில் சுற்றிதிரியும் 2 ஆயிரம் நாய்கள் அப்புறப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளத இதே போல் எலித்தொல்லையை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போல் கட்டிடம் கட்டுபவர்கள் கட்டிடவரை பட அனுமதி பெறுவதை எளிதாக்கும் விதத்தில் எல்லா நடைமுறைகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
மாநகராட்சி சொத்து வருவாயை சீரமைக்க கடந்த ஆட்சியில் இருந்த சீர்கேடுகளை களைந்து சிறப்பு வகை கட்டங்களான திரையரங்குகள், திருமண கூடங்கள், தனியார் மருத்துவ மனைகள் போன்றவைகள் உள்ளது போல் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழிற் கூடங்களையும் எந்த இனங்களில் கொண்டு வருவது என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுடன் மண்டல தலைவர்கள் உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். முடிவில் பட்ஜெட் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்6 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 7 hours ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி