எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,மார்ச்.24 - ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்ட தொழில் அதிபர் சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில், சாதிக் பாட்ஷா வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஏதுவாக அரங்கேற்றப்பட்ட செயற்கையான நாடகம்தான் இது என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சாதிக் பாட்ஷா விவகாரத்தில் மர்மம் மென்மேலும் வலுத்துவருகிறது.
நாட்டிற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாட்ஷா, சென்னை தேனாம்பேட்டையில் எஙுடீடீடூ ஏச்சீஙூடீ டஙுச்ஙிச்சிடீஙுஙூ என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைமாறிய பணம் சாதிக் பாட்ஷா மூலமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதனைத் தொடர்ந்து, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு, மூன்றாவது மனைவியின் மகள் கனிமொழி ஆகியோரிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த 16-ம் தேதி, சாதிக் பாட்ஷாவிடம் விசாரணை நடத்த இருந்தனர். இதற்காக டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சாதிக் பாட்ஷா, அன்றைய தினம் பகல் 1 மணியளவில் தேனாம்பேட்டையில் தனது இல்லத்தில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாதிக் பாட்ஷாவின் திடீர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வீட்டிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சாதிக்பாட்ஷாவின் உடல், பின்னர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டபோது, முழுவதுமாக துணியால் மூடப்பட்டது ஏன்?
வீட்டின் இருந்து, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வண்டியில் சாதிக் பாட்ஷா ஏற்றப்பட்டபோதே, அவர் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன் பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
சாதிக் பாட்ஷா இறந்து 3 மணி நேரம் வரை, உடல் இருந்த தனியார் மருத்துவமனைக்கோ, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட ராயப்பேட்டை மருத்துவமனைக்கோ அவரது மனைவி வராதது ஏன்?
சாதிக் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டபோது அணிந்திருந்த உடைகள், தனியார் மருத்துவமனையில் அகற்றப்பட்டது ஏன்?
கொலையா? தற்கொலையா? என்பதைக் கண்டுபிடிக்கப்பதற்கான தடயங்களை மறைப்பதற்காக அவரது உடைகள் திட்டமிட்டே அகற்றப்பட்டனவா?
சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியதாகக் கூறப்படும் அறையின் மொத்த உயரம் 9 அடி. அதில் மூன்றேகால் அடி உயரத்திற்கு கம்பி பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளது ஐந்தேமுக்கால் அடி ஐந்தரை அடி உயரமுள்ள சாதிக் பாட்ஷா எவ்வாறு அதில் தற்கொலை செய்து கொள்ள முடியம்? என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
கருணாநிதி மகள் கனிமொழியிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், டெல்லி நீதிமன்றத்தில் வரும் 31-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனிடையே, சாதிக் பாட்ஷா அப்ரூவராக மாற முடிவு செய்திருந்ததாகவும், இதனை அறிந்த சிலர் தொடர்ந்து சாதிக் பாட்ஷாவை மிரட்டி வந்தததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் சாதிக் பாட்ஷாவிற்கு துளியும் கிடையாது என்று அவரது நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். சாதிக் பாட்ஷாவின் உடலில் கொலைக்கான அடையாளங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமின்றி, இது திட்டமிட்ட படுகொலை என்றும் பல்வேறு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.
இதனிடையே, சாதிக் பாட்ஷா விவகாரத்தில் அரங்கேற்றப்பட்டவை அனைத்தும் செயற்கையான நாடகமே என்றும், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு ஏதுவாக இந்த நாடகம் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதிக் பாட்ஷாவை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு, ஏற்கனவெ இறந்துபோன வேறு ஒருவரின் உடலை, சாதிக் பாட்ஷா உடல் எனக் கூறி, மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, சாதிக் பாட்ஷாவின் உடலை, பிரேதப் பரிசோதனை செய்த சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டாக்டர்.ய.டெக்கால் (ய.ஈஉகூஹங்) தான்பரிசோதனை நடத்தியது சாதிக் பாட்ஷாவின் உடல்தானா? என்பது தனக்குத் தெரியாது என்றும், தன்னிடம் அளிக்கப்பட்ட உடல், சாதிக் பாட்ஷாவின் உடல் என்று போலீசார் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விராசணை கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களையும், குடும்ப நிறுவனத்தையும் நெருங்கியுள்ள நிலையில், ஊழலில் முக்கியத் தொடர்புடைய சாதிக் பாட்ஷா, தற்கொலை செய்து கொண்டாரா? திட்டமிட்டே கொலை செய்யப்பட்டாரா? அல்லது வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டாரா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருப்பது மர்ம முடிச்சுக்களை மென்மேலும் வலுவடையச் செய்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.