எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : விடுதலைப் புலிகளுக்கு பொய்யான வாக்குறுதி தந்தவர் கனிமொழி என்றும், ஈழத் தமிழின படுகொலைக்கு காரணமே அன்றைய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிதான் என்றும் அ.தி.மு.க. வெளியிட்ட கூடுதல் தேர்தல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலையொட்டி அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அண்மையில் வெளியிட்டனர். இந்த நிலையில் நேற்று அ.தி.மு.க. சார்பில் கூடுதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்கள் வருமாறு:-
இலங்கை வாழ் தமிழ் மக்கள் மொழியுரிமை, சொத்துரிமை, இன பாகுபாடற்ற சம உரிமை, ஆட்சி அதிகாரப் பகிர்வு உரிமை, வாழ்வாதார உரிமை போன்றவற்றிற்காக நீண்ட காலமாக தியாக உணர்வுடன் கடுமையாக போராடி வந்தார்கள். என்றாவது ஒருநாள் நிவாரணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால், 2009-ல் இவர்களது நம்பிக்கையில் மிகப் பெரிய இடி விழுந்து பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சே ஆட்சியில் அன்றைய தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசின் உதவியுடன் 19.5.2009 -ல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காமல் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவ நடவடிக்கை மூலமாக சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட விஷவாயு குண்டுகளை வீசியும் சுட்டு வீழ்த்தியும் கொடுமையான முறையில் கற்பழித்தும் கொத்துக் கொத்தாக தமிழ் மக்களை கொன்று குவித்தார்கள்.
கனிமொழியின் பேச்சை கேட்டு..
தமிழ் ஈழத்தில் ஆண்டாண்டு காலமாக உரிமைகளை மீட்டெடுக்க நடைபெற்று வந்த போரில், உச்சக்கட்ட போர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. ஈழத் தமிழர்கள் வென்று விடுவார்கள் என்ற நிலையை அறிந்த சூழ்ச்சியாளர்கள், சமாதான தூதுவர்களாக கபட வேடம் பூண்டு ஈழத் தமிழ் இனத்தையே அழிக்கத் துணிந்தார்கள். இலங்கை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் வேதனைக் குரல் உண்மைத் தமிழர்களின் இதயங்களை பிளப்பதாக உள்ளது. அதாவது, 16.5.2009-ம் தேதி இரவு 8 மணியளவில் தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் சார்பாக என் கணவர் போராளி எழிலன் என்கிற சசிதரனோடும், போராளி நடேசனோடும் பேசிய தமிழக முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி, நீங்கள் அனைவரும் ஆயுதங்களை போட்டு விட்டு சரணடைந்து விடுங்கள். உங்களின் விடுதலை தொடர்பாக சர்வதேசத்துடன் பேசியுள்ளோம். உங்களை விடுதலை செய்யவும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று வாக்குறுதி தந்தார்.
நயவஞ்சக வார்த்தை
கனிமொழியின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி 17.5.2009-ம் தேதி என் கணவர் எழிலன் என்கிற சசிதரன் உட்பட போராளிகள், குடும்பப் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளங் குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரை பிரான்சிஸ் ஜோசப் என்ற பாதிரியார் முன்னிலையில் நிராயுதபாணிகளாக, சிங்கள ராணுவத்திடம் நானே சென்று ஒப்படைத்தேன். ஆனால், சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இந்தக் கொடிய நயவஞ்சக செயலை முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி திட்டமிட்டு செய்தார் என்ற அதிர்ச்சி தரும் சதித்திட்ட தகவலை இலங்கை வடக்கு மாகாண பிரதிநிதி ஆனந்தி சசிதரன் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாக உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். இக்கொடுஞ் செயல்களை தட்டிக் கேட்டு, தடுத்து நிறுத்த வேண்டிய தமிழகத்தை ஆண்ட அன்றைய முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வாய்மூடி மௌனியாக இருந்ததுடன் உண்ணாவிரதம் என்ற பெயரில் போலி நாடகத்தை நடத்தி சிங்கள அதிபர் . ராஜபக்சே நடத்திய ஈழத் தமிழர் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்தார்கள்.
மெரினாவில் போலி நாடகம்
தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை மெரினா கடற்கரையில் போலியான ஒரு உண்ணாவிரத நாடகம் அரங்கேறியது. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ இனப் படுகொலைப் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த போது, தமிழீழப் போராளிகள் அந்த இறுதி கட்டப் போரில் வென்று விடக் கூடிய நிலையும் இருந்தது. தமிழீழ போராளிகளையும், தமிழ் ஈழ மக்களையும் ஏமாற்றி அந்தப் போரில் தமிழீழ போராளிகளைத் தோற்கடிக்க தி.மு.க. தலைவர் கருணாநிதி சூழ்ச்சி வலை பின்னினார். ஈழத்தில் போரை சிங்கள அரசு நிறுத்தி விட்டது. அங்கு சுமூக சூழ்நிலை உருவாகி உள்ளது என்ற வஞ்சகமான பொய்யை உலகத் தமிழர்களும், ஈழப் போராளிகளும் அறியும் வண்ணம் தெரிவித்து விட்டு போலியாக ஆரம்பித்த உண்ணாவிரத நாடகத்தை இரண்டு மணி நேரத்திலேயே முடித்து விடுகிறார்.
டெல்லியை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசுக்கு தூணாகவும், உற்ற ஆலோசகராகவும் இருந்த கருணாநிதியே போர் நின்று விட்டது, அங்கு அமைதிச் சூழ்நிலை உருவாகிறது என்று வஞ்சகமாகக் கூறியவற்றை ஈழத் தமிழர்களும், ஈழப் போராளிகளும் உண்மையென நம்பி போரையும் நிறுத்தி விட்டார்கள். இதில், தமிழ் ஈழப் போராளிகளும், ஈழத் தமிழ் மக்களும் முற்றிலும் ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியினுடைய அனைத்து வித சாதனங்களையும் பயன்படுத்தி நவீன ஆயுதங்களாலும் விஷவாயு குண்டுகளாலும் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழினத்தையே சிங்கள ராஜபக்சே அரசு அழித்து விட்டது.
சதித்திட்டம்
மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அரசும், இலங்கையை ஆண்ட சிங்கள அதிபர் ராஜபக்சே அரசுக்கு துணை போனது. செப்டம்பர் 2018-ல் இந்தியாவிற்கு வருகை புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியாவை ஆண்ட அரசாங்கத்தின் ஆதரவில்லாமல் தமிழ் ஈழப் போராளிகளுக்கு எதிரான போரில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற கொடிய உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதில் இருந்தே ஈழத் தமிழ் இன அழிப்பில், தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி அரசின் சதித் திட்ட பின்னணியை தெளிவாக உணர முடிகிறது.
இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழின படுகொலைகளுக்கு சிங்கள அதிபர் ராஜபக்சேவின் குடும்பமும், டெல்லியில் மைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி அரசும், விடுதலைப் புலிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி உள்ளிட்ட அவரது குடும்பமும் தான் முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தார்கள் என்று சமூக ஊடகச் செய்திகளும், வீடியோ பதிவுகளும் உறுதிப்படுத்துகின்றன.
ராஜபக்சேவிடம் கனிமொழி பெற்ற பரிசு
ஈழத் தமிழின அழிப்புப் போர் முடிந்த பிறகு, 2009-ம் ஆண்டு அக்டோபர் திங்களில் கருணாநிதியின் மகள் கனிமொழி தலைமையில் இந்திய அரசின் சார்பில் இனப் படுகொலைப் போரில் சிங்கள அதிபர் ராஜபக்சே பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க இலங்கை சென்றார்கள். அந்தக் கொடிய போரின் வெற்றிக்கு உதவிய கனிமொழி குழுவினருக்கு நன்றிக்கடனாக பாராட்டுதல்களையும், பரிசுப் பொருட்களையும் நன்றி உணர்வுடன் சிங்கள அதிபர் ராஜபக்சே வழங்கியதையும், இந்திய அரசின் தூதுவர்களாகச் சென்ற கனிமொழி குழுவினர் மகிழ்ச்சியுடனும், முக மலர்ச்சியுடனும் பெற்றுக் கொண்டதை ஊடகச் செய்திகளும், வீடியோ பதிவுகளும் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஈழத் தமிழினப் படுகொலைக்கு முக்கிய காரணமானவர்களான அன்றைய காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியாளர்களையும், அவர்கள் சார்பில் சிங்கள அதிபர் ராஜபக்சேவை சந்தித்து வாழ்த்துக் கூறி பரிசுப் பொருட்களைப் பெற்று வந்த கனிமொழி தலைமையிலான குழுவினரையும், இனப் படுகொலைக்கு காரணமான போர்க் குற்றவாளிகள் என்று அடையாளங்கண்டு ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும், இந்திய அரசாங்கமும் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக எடுத்து, தக்க தண்டனை வழங்க அ.தி.மு.க. பெரிதும் வலியுறுத்தும்.
ஈழத்தமிழர்களுக்கு பொது வாக்கெடுப்பு
படை உதவி, ஆயுத உதவி மற்றும் பொருளுதவி அளித்ததின் அடிப்படையில், ஈழத்தில் சிங்கள அரசால் வெறித்தனமாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகள் குறித்தும் இந்த இனப் படுகொலைகளுக்கு காரணமாக போர்க் குற்றவாளிகளை இனம் காண்பது குறித்தும், நம்பிக்கைத்தன்மையுள்ள பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஈழத் தமிழரின் கோரிக்கைகள் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அழுத்தம் கொடுப்பதற்கு இந்திய அரசையும், ஐக்கிய நாடுகள் அமைப்பையும், ஏனைய பன்னாட்டு அமைப்புகளையும் அ.தி.மு.க. வலியுறுத்தும்.
ஏழு தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை
இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு, இலங்கை அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும், இலங்கையில் வாழும் ஏனைய குடிமக்களுக்கு சமமாக தமிழர்களுக்கும் உரிமைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும், மாகாணங்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வு முறை கொண்டு வர வேண்டும் என்று இலங்கை அரசுக்கு திடமான அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்.
போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, வேளாண்மை, வீட்டு வசதி, தொழிலகங்கள் மற்றும் கல்வி ஆகியவை தொடர்பாக முழு அளவில் மறுவாழ்வு அளிக்க, அழுத்தம் கொடுக்குமாறு மத்திய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும். இந்திய உச்சநீதிமன்றத்தால் உத்திரவிடப்பட்டவாறும், தமிழ் நாடு அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டவாறும் ஏழு தமிழர்களையும் விடுவிப்பதற்கு, தமிழக ஆளுநருக்கு உரிய உத்தரவு பிறப்பிப்பதற்கு மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் அ.தி.மு.க. வலியுறுத்தும். இவ்வாறு அந்த தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 16 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 18 hours ago |
ஆனியன்ப்ரை6 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் கேப்டன் ரோகித்?
14 May 2024மும்பை : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர