எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.26 - அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை கொடுப்பதாக அறிவிப்பது விதி மீறல் அல்ல, இது அந்தந்த கட்சியின் தேர்தல் திட்டமாகும். எனவே. இது தேர்தல் விதிமீறல் அல்ல என்று பிரவீன்குமார் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சி.டி. மற்றும் போஸ்டர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டார். அதை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அந்த சி.டி.யில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, இசை அமைப்பளார் விஜய் ஆண்டனி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லும் வகையில் இந்த சி.டி. அமைந்துள்ளது.
இதேபோல் தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் மக்களாட்சிக்கு வாக்களிப்போம், மனசாட்சிக்கு வாக்களிப்போம், உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம், nullநீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கும் விலை மதிப்புள்ள உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர் களிடம் கூறியதாவது: அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சி.டி., போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள், திரையரங்குகள், பொது இடங்களில் ஒளிபரப்படும். போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்படும்.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தகுதி உள்ள அனைவரும் ஓட்டு போட வேண்டும். புகைப்படங்கள் அடங்கிய nullத் சிலிப், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடி ஊழியர்கள் இதை விநியோகம் செய்வார்கள். யாருக்காவது nullத் சிலிப் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை ஆகிய இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம் பெறவில்லை. இவர்கள் ஏற்கனவே தேர்தல் கமிஷன் அனுமதித்த 13 விதமான புகைப்பட சான்றிழ்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வேண்டும். மற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய nullத் சிலிப்பை கொண்டே ஓட்டு போடலாம். கிராமங்களில் கிராம அதிகாரிகள் மூலம் nullத் சிலிப் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 48 ஆயிரத்து 356 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.3.8 கோடி பணம் பறிமுதல் ஆகி இருக்கிறது. சிறிய அளவிலான தொகை விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெரிய அளவிலான ரொக்கப்பணம் வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. சோதனை தொடர்பாக கோர்ட்டுக்கு தேர்தல் கமிஷன் 28ந்தேதி விளக்கம் அளிக்கும். தற்போது தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்கள் குறைந்து விட்டது. ஏப்ரல் 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ந்தேதி முதல் மே 10ந்தேதி வரை வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை கேட்கும் கருத்துகணிப்பு வெளியிடக் கூடாது.
அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை வழங்குவதாக பிரச்சாரமும் செய்து வருகின்றனர். இது அந்தந்த கட்சிகளின் தேர்தல் திட்டம். எனவே இது தேர்தல் விதிமீறல் அல்ல. அது அந்த கட்சியின் வாக்குறுதி. எனவே இதை செய்வோம் என்று கூறி ஓட்டு கேட்கலாம். அரசு சார்பில் ஏதாவது செய்தால்தான் விதிமீறல் ஆகும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா? என்பதை மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிரச்சாரம் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைகள் வெளியிடலாம். விளம்பரங்களை தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. இதுவரை 1,509 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அதன்பிறகு அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: சிலர் தனிப்பட்ட முறையில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கிறார்களே? பதில்: இதுபற்றிய புகாரை 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தங்கள் கட்சியை தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க பெருமளவில் பணம் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருக்கிறாரே?
பதில்: இதுகுறித்து எந்தப் புகாரும் தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்4 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 1 day ago |
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
27 Apr 2024சென்னை, தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
அரசியல் எதிரிகளை பழிவாங்க அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் பதில் மனு
27 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் பதில்மனு தாக்கல் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்காக அமலாக்கத்துறைய
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இரண்டு குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி
27 Apr 2024இம்பால், மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளன
-
தமிழகத்தில் இயல்பைவிட 83 சதவீதம் மழை குறைவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
27 Apr 2024சென்னை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தே
-
பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை
27 Apr 2024சென்னை:பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சென்னை விடுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
உறவினர் உடல்நலக்குறைவால் மரணம்:ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
27 Apr 2024புதுடெல்லி:மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த பஞ்சாப்
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். வரலாற்றிலேயே அதிகபட்ச ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
-
சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
27 Apr 2024ஐதராபாத்:ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்.
-
அமெரிக்காவில் விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு: குஜராத்தைச் சேர்ந்தவர்கள்
27 Apr 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது : மத்திய பா.ஜ.க. அரசு மீது செல்வப்பெருந்தகை தாக்கு
27 Apr 2024சென்னை:பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், பா.ஜ.க.
-
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்:பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை
27 Apr 2024கொல்கத்தா:ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்கள் குவித்த ஷசாங்க் சிங், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிரான அமெரிக்க பல்கலை. மாணவர்கள் போராட்டம்: வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார்
28 Apr 2024வாஷிங்டன், இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயாக போலீசார் அப்புறப்படுத்தினர்.
-
பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் குஷ்பு தீவிர தேர்தல் பிரச்சாரம்
28 Apr 2024ஐதராபாத், தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
3நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி
28 Apr 2024சென்னை, 3 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.