எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.11 - வீட்டுவசதி வாரிய நிலத்தை அபகரித்த முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தம்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் கூறினார். நேற்று சட்டப்பேரவையில் வீட்டுவசதி வாரிய மானியக் கோரிக்கை மீதான கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் வைத்தியலிங்கம் பேசியதாவது:- வீட்டுவசடி வாரிய பொன் விழா ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா மாற்று திறனாளிகள் நலன் காக்கும் விதமாக வீட்டுவசதி வாரிய வீடுகள், மனைகள் ஒதுக்குவதில் 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டுள்ளார். மேலும் பொன் விழா ஆண்டை முன்னிட்டு வாரியத்தின் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் சிறப்பு கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வாரிய ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு 91 தொழில்நுட்ப பணியாளர்களுக்கும், 175 தொழில்நுட்பம் சாரா பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ரூ.34 கோடி செலவில் பழுதடைந்த வாரிய குடியிருப்புகளை புதுப்பித்து புனரமைக்கப்பட்டும் வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை வாரியத்திற்கு சொந்தமான வாடகை குடியிருப்புகளை அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்பதை மாற்றி அரசு சாரா ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் ஊழியர்கள், மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வாரிய பணியாளர்களுக்கும் முதல்வரின் ஆணைக்கிணங்க ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த 10 மாத கால ஆட்சியில் சென்னையில் மட்டும் ரூ.111 கோடி மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வாரியம் வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் ஒரு செண்ட் நிலம் கூட மீட்கப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆக்கிரமிப்பில் இருந்தவர்கள் தி.மு.க.வினர் அவரிகள் முதல்வரின் ஆணைக்கிணங்க மேலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வரும்போது எல்லாம் வீட்டு வசதி வாரியம் ``கோபாலபுரம் வீட்டுவசதி வாரியமாக மாறிவிடும்''
நந்தனம், லோட்டஸ் காலனி, 3,481 சதுர அடி நிலத்தில் 666 சதுர அடி வீட்டை 12.2.2012 அன்று விற்பனை செய்து விற்பனை பத்திரம் வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு 5 கோடி ரூபாய். ரூ.1,48,70,200/-யினை ஒரே தவணையில் செலுத்தியுள்ளார். இது 1961- சிட்டி இம்ப்ருமெண்ட் டிரஸ்ட் டால் கட்டப்பட்ட தனி வீடு. சட்டப்படி அரசு விருப்புரிமையே கிடையாது. சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையினை ரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் ஏ.எல். ஆறுமுகம் மற்றும் அவரது மகன் ஏ.மகேஷ் ஆகிய இருவரும் வாரியத்திற்கு சொந்தமான 0.84 ஏக்கர்(16 கிரவுண்ட்) நிலத்தினை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.17 கோடிக்கு மேல் இருக்கும். இவர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
2008-ம் ஆண்டில், உயர் வருவாய் பிரிவு மனை எண்.1023,1024, 1025 ஆகியவற்றை அரசு விருப்புரிமையின் கீழ் முன்னாள் முதலமைச்சரின் பாதுகாவலர்களாக பணியாற்றிய சி. கணேசன், சி.வினோதகன் மற்றும் இன்னொரு பாதுகாவலர் பாண்டியனின் மனைவி மீனா என்பவர்களது பெயரில் முறையே 4438 சதுர அடி, 4500 சதுர அடி, 4438 சதுர அடி மனைகள் முறையே ரூ.74,52,100/-ரூ.74, 13,100/-ரூ.75,28,500/- தொகைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூவரும் மனைக்கான தொகையை ஒரே நாளில் செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் விற்பனை பத்திரம் பெற்ற 18 நாட்களிலேயே வியாபார நோக்கில் வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டனர்.
இதே போன்று காட்பாடி நகரமைப்பு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமாக வணிக நோக்கத்திற்காக உள்ள இடங்களை 34, 800 சதுரஅடி உள்ள காலி இடத்தினை 13.12.2007 அன்று நடத்தப்பட்ட ஏலத்தில் அமைச்சர் துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி பெயரில் 4,800 சதுரடிகள் அவரது மகன் கதிரானந்தன் பெயரில் 5,400 சதுரடியும் ஆக மொத்தம் 15,600 சதுரடியை ரூ.78.78 இலட்சத்திற்கு ஏலம் எடுத்தனர்.2008-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விட்டோம் என்று நினைத்து எதிர்காலத்தில் நடவடிக்கை வரும் என்று பயந்து சங்கத்திற்கு திருப்ப ஒப்படைப்பு செய்தனர். அப்போதே துரைமுருகன் தி.மு.க. ஆட்சி போய்விடுமோ என்றும் ஜெயலலிதா ஆட்சி வந்துவிடும் என்று உறுப்பினர் துரைமுருகனுக்கு முன்பே தெரிந்திருக்கும் போல் உள்ளது. இதேபோல் 24.1.2007 மற்றும் 13.2.2007 ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட ஏலத்தில் வணிக நோக்கத்திற்குண்டான இடத்தை முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் தம்பி துரைசிங்காரம் மற்றும் அவரது துணைவியார் முல்லைகொடி துரைசிங்காரம் ஆகியோர் 22,000 சதுர அடியை ரூ.114.06 இலட்சத்திற்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். இதேபோன்று மேற்படி காலி மனைகளை முறைகேடாக விற்பனை செய்தது குறித்து சட்டப்பிரிவு 81-கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முறைகேடாக பெற்ற இடத்தை விசாரணைக்கு பயந்து ஒப்படைத்துவிட்டார். ஆனால் அவரது சகோதரரோ இதுவரை ஒப்படிக்கவில்லை. இது குறித்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். முறையே 6,000 சதுரடி மற்றும் 16.000 சதுரடி நிலத்தினை ரூ.28.26 இலட்சம் மற்றும் ரூ.85.80 இலட்சத்திற்கு யாரையும் ஏலம் கேட்கவிடாமல் மிக குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துள்ளார்கள்.
பின்னர் நடவடிக்கைக்கு பயந்து ஏலம் எடுத்த நிலத்தை சங்கத்திற்கு திரும்ப ஒப்படைக்கிறேன் என்று சொன்னவர்கள் திரும்ப நிலத்தை ஒப்படைப்பு செய்யவில்லை. கோயம்புத்தூர் மண்டலத்தில் பிஎஸ்ஜி கூட்டுறவு வீடுகட்டும் சங்கம், குறிச்சி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், சக்தி கூட்டுறவு வீட்டுவசதி சங்கம், கோத்தாரிமில் கூட்டுறவு சங்கம் போன்றவற்றில் நடைமுறைப்படுத்தாத வீட்டுமனை திட்டங்களை முன்பணம் என்ற பெயரில் தி.மு.க- வை சேர்ந்த எம்.பழனிச்சாமி எம்.என்.சுகுமார் மற்றும் சிலர் ரூ.8 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சட்டப்பிரிவு 81- ன் கீழ் விசாரணைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றவுடன் திட்ட அனுமதி வழங்குதல் பல்வேறு சீரிதிருத்தங்களை அமலாக்கியுள்ளது. முதலில், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை வகைப்படுத்தி, அலுவலகச் செயல்முறை ஆணை வெளியிட்டு அது அனைவரும் அறியும் வகையில், இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய மாற்றமாக, திட்ட அனுமதியில் இரட்டை அடுக்குமுறை புகுத்தப்பட்டு, மனை ஒப்புதல், கட்டிட ஒப்புதல் என்று பிரிக்கப்பட்டு, விரைவாக திட்ட அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்னரே செயல்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க 3.2.2012 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது இவ்வாறு அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி மயூர்பஞ்ச் தொகுதியில் போட்டி
02 May 2024புவனேஸ்வர் : ஒடிசாவின் மயூர்பஞ்ச் மக்களவை தொகுதியில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி சோரன் போட்டியிடுகிறார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப