எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : மத்திய அரசின் அணை பாதுகாப்பு திட்ட மசோதா தமிழகத்திற்கு உகந்ததாக இல்லையென்றால் எதிர்ப்போம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கேள்வி:- நிதி நிலைமை குறித்து ரூபாய் 30 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று துணை முதல்வர் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- சட்டமன்றத்திலே இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்வர் இருக்கின்ற நிதிநிலைமை பற்றி உரிய பதிலை சட்டமன்றத்தில் தெளிவாக சொல்லியிருக்கின்றார். அனைத்து ஊடகங்களிலும் அது வந்துள்ளது. அரசின் நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி:- நிதியைப் பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்?
பதில்:- நம்முடைய மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கி நம்முடைய தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே, நம்முடைய நிதியை பெறுவதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- அணை பாதுகாப்பு மசோதாவிற்கு என்ன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்?
பதில்:- அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒரு முறை கொண்டு வந்தார்கள், அப்படிக் கொண்டு வருகின்ற பொழுது, அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்து அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கினார்கள். மீண்டும் கொண்டு வந்தால் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையிலே எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள்.
கேரளாவில் கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்திக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க வேண்டுமானால் நம்முடைய அணைகளை நாம் பராமரிக்கக் கூடிய சூழ்நிலையை, திருத்தம் கொண்டு வரவேண்டுமென்று கடந்த கூட்டத் தொடரிலேயே நாங்கள் கூறினோம். ஆனால், கொண்டு வராத காரணத்தால் சட்டம் நிறைவேற்ற முடியவில்லை, இப்பொழுது எந்த வடிவத்தில் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை. ஆகவே, நமக்கு பாதுகாப்பான சட்டத்தைக் கொண்டு வந்தால் நாம் ஏற்போம். நம்முடைய மாநிலத்திற்கு உகந்ததாக இல்லையென்றால் அதை எதிர்ப்போம்.
கேள்வி:- ராசிமணல் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா?
பதில்:- எந்தவொரு மாநில அரசும் அணை கட்டவோ, நீரை மறுபக்கம் திருப்பவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்திருக்கிறது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். அந்தத் தீர்ப்பு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி நான்கு மாநிலங்களாலும் பின்பற்றப்படவேண்டும்.
கேள்வி:- அத்திவரதர் சிலையை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை குறைக்க இடமாற்றம் செய்யப்படுமா?
பதில்:- நேற்று உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அறநிலையத் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், டி.ஜி.பி. கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் தற்போது தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும். கோவில் குருக்களிடத்தில் வேறு ஏதாவது இடத்தில் வைக்க முடியுமா என்பது குறித்தும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிரமமின்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.
கேள்வி:- கர்நாடகா நிலையைப் பற்றி ஒரு முதல்வராக நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
பதில்:- இது அம்மாநிலப் பிரச்சினை. அதில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது.
கேள்வி:- சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கான ஏலம் அறிவித்திருக்கின்றார்களே?
பதில்:- அம்மா காலத்திலேயும், அதைத் தொடர்ந்து அம்மாவினுடைய அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாதென்று குரல் கொடுத்திருக்கின்றோம். தொடர்ந்து குரல் கொடுப்போம்.
கேள்வி:- உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது நடக்கும்?
பதில்:- உள்ளாட்சித் தேர்தல் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டதென்ற வரலாறு உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதன்பிறகு, வார்டு வரையறை முடிவு பெற்று விட்டது. உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் அறிவிப்பை அந்த அபிடவிட்டில் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
கேள்வி:- நிலத்தடி நீர் பாதிக்கப்படும்...
பதில்:- நீரை மிச்சப்படுத்தி முழுவதையும் பயன்படுத்துவது தான் நம்முடைய நோக்கம். நீர் மேலாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தி, பொறியாளர்களை வைத்து, இருக்கின்ற தண்ணீரில் ஒரு சொட்டுகூட வீணாகாமல் பாதுகாக்கப்படும். இதற்கு விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும். மேட்டூர் கிழக்கு, மேற்கு இரண்டு கால்வாய்களிலும் கான்கிரீட் தளம் அமைக்கின்ற பொழுது 20 சதவிகித நீர் மிச்சமாகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.