எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி.- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 73வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நா.ராஜேந்திரன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்கலைக்கழக மாணவ, மாணவியர் மற்றும் வளாகப் பாதுகாவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா உரை நிகழ்த்தினார்.
இந்த ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயரம் கொண்ட பாலிகான் கொடிக்கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு அதில் 20 அடி உயரம் 30 அடி நீளம் கொண்ட மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது அவர் தமது உரையில் இந்திய சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தேசிய தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு எல்லா துறைகளிலும் முன்னேறி வெற்றி நடைபோடுகிறது. பரந்த நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை எவ்வாறு ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் இந்தியாவில் கலாச்சார ஒற்றுமை பல ஆண்டுகளாக இருந்து வந்ததேயாகும். சுதந்திர போராட்ட வரலாற்றில் பாலகங்காதர திலகர், சுப்ரமணிய பாரதி, மகாத்மா காந்தி போன்றோர்களது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. நாட்டின் சுதந்திரத்திற்காக பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது, அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டம் முக்கிய இடம் பெறுகிறது. இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 17500 தியாகிகள் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டனர் என்றும் அவர்களில் 250 பேர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அழகப்பா பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் விரைவில் நடத்தப்பட உள்ளது என்றும், காந்திய படிப்பு துறையும் துவங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், தேசிய மாணவர் படை பிரிவு 9வது பட்டாலியன் காரைக்குடி சார்பில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை பிரிவு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தானாக முன்வந்து இப்படை பிரிவில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் இறையாண்மையை காப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமக்களின் முக்கிய கடமையாகும். கல்வி நிறுவனங்களின் வாயிலாக வழங்கப்படும் படிப்பு சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் அதற்கேற்றாற் போல் இளைஞர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது அதன் மக்கள் தொகை 30 கோடி தற்போது அது 135 கோடியாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்படவும், தேசத்தின் ஒற்றுமையை காத்து நாட்டின் வளர்ச்சி ஏற்படவும் பாடுபட வேண்டுமென இளைஞர்களை கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் தன் இன்னுயிர் நீத்த கார்கில் நாயகன் திரு.தங்கவேலு அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவரது துணைவியார் திருமதி.இன்பவள்ளி அவர்களுக்கும் மற்றும் 2017-ஆம் காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தன்னுயிர் நீத்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திரு.இளையராஜா அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் திருமதி.செல்வி அவர்களுக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னாடை மற்றும் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழச்சியில் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவினர், பதிவாளர் பேரா.குருமல்லேஷ் பிரபு, தேர்வு நெறியாளர் பேரா.உதயசூரியன், நிதி அலுவலர் பேரா.சந்திரமோகன், முதன்மையர்கள், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.எம்.சுந்தர், உடற்கல்வி இயக்குனர் முனைவர் செந்தில்குமரன் மற்றும் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்38 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை4 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 3 hours ago |
-
தொடர் வெடிவிபத்து: தீபாவளி முடியும்வரை பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்த தொழிலாளர் நலத்துறை உத்தரவு
15 May 2024சென்னை : தீபாவளி முடியும் வரை பட்டாசு ஆலைகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
-
யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
15 May 2024சென்னை : யானை வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
15 May 2024சென்னை : தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
நெல்லை காங். தலைவர் கொலை வழக்கு: குற்றவாளிகளை கண்டுபிடிக்க மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
15 May 2024நெல்லை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-05-2024.
15 May 2024 -
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: அமித்ஷா உறுதி
15 May 2024கொல்கத்தா : பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார்: பிரதமர் மோடிக்கு அமெரிக்கவாழ் பாகிஸ்தான் தொழிலதிபர் புகழாரம்
15 May 2024வாஷிங்டன் : இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என்றும், மோடியை போன்று பாகிஸ்தானுக்கும் ஒரு தலைவர் கிடைப்பார் என்றும் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானைச்
-
வெப்பம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் : தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
-
டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து கான்பூரில் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
15 May 2024கான்பூர் : டெல்லி, ராஜஸ்தானை தொடர்ந்து உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி
15 May 2024நியூயார்க் : பாலஸ்தீனத்தின் ரபாவில் நடந்த தாக்குதலில், ஐ.நா.வில் பணிபுரிந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்தார்.
-
ஈரான் துறைமுக ஒப்பந்த விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
15 May 2024புதுடெல்லி : ஈரானின் சபஹார் துறைமுக ஒப்பந்த விவகாரத்தில் எச்சரிக்கை விடுத்திருந்த அமெரிக்காவிற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
-
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 May 2024சென்னை : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரை எய்ம்ஸ்சுக்கு நிபந்தனையுடன் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அனுமதி
15 May 2024மதுரை : மதுரை மாவட்டம், தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு, பசுமை வளாகமாக இருப்பதை உறுதி செய்ய, எய்ம்ஸ் நிர்வாகத்
-
ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்யாவில் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது
15 May 2024மாஸ்கோ : ஊழல் குற்றச்சாட்டில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
சவுக்கு சங்கர் மீது கோவையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு
15 May 2024கோவை : முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கோவையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் குத்திக்கொலை
15 May 2024லண்டன் : இங்கிலாந்தில் பஸ் நிலையம் அருகே இந்திய வம்சாவளி மருத்துவ ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலி
15 May 2024சென்னை : செங்கல்பட்டு அருகே நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்தனர்
-
2 நாள் பயணமாக இன்று ரஷ்ய அதிபர் புடின் சீனா பயணம்
15 May 2024மாஸ்கோ : சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று சீனா செல்கிறார்.
-
பெண் காவலர்கள் தாக்கினர்: திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையீடு
15 May 2024திருச்சி : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து வேனில் அழைத்து வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் முறையிட்டார்.
-
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்
15 May 2024புதுடெல்லி : மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: ஆந்திராவில் 6 பேர் உடல் கருகி பலி
15 May 2024அமராவதி : ஆந்திராவில் லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ் தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
-
நெல்லை அரசு விரைவு பேருந்தில் துப்பாக்கி கொண்டு வந்தது யார்? - போலீசார் தீவிர விசாரணை
15 May 2024சென்னை : சென்னையில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்து துப்பாக்கி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரப
-
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
15 May 2024புதுடெல்லி : செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இன்றைக்கு ஒத்திவைத்துள்ளது.
-
தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல்கள் வெளியீடு : கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை : தமிழகத்தில் திருப்பூர், கோவை, தேனி, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.