எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : உழவனாய் பிறந்து இன்று தன உழைப்பால் முதல்வர் எடப்பாடியார் உயர்ந்துள்ளார் என, தமிழக முதல்வரின் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்ட முகாம் திறப்பு விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாராம் சூட்டினார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஏழை மக்களின் துயரங்களை தீர்க்க அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட ஏதுவாக புதியதாக மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த திட்டத்தின்படி புறநகர் பகுதிகளில் அதிகாரிகள் கிராமம், கிராமமாக மக்களை தேடிச்சென்று அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அந்த மனுக்களை கம்ப்யூட்டரில் பதிந்து அந்த மனு மீது 1 மாதத்தில் நடவடிக்கை எடுத்து அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்று விழா நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முதலாக அந்த திட்டத்தை எடப்பாடி தொகுதியில் முதல்வர் நேற்று துவக்கினார். பெரியசோரகை சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் முதன் முதலில் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின் வனவாசி பகுதியில் அரசு பள்ளியில் விழா நடந்ததது. இந்த விழாவில் தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார்.
வருவாய்த்துறை மற்றும் பேரிடம் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.வி. உதயகுமார் முன்னிலை உரையாற்றினார் அப்போது அவர் பேசியதாவது:-
உழவனாய் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடியார். மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் மக்களிடம் ஆட்சியர்,வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்று நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் அம்மா, அம்மா திட்ட முகாம் என்ற திட்டத்தினையும் செயல்படுத்தினார். தற்போது அண்ணன் எடப்பாடியார் அதிகாரிகளை மக்களை தேடி சென்று மனுக்களை வாங்கும் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மழை காலங்களில் ரிக்சா வண்டி ஒட்டுபவர்கள் மழையில் நனைந்தபடி வண்டி ஒட்டுவார்கள், உள்ளே இருப்பவர்கள் நனையாமல் இருப்பார்கள். அந்த நிலையை பார்த்த அவர் உடனடியாக அவர்களுக்கு மழை காலங்களில் மழை கோர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அதே போல் மதுரை, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெண் குழந்தைகள் பிறந்தாலே போதும் கள்ளி பால் ஊற்றி கொலை செய்யும் நிலை இருந்தது. அம்மா இதையறிந்து தொட்டில் குழந்தை என்னும் அற்புதமான திட்டத்தை கொண்டுவந்தார். இன்று பெண் சிசு கொலை தடுத்து நிறுத்தப்பட்டது.
அதை போல்தான் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள இந்த திட்டமும். இந்த திட்டம் மூலம் முதியோர் உதவி தொகை, பட்டா வழங்குதல், பொதுவார் பல ஆண்டுகள் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பார்கள் அவர்களுக்கு பட்டா இருக்காது. மேலும் நீர் நிலை புறம்போக்குகளில் இருப்பவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்க கூடாது என்றிருப்பதால், அவர்களுக்கு எல்லாம் தனியார் நிலத்தை கூட வாங்கி பட்டா வழங்கி வீடு கட்டி தரவும், பட்டா இருந்தும் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீடு கட்டி தரவும் இந்த திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இது மிகவும் அற்புதமான திட்டமாகும். அண்ணன் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்ததும். இவர் அம்மா மாதிரி செயல்படுவாரா என்று கேட்டவர்கல் இன்று அவர் அம்மா வழியில் சிறப்பாக செயல்படுவதாக சொல்கிறார்கள்.
அத்திரவரதர் 40 ஆண்டுகளுக்கு பின் அவதரித்தார். 79-ல் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் 10 லட்சம் பேர் வரை அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்த முறை அத்திவரதர் சயன கோலத்தில் இருந்த போது நாள்தோறும் பல்லாயிர கணக்கான மக்கள் அவரை தரிசிக்க வந்தனர். கட்டுகடங்காத கூட்டம் வந்த போதும் உடனுக்குடன் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி அதை சமாளிக்க நடவடிக்கை எடுத்தார்.
மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுத்து முதன் முதலாக தானே நன்கொடையும் வழங்கினார். அத்திரவரதர் நின்ற கோலத்தில் இருந்த போதுதான் வரம் தருவார் என்ற செய்தி பரவியதும். கட்டுக்கடகாத கூட்டம் வருகை தந்தது இதையும் சமாளித்தார். அங்கே வந்த நிறைமாத கர்ப்பிணி பெண் அத்திவரதரை பார்த்து குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு அத்திவரதர் என்று பெயர் சூட்டும் அளவிற்கு சிறப்பான நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டார். அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கொண்ட திருப்பதிக்கு நாள் தோறும் 75 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் அத்திவரதரை நாள்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசிக்கை அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் சிறப்பாக செய்திருந்தார்.
சேலம் மாவட்டம் மட்டுமே அறிந்திருந்த எடப்பாடியை இன்று தமிழகம், இந்தியா எங்கிலும் தெரிந்திட செய்துள்ளார். விரைவில் உலகெங்கும் இந்த எடப்பாடி தெரிய போகிறது. ஆம் தொழில் முதலீட்டை ஈர்க்க முதல்வர் லண்டன் மற்றும் அமெரிக்க செல்கிறார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் செல்கின்றனர். நிச்சயம் அதிலும் அவர் வெற்றி வாகை சூடுவார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மேட்டூர் செம்மலை, சேலம் மேற்கு ஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு ஏ.பி.சக்திவேல், ஓமலூர் வெற்றிவேல், சங்ககிரி ராஜா , சேலம் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் இளங்கோழன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.