எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தனை கண்டு கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஸ் - இ - முகமது, லஸ்கர் - இ - தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவர்களை தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ. தயார்படுத்தி இருக்கிறது. அதில், முதல் கட்டமாக ஜெய்ஸ் - இ - முகமது இயக்க பயங்கரவாதிகளை தாக்குதலுக்கு அனுப்பி இருக்கிறது.
இந்த படையில் புதிதாக ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் பஸ்தூன் பழங்குடி பயங்கரவாதிகள் ஆகியோரை சேர்த்துள்ளனர். ஏற்கனவே பயங்கரவாத இயக்கங்களில் இருக்கும் பயங்கரவாதிகளை விட ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் பயங்கரவாதிகள் அதிக பயிற்சி பெற்றவர்கள். பாதுகாப்பு படையினருடன் நேரடியாக கடுமையாக சண்டையிடும் திறன் பெற்றவர்கள். எனவே, அந்த பயங்கரவாதிகளை இப்போது இந்தியாவுக்குள் ஊடுருவ செய்ய முயற்சித்து வருகிறார்கள். அந்த படையை சேர்ந்த 100 பயங்கரவாதிகள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை பகுதி, பகுதியாக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவர்களில் 15 பேர் ஒரு அணியாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய காத்து இருக்கிறார்கள். அவர்கள் தற்போது லீபா பள்ளத்தாக்கில் பதுங்கி உள்ளனர். மேலும் கெரன், பூஞ்ச் பகுதி வழியாக ஊடுருவ செய்வதற்கும் பயங்கரவாதிகள் தயாராக உள்ளனர்.
பொதுவாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்காக காஷ்மீர் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். ஒரு பக்கம் தாக்குதல் நடத்தி இந்திய படைகளின் கவனத்தை திசை திருப்பி விட்டு மற்றொரு பகுதி வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வார்கள். அது போன்ற முயற்சி தற்போது நடந்து வருகிறது. எல்லையில் இதுவரை தாக்குதல் நடக்காத பகுதிகளில் எல்லாம் புதிதாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது. அந்த நேரத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் தந்திரத்தை தெரிந்து வைத்துள்ள இந்திய ராணுவம் உஷாருடன் கண்காணித்து வருகிறது.
காஷ்மீரில் மட்டும் அல்லாமல் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை பயங்கரவாதிகள் மூலம் தகர்ப்பது பாகிஸ்தானின் திட்டமாகும். காஷ்மீருக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் அங்கிருந்து முக்கிய நகரங்களுக்குள் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். அவ்வாறு ஊடுருவியதற்கு பிறகு பெரும் தாக்குதலை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முக்கிய நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை எவ்வாறு ஊடுருவ செய்வது, இந்தியாவில் எங்கெங்கு தாக்குதல் நடத்த வேண்டும் என்பது குறித்து ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாதிகள் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் தம்பி முக்தி ரவூப் அஸ்கார் தான் தற்போது இயக்கத்தை முன்னின்று நடத்தி வருகிறான். அவன் கடந்த 19-ம்தேதியும், 20-ம் தேதியும் பகவல் பூரில் பயங்கரவாதிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளான். அப்போது தாக்குதல் திட்டங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. வகுத்து கொடுத்தது. அதன் அடிப்படையில் தாக்குதல்கள் எப்படி நடைபெற வேண்டும் என்று வியூகங்களை வகுத்துள்ளனர். இப்போது இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ள தாக்குதல் தவிர மேலும் பல தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பது பயங்கரவாதிகளின் திட்டமாகும். இதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிதாக ஆள் எடுக்கும் பணியையும் பயங்கரவாதிகள் செய்து வருகிறார்கள். ஏராளமான இளைஞர்கள் அந்த இயக்கத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்ப இருக்கிறார்கள். பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை துல்லியமாக கண்காணித்து வரும் இந்திய உளவு படைகள் எதிர் நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது. காஷ்மீர் முழுவதும் விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். முக்கிய நகரங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளதால் அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்புகளை செய்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார