எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசி இல்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விக்கிரவாண்டி தொகுதியில் நடந்த பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கடந்த 2 நாட்களாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்து வருகிறார். தனது பிரச்சாரத்தின் போது பேசிய அவர், மாமல்லபுரம் மட்டுமல்ல, தமிழகத்தையே சிங்கப்பூராக மாற்றுவோம் என்று நேற்று முன்தினம் நடந்த பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். நேற்றைய பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,
விழுப்புரம் மாவட்டம் மீது மறைந்த முதல்வர் அம்மா தனி பாசம் வைத்திருந்தார். இந்த மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக ஆக்கினார். இந்த மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்காக 72 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 18 ஆயிரம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி இருந்தது. ஆனால் அப்போது தமிழகத்திற்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறைவு. ஆனால் 2011-ல் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் திரட்டப்பட்டன. அம்மா கொண்டு வந்த திட்டங்களை அப்படியே நிறைவேற்றி வருகிறோம். இன்னும் சொல்லப் போனால் கூடுதலாகவே நிறைவேற்றி வருகிறோம். ஏழை பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மகப்பேறு நிதியுதவி ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளில் அம்மா இருந்த போது பச்சரிசி, வெல்லம் உட்பட பல பொருட்களை கொடுத்தார்கள். ஆனால் இப்போது கூடுதலாக ரூ. ஆயிரமும் கொடுத்திருக்கிறோம். நீங்கள் வாங்கினீர்களா? இல்லையா? என்று கூட்டத்தினரை பார்த்து கேட்டார். அவர்களும் ஆமாம் வாங்கினோம் என்று தெரிவித்தனர். இதை கேட்டு புன்னகைத்தவாறே தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படுவதை சுட்டிக் காட்டினார். தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்புதான் நடந்தது என்று கூறிய அவர், மதுரையில் ஒரு நாளிதழில் நடந்த கொடூர சம்பவத்தையும் அதில் 3 உயிர் பலியானதையும் குறிப்பிட்டார். ஸ்டாலினுக்கு தீராத ஆசை முதல்வர் ஆக வேண்டும் என்பது. ஆனால் அவருக்கு அது எந்த காலத்திலும் சரிப்பட்டு வராது. அவருக்கு அந்த ராசி இல்லை. இந்த இயக்கம் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கம். இதில் ஒரு சாதாரண தொண்டன் கூட முதல்வராக முடியும். கட்சி பதவி வகிக்க முடியும். ஆனால் தி.மு.க. வில் அது முடியாது. இப்போது நடப்பது மக்களாட்சி. இங்கே பா.ம.க. தொண்டர்கள் எழுச்சியுடன் கூடியிருக்கிறார்கள். தி.மு.க.வின் டெபாசிட் காலியாகும் அளவிற்கு நீங்கள் கூடியிருக்கிறீர்கள். அதனால்தான் கூட்டத்தை பார்த்து விட்டு ஸ்டாலின் இடையில் ஓடி விட்டார். வன்னியர்களை நினைத்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்கிறார். இத்தனை நாள் நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்? காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த கட்சிகள் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள். 17 வருடம் கழித்து காவிரி பிரச்சினையில் 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வந்தது. ஆனால் அந்த தீர்ப்புக்கு அரசாணையை கூட அவர்கள் பெற்றுத்தரவில்லை. அம்மா பல சட்டப்போராட்டங்களை நடத்தி அந்த இறுதி தீர்ப்பை கெஜட்டில் வெளியிட்டார். இப்படி தமிழக மக்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்தவர் அம்மா. அவரது வழியில் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே நமது வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.