எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முசிறி மார்ச்.- 28 - தமிழகத்தில் தி.மு.க. மைனாரிட்டி ஆட்சியில் தொடரும் மின்வெட்டால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி கடுமையாக பாதித்துவிட்டது என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். முசிறியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முசிறி புறவழிச்சாலை ரவுண்டானாவில் தனது பிரசாரத்தை ஜெயலலிதா துவக்கினார். அப்போது அவர் கூறியதாவது:- இது சாதாரண தேர்தல் அல்ல. தமிழக மக்களுக்கு நிரந்தர விடுதலை தரவிருக்கும் தேர்தலாகும். குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காக நடக்கும் தேர்தல். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் விலைவாசி உயர வழிவகுத்து பதுக்கலுக்கு பக்கபலமாக இருந்து அரசு நிர்வாகத்தை சீர்குலைய வைத்துள்ள ஆட்சி நடந்துள்ளது. டீசல், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதற்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வருடத்திலேயே 15 முறை விலை உயர்த்தப்பட்டதற்கு கருணாநிதியே காரணமாகும். இவரது ஆட்சியில் விலைவாசி உயர்ந்து மக்கள் கஷ்டப்படுவதுதான் மிச்சமாகும். ரூ. 15-க்கு விற்ற அரிசி 42 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ புளி ரூ35-ல் இருந்து 110 ஆக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ பூண்டு ரூ.32-க்கு விற்றது. அது தற்போது ரூ.250 ஆக உயர்ந்துவிட்டது. தமிழகம் முழுவதும் மணல் கொள்ளகள் அமோக நடந்தது. இதனால் ரூ. 50 ஆயிரம் கோடி வரை தி.மு.க. ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 ஆயிரத்து 500-க்கு விற்ற ஒரு லாரி மணல் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்துவிட்டது. ரூ. 3-க்கு விற்ற செங்கல் ஒன்று ரூ. 6 ஆக உயர்ந்துவிட்டது. எனவே இனி கனவில்தான் வீடு கட்டமுடியும். மாநிலம் முழுவதும் மின்வெட்டு,தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஆரம்பத்ததிற்கு முடிவே இல்லை. இதனால் விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி அடியோடு நசிந்துவிட்டது. தற்சமயம் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியே அல்ல. ஒரு ரவுடிக்கும்பல்தான் தமிழகத்தை ஆட்சி செய்து சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சியால் ரூ. ஒரு லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குதாரராக இருந்த கருணாநிதி, ரூ. ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளார். இந்த பணம் அரசுக்கு கிடைத்திருந்தால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்திருக்கும். காலாவதி மருந்து விற்பனை மணல் கொள்ளை,ரேசன் அரிசி கடத்தல் என ஊழல் ஆட்சி நடத்திவிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் கருணாநிதி. காவல் துறையினரே கவனியுங்கள். நான் மக்களை சந்திக்க வந்திருக்கிறேன். மக்கள் என்னை சந்திக்க வந்துள்ளனர். எத்தனையோ ஊர்களில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறேன். இங்குதான் மக்களை தள்ளிவிடுகிறீர்கள். என்னை பார்க்க வந்த மக்களை சந்திக்க விடாமல் சுவர்போல் மறைத்து நிற்கிறீர்கள். என் மக்கள் என்னை பார்க்க விடுங்கள்.( இவ்வாறு போலீசாரை பார்த்து ஜெயலலிதா கூறினார்) மேலும் ஆந்திர அரசு பாலாற்றில் அணை கட்டுவதை கருணாநிதியால் தடுத்து நிறுத்த முடியவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த ஆட்சியில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். திரைப்படத்துறையிலும் கருணாநிதி குடும்பமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மொத்தத்தில் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் தி.மு.க.விடம் சிக்கி சின்னாப்பின்னப்படுத்தப்பட்டுவிட்டது. தமிழக மக்களின் பொதுவான பிரச்சினைகளை நான் அறிவேன். எம்.ஜி.ஆர். ஆசியாலும் உங்களின் நல்ல ஆதரவினாலும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்த பிறகு முசிறி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண்போம். பாசன வாய்க்கால்கள் தூர்வாறப்படும். காவிரியில் தடுப்பணைகள் கட்டி நீர்பாசனத்திற்கு வழிவகை செய்யப்படும். மேலும் முசிறியில் ஆசிரியர் பயிற்சி பள்ளி அமைத்தது தருவோம். கனரக தொழிற்சாலை அமைக்கப்படும். துறையூர், குளித்தலை, மணச்சநல்லூர், திருவரம்பூர், லால்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை நான் அறிவேன். அப்பிரச்சினைகளை தீர்க்க நான் பாடுபடுவேன். விலைவாசி குறைக்கப்படும். அரசு ஊழியர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும். உங்களின் மனச்சாட்சிப்படி இந்த தேர்தலில் வாக்களியுங்கள். குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி, திருமண திட்டத்தின் கீழ், ரூ. 25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். அதில் 25 சதவீதம் மான்யமாக வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக 3 சென்ட் இடம் வழங்கப்படும். எனவே அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். அ.தி.மு.க. வேட்பாளர்கள் முசிறி தொகுதி சிவபதி, குளித்தலை தொகுதி பாப்பா சுந்தரம், துறையூர் தொகுதி இந்திரா காந்தி, மணச்சநல்லூர் தொகுதி பூனாட்சி, தே.மு.தி.க. வேட்பாளர்கள் திருவெறும்பூர் தொகுதி செந்தில்குமார், லால்குடி தொகுதி செந்துரேஸ்வரர் ஆகியோர்களுக்கு வாக்களித்து பெரும்வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.